விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் 63

அப்படி இருந்தும் அப்பெண்ணின் கோபம் குறைந்தப்பாடில்லை அந்த பெண்ணின் சாபமே உன் குடும்பத்தில் ஆண்களே இல்லாமல் போனதற்கு காரணம்.

ஆனாலும் உன் மகன்களும் உன் புருஷனும் வாலிப வயதில் இறந்ததற்கு உன் வீட்டில் பெண் பிள்ளைகள் மட்டுமே பிறப்பதற்கும் அவளின் சாபமே காரணம்.

“கோமளா குறிக்கிட்டு” சாமி நீங்கள் சொல்வது போல இருந்தால் எனக்கு பெண் குழந்தைகள் தானே பிறந்திருக்கும்,ஏன் கணவரே பிறந்திருக்கே வாய்ப்பு இல்லையே !

சாமியார் : அம்மாடி இந்த சாபம் அந்த பெண் குடுத்த போது உன் கணவர் பிறந்துவிட்டார். போதுமா ஏன் உன் கணவனுக்கு உடன் பிறந்த தம்பியோ தமக்கையோ இல்லை தெரியுமா.

கோமளா : தெரியாது சாமி, அவர் வீட்டுக்கு ஒரே வாரிசு அது மட்டும் தான் தெரியும்.

சாமியார் : உன் கணவனுக்கு இரண்டு வயது இருக்கும் போது தான் உன் மாமனார் இறந்தார்.ஆதனால் தான் ஒத்த வாரிசாக அவர் இருந்தார்.

பாண்டி மீனாள் : அது இருக்கட்டும் சாமி,அப்ப எப்படி எங்க அத்தை மட்டும் மூன்று ஆண் பிள்ளையை பெற்றார்கள் அந்த பெண் சாபம் இருக்கையில்.

சாமியார் : அது தான் கடவுளின் அருள், அந்தப் பெண்ணின் சாபமும் கூட அது தான்.

சத்யகலா : அப்படி என்னதான் அந்தப் பெண் தப்பு செய்தால் என்று அவளுக்கு தண்டனை கொடுத்தார்கள்.ஏன் அவள் சாபமிட்டால் சொல்லுங்கள் சாமி.

சாமியார் : சொல்லுறேன் தாயி, சொல்லுறேன்”அந்த பெண் பெயர் மோகனாம்பாள் கல்யாணம் ஆன ஆறு மாதத்தில் ஒரு பெறும் மழை‌ அவளின் கிராமத்தில் பெய்தது, அவளின் கணவன் வயலில் மடை மாத்திட்டு வரும் வழியில் மின்னல் தாக்கி உயிரிழந்தான்.

அப்பொழுது அவள் மூன்று மாத கர்ப்பிணி,அவளை ஊரே ஏசியது அவளை, அவன் இவளை திருமணம் செய்ததால் தான் அவன் இறந்தான் இவள் இராசி இல்லாதவள் என்று ஊரே ஒதுக்கியது.

அப்படி இருக்கையில் எதுவுமே இனி வாழ்க்கையில் இல்லை என்று வாழ தொடங்கிய அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மட்டுமே.

ஊரார் ஒதுக்கி வைத்தனர்.ஊருக்குள் வரக்கூடாது என்றும் கூறினார்கள் ஊர் பெரியவர்கள்.சாகவும் முடியாமல் வாழவும் பிடிக்காமல் இருந்தவளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது.

அந்த குழந்தையுடன் அவளின் சிறு விவசாய நிலத்தில் ஒரு குடிசை போட்டு தன் மகனுடன் வாழ்ந்தாள்.அவளின் மகனும் வளர்ந்து பதின் வயதை அடைந்தான்.

அவனும் அவன் தாயும் அவர்களின் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.அப்பொழுது தான் அந்த கிராமத்தில் உள்ள பல நிலங்களை உன் மாமனார் வாங்கினார்.

அவளின் நிலமோ உன் மாமனார் வாங்கிய நிலங்களுக்கு நடுவில் இருந்தது. சுற்றி இருந்தவை எல்லாம் உன் மாமனார் நிலம்.உன் மாமனாருக்கு அவர்கள் நிலத்தையும் வாங்கி விட்டால் முழுவதும் நம்ம நிலமாக ஆகிவிடும் என்று ஆசைப்பட்டார்.அதற்காக அந்த பெண்னை சந்தித்து பேசினார்.

நிலத்தை தன்னிடம் கொடுத்து விடும்படியும் அந்த நிலத்தை நல்ல விலைக்கு வாங்கி கொள்வதாகவும் சொல்ல, அதற்கு அவள் ஒத்துக்கொள்ளவில்லை.

மோகனாம்பாள்”ஐயா இதில் நானும் என் மகனும் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம், ஆதலால் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டால்.தனக்கு பின் தன் மகனுக்கு இருக்கும் ஒரே சொத்து இது தான் அதனால் தான் நான் உங்களுக்கு விற்க முடியாது என்று கூறிவிட்டாள்.

நிலத்தை கொடுக்காத அந்த பெண்ணின் மீது கோபத்தில் இருந்த உன் மாமனார் அவர்களை பற்றி தப்பு தப்பாக ஊரில் அவரது ஆட்களை வைத்து பேச விட்டார்.அப்படி பேசினால் அவர்கள் அவமானத்தில் இந்த ஊரை விட்டு போய்விடுவார்கள் என்று நினைத்தார்.

அவர் நினைத்ததற்கு எதிரான முடிவை அவளும் அவள் மகனும் எடுத்தனர்.அதில் கடுப்பான உன் மாமனார் ஊரில் உள்ள பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து அவளின் மகனை ஒரு நாள் பக்கத்து ஊரில் விவசாய பொருட்களை விற்று விட்டு வரும் போது சில அடியாட்களுடன் சென்று அவனை அடித்து உதைத்து கொன்று தீ வைத்து கொழுத்திவிட்டனர்.

விஷயம் கேள்வி பட்டு,
நியாயம் கேட்ட அந்த பெண்னை ஊர் முன்னால் அவமானப்படுத்தி அவளையும் கொன்று தூக்கிலிட்டார்கள்.தூக்கிலிடம்பொது அவள் விட்ட சாபம் மூன்று தலைமுறைகள் தாண்டியும் உன் குடும்பத்து ஆண் வாரிசை பின் தொடர்ந்து வருகிறது.

மூன்று பெண்களும் சாமியை பார்த்து இதற்கு ஏதும் பரிகாரம் இருக்கா சாமி? அந்த பெண்ணின் சாபம் நீங்குவதற்கு.

சாமியார் : இருக்கும் தாயி, எதற்கும் ஒரு தீர்வு இல்லாமல் இருக்காது, இருக்கும் அதை செய்வதால் அந்த சாபம் நீங்கும் அல்லது அதற்கு நிகரான பரிகாரம் செய்தால் அந்த சாபம் நீங்கும்.

மூவரும் நாங்கள் அந்த பரிகாரத்தை செய்கிறோம் சாமி.

சாமியார் : சரி நீங்கள் அதற்காக காத்திருக்கனும், அந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்றால், சில காலம் காத்திருக்க வேண்டும்.

மூவரும் நாங்கள் காத்திருக்கோம் சாமி, அதுவரை எங்கள் குழந்தைகளுக்கு ஏதும் ஆகாதே சாமி.