என் தேவதை – Part 2 114

“காச்சலடிக்குற மாதிரி இருக்குடி” என்றாள் தமிழ்.
“காச்சலடிக்குதா?”
“ஆமா..”
“நல்லாதான இருந்த.. என்ன திடீர்னு?”
“காச்சல்லாம் லெட்டர் போட்டுட்டா வரும்? திடீர்னுதான் வரும்..” என்று கிண்டலாக சிரித்து பின் கூலாக சொன்னாள் “ரெண்டு எடத்துல ரெண்டு விதமான ஐஸ்கிரீம் சாப்பிட்டமில்ல?”
“அப்படி பாத்தா.. அப்ப எனக்கும் காச்சல் வந்துருக்கனுமில்ல?”
“ஏன் வரல உனக்கு? ”
“அதான் தெரியல”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நிருதி பைக்கை எடுத்து வந்து அவர்கள் அருகில் நிறுத்தினான்.
“உக்கார்ங்க”

“அலோ.. ஒரு நிமிசம்” என்றாள் ரூபா.
“என்ன ரூபா?”
“உங்காளுக்கு பீவர் வந்துருச்சு”
“என்னது.. பீவரா?” திடுக்கிட்டு தமிழைப் பார்த்தான். அவள் முகத்தில் வாட்டம் எதுவும் தென்படவில்லை. சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள்.
“ஆமா நீங்களே தொட்டுப் பாருங்க”

நிருதி கை நீட்டி தமிழின் நெற்றியில் தொட்டுப் பார்த்தான். உண்மைதான். தமிழின் நெற்றி சூடாக இருந்தது.

“என்னாச்சு திடீர்னு? ” நிருதி.
“நானும் இதான் கேட்டேன். திடீர்னு வராம காச்சல் என்ன லெட்டர் போட்டுட்டா வரும்னு கேக்கறா” என்றாள் ரூபா.

“என்ன தமிழ் ஆச்சு? ”
“அதை விடுங்கப்பா.. போலாமா?” என்று சிரித்து கொண்டு சாதாரணமாக கேட்டாள் தமிழ்.
“காச்சலு?”
“ஐஸ்கிரீம் சாப்பிட்டேன் இல்ல.. அதான் வந்துருக்கு”
“எனக்கு வரலியே ” என்றாள் ரூபா.
“மூடிட்டு வா.. உனக்கும் வர வேண்டிய நேரத்துல வரும் ” என்று விட்டு நிருதியின் தோளைப் பிடித்து பைக்கில் ஏறி அவன் பின்னால் நெருக்கமாக உட்கார்ந்தாள். அதன்பின் ரூபாவும் உட்கார்ந்தாள்.

“இப்ப எங்க போலாம்?” நிருதி கேட்டான்.
“எங்க வேணா போலாம்” தமிழ்.
“ஹாஸ்பிடல் போங்க.. இவளுக்கு ஒரு இன்செக்ஸன் போட்றுரலாம்” ரூபா.
“அதெல்லாம் வேண்டாம். மொத இவளை கொண்டு போய் இவ வீட்ல தள்ளிரலாம்”
“ஏய் ஏன்டி?”
“செம டிஸ்டர்பன்ஸ் உன்னால..”
“அடிப்பாவி..”
“பின்ன வாய மூடிட்டு இருக்கியா.. தொனதொனனு நீதான் சும்மா பேசிட்டே இருக்கே..”
“ம்ம்.. ஏன்டி சொல்ல மாட்ட.. ஓகே நிரு ப்ரோ.. என்னை கொண்டு போய் என் வீட்ல விட்டுட்டு இவளை எங்காச்சும் தள்ளிட்டு போங்க.. பார்க் பீச்னு..”

நிருதி சிரித்தபடி பைக்கை நகர்த்தினான்.
“மொதல்ல ஏதாவது ஒரு ரெஸ்டாரண்ட் போயி லஞ்ச் சாப்பிடலாம். அப்பறம் வெச்சுக்குங்க உங்க சண்டைய..”

ரெஸ்டாரண்டில் நிருதியின் பக்கத்தில் மிகவும் நெருக்கமாக அவனை ஒட்டி உட்கார்ந்தாள் தமிழ். அவளின் தோளை விட்டு சரிந்த துப்பட்டா அவன் கையை தழுவிப் போய் அவன் மடியில் விழுந்து தவழ்ந்தது. அவர்கள் இருவருக்கும் எதிராக ரூபா உட்கார்ந்து கொண்டாள்.

“என்ன ஆர்டர் பண்றீங்களோ பண்ணிக்கோங்க” என்றான் பொதுவாக.
“என்னடி சொல்லலாம்?” தமிழ் ரூபாவைப் பார்த்து கேட்டாள்.
“இன்னிக்கு உனக்குத்தான் ட்ரீட்.. உனக்கு புடிச்சதை சொல்லு”
“பரவால சொல்லுடி..”

சிறிது நேரம் யோசித்து பின் ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள். சாப்பிடும் போது நிருதியின் ஒரு தொடையும் தமிழின் ஒரு தொடையும் ஒன்றையொன்று நன்றாக அழுத்திக் கொண்டிருந்தது. அவ்வப்போது அவளின் காலை தன் காலால் உரசி அவளை தீண்டிக் கொண்டிருந்தான்.