என்ன பண்றது என் காதலனச்சே!! 4 226

சௌமியாவுக்கும் அது தேவையானதாக இருந்தது.. உண்மை வெளிப்பட்ட பின்னர் சௌமியாவால் மலரை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை..

சௌமியாவின் தலையை தன் தோளில் மென்மையாக சாய்த்தவள் “அக்கா சாரி க்கா.. உங்களை கஷ்ட படுத்தனும் ன்னு நான் எதுவும் சொல்லல க்கா.. ப்ளீஸ் க்கா என்னை மன்னிச்சுருங்க க்கா.. எனக்கு கோவம் லாம் எதுவும் இல்லக்கா” என்றாள்..

தான் இவ்வளவு திட்டியும் விரட்டியும் ஏன் இவள் என் பாசம் வேண்டுகிறாள், என்னிடம் மன்னிப்பு வேண்டுகிறாள்.. இவளை மன்னிக்கும் அளவுக்கு எனக்கு அருகதை எனக்கு இருக்கிறதா.. என்னவனை கண்டிக்க முடியாமல் இவள் மேல் கோவம் காட்டிறேனே.. அவளுக்கு சொந்தமானவனை நான் முழுதாய் எடுத்துக் கொண்டு விட்டு அவளை திட்டவும் செய்கிறேனே.. என்று சௌமியா வின் மனம் பல கசப்பான உண்மைகளை கொஞ்சம் கொஞ்சமாய் உள்வாங்கி கொண்டிருந்தது..

“உன்னை ஒழுக்கம் கெட்டவள் என்று திட்டினேனே.. அந்த ஒழுக்கத்தில் உனக்கும் கீழாக நான் தாழ்ந்து விட்டேனே.. நாலு சுவருக்குள் நடந்ததால் நான் நல்லவளாய் மாறி விடுவேனா” என்ற ஆணித்தரமான உண்மை அவள் ஆழ்மனதில் இருந்து வெளிப்பட்டு அவள் உணரும் போது.. அவளையும் அறியாமல் கண்கள் கண்ணீரை வாரி இறைத்து மலரின் தோளை நனைத்தது..

சௌமியாவின் கண்ணீரை தோள்களில் உணர்ந்த மலர் “அக்கா அழுறீங்களா!! ஏன் க்கா அழுறீங்க.. அழாதீங்க க்கா.. ப்ளீஸ் க்கா.. என்மேல தான் க்கா எல்லா தப்பும்.. நீங்க ஏன் அழுகுறீங்க” என்றாள்.. ஏற்கனவே பாதி அழுத முகத்துடன் இருந்த மலர் இப்பொழுது அழுதாள் முழுமையாக..

உண்மைகளையும் உணர்வுகளையும் தங்களுக்குள் மறைத்து அடக்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் இப்பொழுது மறைக்க எதுவுமின்றி ஒருவரையொருவர் கட்டி அணைத்து ஒருவர் தோளை மற்றொருவர் கண்ணீரால் நனைத்தனர்..

“நீ தான்.. நீ தான் டி.. உன்னால தான் எல்லாம்.. நான் இவ்ளோ நாள் ஒழுங்கா தான் இருந்தேன்” என்று சௌமியா கதறி அழுது கொண்டே கட்டிபிடித்தபடி மலரின் முதுகில் அடித்தாள்..

சௌமியா அடிக்க அடிக்க மலர் அதை இன்பமாய் வாங்கி கொண்டு அவளை மேலும் இறுக அணைத்து “அக்கா உங்களுக்கு என்ன க்கா.. இப்போவும் நீங்க நல்லவங்க தான் க்கா.. அழாதீங்க க்கா” என்றாள்..

2 Comments

  1. Punda mathire iruku story

  2. Pls continue this story. Egarly waiting for next part

Comments are closed.