கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 4 13

“ம்ம்ம்” என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் அவள் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அதனாலே”
“இனிமே உன் கழுத்துல தாலியை கட்டிட்டுத்தான் உன்னைத் தொடறதுன்னு, காலைலத்தான் நான் ஒரு தீர்மானம் எடுத்தேன்” அவன் சொல்ல சொல்ல அவள் முகத்திலிருந்த புன்னகை சிரிப்பாக மாறிக்கொண்டிருந்தது.
“அந்த முடிவுக்கு இப்ப என்னா ஆச்சு” அவள் பஜ்ஜியை வைத்து தின்றுக் கொண்டிருந்த காகிதத்தில் தன் கையை துடைத்து எறிந்து விட்டு, அவனை நெருங்கி உட்க்கார்ந்து அவன் தோளில் தன் கையை போட்டுக் கொண்டாள். கையழுத்து மறையும் நேரமாகியிருந்தது.
“அது கால் மணி நேரத்துக்கு முன்னே காத்துல பறந்து போச்சு, அதுக்கு காரணமும் நீதான், எல்லா பொம்பளைங்களும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க, கண்ணுல தண்ணியைக் காட்டி ஆம்பளைங்களை கலங்க அடிக்கறீங்க; அதுக்கு மேல இந்த மனசுக்கு வெக்கமே இல்லடி; இந்த உடம்போ, மனசோ என் பேச்சை எங்க கேக்குது. உன் கண்ணுல தண்ணியைப் பாத்தவுடனே, உன்னை தொட்டுத் தடவி உனக்கு ஆறுதல் சொல்லனும்ன்னு மனசு பேயா பறக்குது. நீ என் கையை தொட்டதும், உன்னை கட்டிக்கணும்ன்னு என் உள்ளம் துடிக்க ஆரம்பிச்சுடுத்து.” அவன் அவள் தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
“செல்வா, வெக்கம் கெட்டாத்தான் சுகத்தை அனுபவிக்க முடியும் போல இருக்கு. நீ என்னைத் தொடவேண்டாம். நீதான் தீர்மானம் பண்ணியிருக்கே; நான் எந்த ரெசொல்யூஷனும் எடுக்கலயே. தெரிஞ்சோ தெரியாமலோ நான் உன்னை தொட்டுட்டேன். நான் உன்னைத் தொடுவேன். நீ என்னைத் தடுக்க முடியாது. உன் கிட்ட நான் சண்டையும் போடுவேன்; சரசமும் பண்ணுவேன்; நான் சாதாரண ஆசாபாசங்கள் இருக்கற பொண்ணா வெக்கம் கெட்டவளாவே இருந்துட்டுப் போறேன்.” சுகன்யா தன் கள்ளக் குரலில் மனம் உருகியவள், தன் இருகைகளாலும் அவன் கழுத்தை வளைத்து அவன் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டாள். செல்வா இதை எதிர்ப்பார்த்தவன் போல் தன் உதடுகளை அவள் முத்தமிட இசைவாக விரித்தான். உதடுகளை விரித்தவன் கைகள் சும்மா இல்லாமல் அவள் இடுப்பை சுற்றி வளைத்தது; விரல்கள் அவளை வருடத் தொடங்க, முத்தமிட்டுக் கொண்டிருந்த சுகன்யாவின் இதழ்களில் அழுத்தமும் சூடும் கூட கூட, அவன் சுவாசம் நீண்டு, மூச்சு வெப்பமாக மாறியது. சூடான அவன் மூச்சு அவள் முகத்தில் பரவ, சுகன்யாவின் விழிகள் செருகிக் கொள்ள ஆரம்பித்தன. செல்வா, இறுக்கமாக பற்றியிருந்த சுகன்யாவின் அதரங்களிலிருந்து தன் உதடுகளை விடுவித்துக் கொண்டவன், தன் வாயைத் துடைத்துக்கொண்டு பின் கண்களில் விஷமம் ததும்ப மெல்லிய குரலில் பாடினான்:
“பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானேன்…”
“என்ன சார், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திருநீலகண்ட நாயனாரா வேஷம் போட்டுக்கிட்டு நான் கையைத் தொட்டா, கையை இழுத்துக்கிட்டு விலகி ஓடினீங்க; இப்ப தொண்டரடிப்பொடி ஆழ்வாரா மாறிட்டீங்க? அப்புறம் மொத்தமா சாமியார் வேஷம் போட்டுக்கிட்டு திரும்பவும் என்னை விட்டு ஓடிட மாட்டீங்களே? அவள் அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டாள்.
“சுகும்மா, ஆழ்வார் கண்ணனுடைய அழகையும், அந்த அழகை தரிசனம் பண்றதனால கிடைக்கிற ஆனந்தம், சுவை மட்டும் தனக்குப் போதும்ன்னார். ஊர்ல காணியோ, உறவோ, எதுவும் தனக்கு வேணாம்ன்னுட்டார். நான் அவ்வள தூரம் ஆசையைத் துறந்தவன் இல்லை. நீ சொன்னா மாதிரி நானும் ஒரு சராசரி இளைஞனாத்தான் இருக்க விரும்பறேன்.

“நீ இப்படியே என்னை கட்டிப்புடிச்சு கிஸ் அடிச்சுக்கிட்டே இரு; உன் உதட்டோட சுவையும் அது தர சுகமும் மட்டும் இப்போதைக்கு எனக்குப் போதும்; வீடு, நிலம், வேற உறவுகள், இந்திரலோகம் அப்படி எதுவும் எனக்கு வேணாம்ன்னு சொல்றேன்.” அவன் குரலில் காம வேட்க்கை இல்லை ஆனால் கண்களில் காதலின் ஒளி மின்னிக்கொண்டிருந்தது. செல்வா அவர்கள் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டான்.

“ஏன் எழுந்துட்டே? இன்னும் கொஞ்ச நேரம் உக்காரலாமே” சுகன்யா அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

Updated: March 21, 2021 — 4:29 am