என்ன பண்றது என் காதலனச்சே!! 4 230

சௌமியா பேசாமல் அமைதியாக இருக்க.. மலர் தொடர்ந்தாள்.. “நான் அன்னைக்கு போட்ருந்த உங்க ப்ளவுஸ் இன்னைக்கு குப்பை தொட்டில பாத்தேன் க்கா.. அது நான் போட்ருந்தேன் ன்னு தான ப்ளவுஸ் அழகா இருந்தும் குப்பை தொட்டில போட்ருக்கீங்க.. என்மேல அவ்ளோ வெறுப்பா க்கா”

சௌமியா: அது அது.. இல்ல அது கிழிஞ்சுருச்சு அதான் போட்டேன்..

மலர்: பொய் சொல்லாதீங்க க்கா.. எனக்கு தெரியும்.. நான் ஒன்னும் அந்த அளவு ஏமாளி இல்ல க்கா.. என்மேல ஏன் கோவமா இருக்கீங்க ன்னு சொல்லுங்க க்கா..

சௌமியா வெடுக்கென சிரித்தாள்.. “யாரு நீயா ஏமாளி.. நான் இந்த வீட்டுலயே பெரிய ஏமாளி.. நான் எதுக்கு கோவமா இருக்கேன் ன்னு உனக்கே தெரியும்”

மலர்: உங்க மனசுல என்ன இருக்குன்னு நானே அஸ்ஸம்ப்சன் பண்ண விரும்பல க்கா.. நீங்களே மனச தொறந்து சொல்லிடுங்க.. அது மனசுக்குள்ள இருக்குற வரைக்கும் உங்களுக்கு என்மேல கோவம் போகாது..

சௌமியா: (நக்கலாக சிரித்து விட்டு) உன் புருஷனை உன் முன்னாலேயே ஒருத்தி வந்து திருடுவா.. அதை கண்ணால பாத்தும் உன்னால ஒன்னும் பண்ண முடியாம இருப்ப.. அப்போ புரியும் உனக்கு நான் எதுக்கு கோவப்படுறேன் ன்னு..

கண்களை சுருக்கி சௌமியாவை பார்த்த மலர் “அப்போ அக்கா நான் ஒன்னும் உங்க மேல கோவப்படலையே க்கா.. உங்களை ஒரு வார்த்தை கூட எதுவும் கேக்கல.. ஆனா நீங்க மட்டும் ஏன் கோவப்படறீங்க” என்றாள்..

சௌமியாவுக்கு பக்கென்றது..

சௌமியா பதட்டம் குறையாமல் மலரிடம் “ஏய் என்ன.. என்ன சொல்ற.. நீ எதுக்கு என்மேல கோவப்படனும்” என்றாள்..

சௌமியா வின் கேள்விக்கு பதில் கூறி அவளை சங்கட படுத்த வேண்டாம் என விரும்பிய மலர், எதுவும் பேசாமல் அமைதியாக சௌமியா வை பார்த்துக் கொண்டிருந்தாள்..

2 Comments

  1. Punda mathire iruku story

  2. Pls continue this story. Egarly waiting for next part

Comments are closed.