ஏன்?
இப்படியே இருக்கலாம்!
சரி, கொஞ்சம் ரெஃப்ரஸ் பண்ணிட்டு வந்துடுறேன். கொஞ்சம் ஸ்வெட்டிங்கா இருந்துதுல்ல.
பரவாயில்லை. இப்படியே இருக்கலாம்!
ஏய், எங்கியும் போகலை. ரெஃப்ரெஸ் ஆயிட்டு வர்றேன். விடு!
ம்கூம்! இங்கியே இரு! இப்டியே இரு!
ஏய், என்னடி ஆச்சு? என்ன வேணும் உனக்கு?!
அவனை இறுக்கியிருந்தவள், அவன் மார்பில் புதைத்திருந்த தலையை மட்டும் உயர்த்தி, அவனைப் பார்த்துச் சொன்னேன்!
நீதான் வேணும்! தர்றியா?!
வெளியிலிருந்து வந்ததால், அவன் கொஞ்சம் வியர்த்து இருந்தான். நானோ குளித்து, முடித்து ஃப்ரெஸ்ஸாக இருந்தேன்.
ஏய்.. சொன்னாக் கேளு. இப்பதான் குளிச்சிட்டு வேற வந்திருக்க! சும்மாவே ஆளை மயக்குவ! இப்ப எல்லா விஷயமும் தெரிஞ்ச பின்னாடி, என் கூட இவ்ளோ நெருக்கமா, இப்படி ஃப்ரெஸ்ஸா இருந்தா, என்னால கண்ட்ரோலே பண்ண முடியாது! ரெஃப்ரஸ் ஆயிட்டு வர்றேன் விடு/
நிமிர்ந்து அவனையேப் பார்த்தேன். பின் சொன்னேன்.
ஏன் கண்ட்ரோல் பண்ற? எடுத்துக்கோ என்னை!
எ… என்னடி சொல்ற?
எனக்கு நீ வேணும்! இப்ப, இந்த நிமிஷம் வேணும்! அப்படியே வேணும்! தர்றியா?
எ… என்னடி சொல்ற?
ம்ம்ம்… என்னை எடுத்துக்கோடா மடையான்னு சொல்றேன்.
ஏ….ஏய் பீரியட்ஸ்டி!
இ… இல்ல பொய் சொன்னேன்!
கோபத்துடன் கேட்டான். ஏன்?
மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு!
எதுக்கு? என் கூட படுத்ததுக்கா?
இப்பொழுது எனக்கு கடும் கோபம் வந்தது. அதே கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தேன். ஆனால் அவனோ சிரித்துக் கொண்டிருந்தான். பட் பட்டென்று அவனது தோள்களில் சில அடிகள் வைத்து விட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன்.
ஏய், இப்ப சொல்றேன் கேட்டுக்கோ! இனி, நானும், இந்த உடம்பும், உனக்கு மட்டுந்தான் சொந்தம். நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்டாலும் சரி, இல்ல கடைசி வரை கல்யாணமே பண்ணிக்காட்டியும் சரி, எனக்குக் கவலையில்லை! புரியுதா? இனி இப்டி பேசுன…