கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 8

“சீனு … நீ கில்லாடிடா மாப்ளே..”

“அப்புறம் சம்பத்து அவளை திருப்பியும் திருப்பியும் என்னடா பொண்ணு பாக்கறது?”

“நீ சொல்றது சரிதாண்டா மாப்ளே”

“சுகன்யாவை சம்பத் இங்க அங்க பாத்து இருக்கலாம். சம்பத் வீட்டுலேருந்து சுகன்யாவை அவனுக்கு பெண்ணும் கேட்டிருக்கலாம். Even … சுகன்யா லீவுல இப்ப கிராமத்துல இருக்கறதுனால, சம்பத்தும் ஒரு தரம் நேரா சுகன்யாவைப் பாத்து இம்ப்ரஸ் பண்ண முயற்சி பண்ணியிருக்கலாம்.

“மாப்ளே .. நீ இப்ப பாக்கற வேலையை வுட்டுட்டு, ரியலி டிடெக்டிவா போகலாண்டா…”

“குறுக்கப் பேசாதே! காலையில அவன் சுகன்யாவை பாக்கப் போனப்ப, உன் ஆளு அவன் கிட்ட சுமுகமா பழகல.. நீ நடுவுல பூந்து… வெறுத்துப் போய் இருக்கறவன் கிட்ட, நான் சுகன்யாவுக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு; அவளை கட்டிக்கப்போறேன்னு கதை சொன்னா; முறை மாப்பிள்ளை சம்பத்து, உன் கிட்ட முறைச்சுக்கிட்டான். உனக்கு புரியுதா? மொத்தத்துல இவ்வளவுதாண்டா விஷியம்…”

“மாப்ளே .. ரொம்ப தேங்க்ஸ்டா … நான் இப்ப ரொம்ப ரிலீஃப் ஆ ஃபீல் பண்றேண்டா..” செல்வா சீனுவை கட்டிக்கொண்டான்.

“சை … விடுடா என்னை..”

“மாப்ளே .. கோச்சிக்காதடா… இன்னொரு டீ போட்டுத் தரேண்டா…”

“கடைசி வரைக்கும் சம்பத்து சுகன்யாவை லைன்ல கூப்பிடலை இல்லையா?”

“யெஸ்…யெஸ் … யூ ஆர் ரைட்ரா மாப்பிளே”

“சம்பத் உன் கிட்ட பேசினது, சுகன்யாவுக்கு தெரியக்கூடாதுன்னு அவன் நெனைக்கறது சகஜம்டா… அந்த நிமிஷமே அவ லைன்ல வந்திருந்தா … அவனோட கேம் முடிஞ்சுப் போயிருக்கும்… அப்பவே சுகன்யா அவனை நார் நாரா கிழிச்சிடுவா .. அதனால அவன் லைனை கட் பண்ணச் சொல்லி, தனக்கு டயம் கெய்ன் பண்ணிக்கிட்டான்..”

“உண்மைதான் மாப்ளே..”

“இங்க ஒரு விஷயம் மட்டும் ஒதைக்குது நைனா..”

“என்னடா …”

“டேய் என்னடான்னு என்னை கேளுடா நீ …?”

“சொல்லுடா மாப்பிளே … நான் குழம்பி போய் இருக்கவேதானே … என் மாப்பிள்ளயை இங்க கூப்பிட்டேன் .. செல்வா சீனுவின் தோளில் தன் கையைப் போட்டுக் கொண்டான்.

“சுகன்யாவோட அப்பா … அவங்க குடும்பத்தோட இல்லே! ஆனா சம்பத்து
“”சுகன்யாவோட அப்பனும் ஆத்தாளும் அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே?”” ன்னு உன் கிட்ட பொலம்பறான். சுகன்யாவோட அப்பா எப்ப சீன்ல வந்தார்?

“மாப்பிளே … நீ போன பிறவியில ஷெர்லாக் ஹோம்ஸ்ஸா இருந்திருக்கணும்டா …எனக்கு மண்டையில இது உதிக்கவேயில்லடா..”