என்ன பண்றது என் காதலனச்சே!! 4 226

ஆனால் மலரோ ஒரு இன்ச் அசையாமல் அப்படியே நின்று கலங்கிய குரலுடன் “கிஷோர் நீ உள்ள போயேன் நான் அவங்க கூட பேசணும்” என்றாள்..

சௌமியா இருந்த கோவத்தில் அவளிடம் இவளை விட்டால் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற உண்மை அறிந்த கிஷோர் அங்கிருந்து செல்ல விரும்பாமல் “மலர் நான் இருக்கேன்.. நீ சும்மா பேசு” என்றான்..

மேலும் கலங்கிய தழுதழுத்த குரலுடன் “ப்ளீஸ் போயேன் கிஷோர்” என்று கண்களில் வழிந்த துளிகளை கையால் துடைத்தாள்.. செல்ல மனமில்லாமல் மலரின் சொல்லை மறுக்கவும் முடியாமல் மனதில் ஒரு தவிப்புடன் கிஷோர் அங்கிருந்து சென்றான்..

அக்கா

மலரின் அந்த குரல் சௌமியாவின் கோவத்தை கொஞ்சம் கரைத்தாலும் திரும்பாமல் அப்படியே நின்றாள்..

கண்களில் வழிந்த கண்ணீர் துளியை துடைத்த கையால் சௌமியாவின் கையை பிடித்து “அக்கா” என்றாள்..

மலரின் கைகளில் இருந்த கண்ணீர் துளி சௌமியாவின் கையையும் நனைத்து அவள் மனதையும் நனைக்க, அவள் மனதில் இருந்த கோபம் தற்காலிகமாக விலகிச் சென்றது.. சௌமியா திரும்பி மலரை பார்த்து “இப்போ நான் என்ன சொல்லிட்டேன் இப்படி அழுற”.

கண்களை துடைத்துக் கொண்டே “இல்ல க்கா நான் அழல.. காத்துல தூசி வந்து கண்ணுல பட்ருச்சு.. அதான் உறுத்துது”

சௌமியா: நீ பண்ற விஷயத்துக்கும் எனக்கிருக்கிற கோவத்துக்கும் இப்போ நான் சொன்னதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. ஆனா நீ இதுக்கே இப்படி அழகுற..

மலர்: நான் என்னக்கா பண்ணேன் உங்களுக்கு கோவம் வர்ற மாதிரி.. மாமா அத்தை அத்தான் எல்லாரும் என்மேல பாசமா இருக்காங்க.. நீங்க மட்டும் தான் என்கூட முகம் கொடுத்து பேச மாட்ரீங்க.. அதான் உங்க கூட பேசலாம் ன்னு வந்தேன்.. ஆனா அதுக்கும் என்னை திட்றீங்க.. நான் என்ன பண்ணா உங்களுக்கு பிடிக்கும் ன்னு சொல்லுங்க க்கா.. நான் அதையே பண்றேன்..

“நீ எங்க குடும்பத்தை விட்டு வெளியே போனாலே போதும்” என்று தன் மனதில் எழுந்த வார்த்தைகளை அடக்கி விட்டு “எனக்கு பிடிச்ச மாதிரி பண்ணனும் ன்னு நீ எதுக்கு மா நினைக்கிற.. உனக்கு பிடிச்ச மாதிரியே இருந்துக்கோ.. அதான் எல்லாரும் பாசம் காட்டுறாங்கல்ல.. அப்புறம் நான் பாசம் காட்டுனா என்ன? காட்டலைனா என்ன? நீ உன் இஷ்ட படியே இரு” என்றாள் சௌமியா..

மலர்: அப்படி இல்லக்கா!! எனக்கு சின்ன வயசுல இருந்தே எல்லாம் கிடைச்சிருக்கு க்கா.. எனக்கு ஏதாச்சும் கிடைக்கல ன்னா என்னால தாங்க முடியாது க்கா.. அதுனால எனக்கு எல்லாரோட பாசமும் வேணும் க்கா.. உங்களோட பாசமும் வேணும்.. நீங்க இப்படி என்கூட இருந்தா.. என்னால சத்தியமா நிம்மதியா இருக்க முடியாது க்கா..

2 Comments

  1. Punda mathire iruku story

  2. Pls continue this story. Egarly waiting for next part

Comments are closed.