விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் 63

அவர்களை எல்லாம் தங்கத்தின் கணவர் தான் தேற்றினார்.பின்னர் அனைவரும் அமர்ந்து சாப்பிட தொடங்கினர்.எல்லோரும் குல தெய்வ கோயிலில் இருந்து புறப்பட தயாராயினர்.கோமளவள்ளி பாட்டியோ எல்லோரும் கிளம்பி ரெடியா இருங்க நானும் சத்யாவும் கோயிலில் உள்ள சாமியாரே பார்த்துட்டு குழந்தைக்கு அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துவிடுகிறோம் என்றால்.

இருவரும் கபிலனை தூக்கிக்கொண்டு கோயிலின் பின்புறம் இருக்கும் சாமியின் குடிலை நோக்கி நடந்தனர்.குடில் நாலு பக்கமும் கம்பும்,கம்பை சுற்றி பனை ஓலை மூலம் கட்டப்பட்டிருந்தது.இருவரும் குடிலில் வந்து குரல் கொடுத்தனர்.சாமியார் குடிலில் இருந்தவாறே யாரு உல்ல வாங்க என்றார்.

சத்யாவும்
கோமளவள்ளி குழந்தை கபிலனுடன் குடிலிலுக்குள் நுழைந்தவுடன் சாமியார் காலில் விழுந்து ஆசிர்வாதம் செய்ய வேண்டினர்.சாமியாரும் இருவரையும் ஆசிர்வதித்து அவர்களை அமரவைத்து கோமளவள்ளியிடம் பேசினார்.

சாமியார்: எப்படி இருக்க மா ? இந்த பக்கம் உன்ன பார்த்து பல வருஷம் ஆச்சு.

கோமளவள்ளி :” இருக்கோம் சாமி ஏதோ “வாழவும் விருப்பம் இல்லாம சாகவும் முடியாம.

சாமியார் : ஏனாம்மா இப்படி சொல்கிறாய். ஆண்டவன் படைப்பில் பிறப்பும் இறப்பும் அவன் தீர்மானம் செய்வது நம் கையில் இல்லையம்மா.

கோமளவள்ளி : போங்க சாமி அந்த ஆண்டவனுக்கு எங்கள் குடும்பத்து மேல என்ன கோபம் தெரியல,சின்ன வயசுலே என் புருஷனை இழந்து நான் விதவை ஆனேன் சரி, அது என் தலையெழுத்து என் விதி என்று வாழ்ந்து என் பசங்க தான் உலகமும் என்று அவர்களை வளர்த்து ஆளாக்கினேன்.இன்று என் இரண்டு மகன்களும் உயிரோடு இல்லை.என்னை போலவே இந்த வீட்டிற்கு வந்த என் இரு மருமகள்களும் சின்ன சிறிய வயதிலேயே புருஷனை இழந்துட்டு இப்படி நிக்கிறாங்க.அப்புறம் எப்படி சாமி வாழ பிடிக்கும்.

சாமியார் : பேசி முடித்துவிட்டாய என்றார்.

கோமளவள்ளி : சாமி என் மனக்குறையை தான் உங்களிடம் சொன்னேன்.

சாமியார் : நீ இங்கே வந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது.

கோமளவள்ளி : கடைசியாக என் கணவர் குழந்தைகள் உடன் வந்தேன் சாமி.

சாமியார் : ஏன் அதன்பின் வரவில்லை.

கோமளா : நான் விதவை ஆன பின்பு எங்குமே செல்லே மனமில்லை அதனால்தான் இங்கேயும் வரவில்லை.

சாமியார் : இது உன் கணவனின் குழ தெய்வ கோயில் தானே.

கோமளா : ஆமாம் சாமி.

சாமியார் : அப்போது ஏன் உன் மகன்களுக்கும் உன் மகளுக்கும் திருமணம் நிச்சயம் செய்தவுடன் ஏன் இங்கு வந்து குழ தெய்வத்தை வழிபட வில்லை.அது ஏன் இங்கு வரவில்லை சொல்லம்மா ஏன் வந்து வழிபடவில்லை.

கோமளா : அது வந்து சாமி…. ஏனோ வர தோனேல சாமி.

சாமியார் : சரி நீ வரலே, கல்யாணம் முடிஞ்ச பிறகாவது உன் மகன்களையும் மருமகள்களையும் இங்கே அனுப்பி வைத்திருக்கலாமே.

கோமளா : நான் சொன்னேன் சாமி என் மகன்களிடம் அவர்கள் வரவில்லை.

சாமியார் : சரி இப்போது ஏன் வந்தாய் சொல்.

கோமளா : சாமி இது என் இரண்டாவது மருமகள் பேரு சத்யகலா இது என் பேரன் கபிலன் இவனுக்கு மொட்டை அடித்து காது குத்த தான் இங்கு வந்தோம்.அது சிறப்பாக முடிந்தது.அப்படியே என் பேரனுக்கு உங்கள் ஆசிர்வாதம் வாங்க தான் இங்கு உங்களிடம் வந்தோம்.

சாமியார் : ஓ ஓ அப்படியா சங்கதி! ஆமாம் உன் மூத்த மகனின் குழந்தைக்கு இது போல் இங்கு வந்து நீ செய்யவில்லை ஏன்?

கோமளா : நான் சொன்னேன் சாமி, ஆனால் அவன் என் பேச்சை கேட்காமல் ஊரிலேயே எங்கள் வீட்டிலேயே நடத்தி விட்டான் சாமி.

சாமியார் : சரி அது உங்கள் விருப்பம்.

என சத்யாவிடம் இருந்து குழந்தையை வாங்கி அவனுக்கு ஒரு முத்தம் தந்து இந்த குடும்பத்தை நீ தான்டா நல்லா பாத்துக்கணும் இவனுக்கு நீண்ட ஆயுளும் நோய் நொடி இல்லா வாழ்வும் வாழ்வான் என்று கூறி.இவன்தான் உங்களின் எல்லா கஷ்டத்தையும் போக்கி உங்கள் அனைவரையும் சந்தோஷமாக பார்த்துப்பான்.