என்ன பண்றது என் காதலனச்சே!! 4 230

சௌமியா: சரி சரி விடு.. ரொம்ப இடம் கொடுத்துட்ட..

மலர்: அப்போ அத்தை ஏன் க்கா எதுவும் சொல்லல..

சௌமியா: அது தான் டி எனக்கும் தெரியல.. ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறாங்க.. அவங்க மனசுல என்ன ஓடுது ன்னே புரிஞ்சுக்க முடியல..

மலர்: (சின்ன அழுகையுடன்) போங்க நீங்க எல்லாரும் என்னை மோசம் பண்ணிட்டிங்க..

சௌமியா மெதுவாக இரண்டடி நடந்து மலரை மென்மையாக கட்டி அணைத்து ஆதரவாக அவள் பின் தலையை தடவிக் கொடுத்தாள்.. மலரும் கட்டி அணைத்துக் கொண்டாள்..

சௌமியா சற்று விலகி மலரின் முகத்தை தாங்கி பிடிப்பது போல் அவள் இரு கன்னங்களையும் இரு கைகளால் பிடித்து அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் காய்ந்து போயிருந்த தடத்தை கட்டை விரலால் துடைத்தாள்.. “நீ ரொம்ப பாவம் டி.. அப்பிராணி பொண்ணு.. என்னை மன்னிச்சுரு.. நான் உன்னை ரொம்ப திட்டிட்டேன்.. உன்கிட்ட இருந்து இந்த வீட்டை காப்பாத்தணும்ன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.. ஆனா இந்த வீட்டு ஆளுங்க கிட்ட இருந்து தான் உன்னை காப்பாத்தணும் டி.. இனிமேல் நான் இருக்கேன் உனக்கு.. அவங்க எப்படி உன்னை தொடறாங்க பாப்போம்”

மலர் ஒரு பொம்மை போல “சரிக்கா” என்று சௌமியா வின் தோளில் சாய்ந்து கொண்டாள்..

சௌமியா: சரி டி போனதெல்லாம் போகட்டும், இனிமேல் அவங்க உன்னை தொட வந்தாலே விரலை உடைச்சு விட்டுரு..

மலர்: அக்கா இது தான் க்கா நீங்க எல்லாரும் பண்ற தப்பு.. தொடுற அவங்களை எதுவும் சொல்ல மாட்டீங்க.. ஆனா என்னை தான் குறை சொல்றீங்க. அவனும் அப்படி தான் என்னை அன்னைக்கு வீட்டுல கொண்டு போய் விட்டான்.. நீங்களும் கொஞ்ச நேரம் முன்னாடி அப்படிதான் திட்றீங்க… அதுவும் இல்லாம இது வரைக்கும் நான் சும்மா இருந்துட்டு இனிமேல் தொட கூடாது ன்னு சொன்னா அவங்க கோவப்பட்டு என்னை வேணாம் ன்னு சொல்லுவாங்க.. நான் மாட்டேன் போங்க க்கா..

“அவங்களை எதுவும் சொல்லாம என்னை மட்டும் சொல்றீங்க” என்ற மலர் வார்த்தைகளில் இருந்த உண்மை சௌமியா வின் வாயை அடைத்தது..

மலரின் கன்னத்தில் மென்மையாக முத்தம் இட்டு.. “சரி டி.. இனி நான் பாத்துக்குறேன்” என்றாள்..

“என்னது இது நான் பாக்குறது கனவா? இல்ல நனவா?” என்று நெஞ்சை பிடித்தபடி சுவரோரத்தில் சாய்ந்தபடி கிஷோர் நின்றிருந்தான்..

2 Comments

  1. Punda mathire iruku story

  2. Pls continue this story. Egarly waiting for next part

Comments are closed.