அர்ச்சனாவிற்கு இதை கேட்டதும் எரிச்சலாக வந்தது…. ஏற்கனவே ஒருவனிடம் சல்லாபித்த என்னை கடிந்து கொள்ளாது… இப்போது இன்னொருவனை வேற கூட சேர்க்க சொல்கிறாரே.. என ராஜேஷ் மேலே கோபம் வந்தது..
ஆனாலும் இதை வெளிக்காட்ட இது நேரம் இல்லை.. நாய் வேஷம் போட்டாகி விட்டது.. இனி குரைத்தாக வேண்டும்…
“சரிங்க பார்க்கலாம்.. நான் போய் டின்னர் ரெடி பண்ணறேன்… அப்புறம் பேசறேன்..”
“சரி அர்ச்சு நைட் ப்ரீயா இருந்து கால் பண்ணுடி..”
“சரிங்க பை”..
போனை கட் செய்ததும்.. அவளுக்கு ஆயாசமாக இருட்டி கொண்டு வந்தது. வயிற்றை கிள்ளிய பசி இப்போது மறந்து போக… சோபாவில் அமர்ந்து கண்ணை மூடி கொண்டாள்… டிவியில் ஏதோ நிகழ்ச்சி ஓட.. மனம் அசோக்கை சுத்தி வந்தது….
நேரம் 9 ஐ நெருங்கி கொண்டிருந்தாலும் அசோக்கிடம் இருந்து எந்த ஒரு பதிலோ அழைப்போ இல்லை.. நேரம் செல்ல செல்ல அர்ச்சனாவிற்கு இருப்பு கொள்ளவில்லை… மனம் தாங்காமல் அலைபேசி எடுத்து அவனை அழைத்தாள்…
“அசோக் எங்கே இருக்கீங்க”
“ஆபீஸ்ல இருக்கேன்… ” வீட்டில் இருந்து கொண்டே பொய் சொன்னான்.
“எப்போ வருவே வீட்டுக்கு..”
“இன்னும் டைம் ஆகும்பா.. நீ தூங்கு..”
“அப்போ நீ இன்னைக்கு வரலையா இங்கே”
“இல்லை அர்ச்சு வேலை நிறைய இருக்கு…” மனம் அவளை சுத்தி வந்தாலும் அவள் வார்த்தைகள் அவளை ஏதோ செய்தன…
“இன்னும் சமைக்கலை. நீங்க வரும்போது வாங்கிட்டு வர சொல்லலாம்னு நினைச்சேன்”
அர்ச்சனா மீது கோபம் இருந்தாலும் அது நொடி பொழுதில் காணமல் போனது போல் இருந்தது அசோக்கிற்கு…
“சரி நான் வாங்கிட்டு வரேன் என்ன வேணும் உனக்கு…”
நீதான் வேணும்னு சொல்ல வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கி..
“தோசை இல்லாட்டி சப்பாத்தி வாங்கிட்டு வாங்க போதும்…”