சௌமியா: ஏய் எப்போ டா வந்த இங்க..
கிஷோர்: நீங்க என் ஆளுக்கு முத்தம் கொடுத்து கரெக்ட் பண்ண ட்ரை பண்ணும் போது வந்தேன்..
சௌமியா: மூடு.. வந்துட்டான் பெரிய இவன் மாதிரி.. டேய் நீ மலரை அவ வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வா டா..
கிஷோர்: ஏன் அண்ணி அதுக்குள்ள கூட்டி போக சொல்றீங்க.. அப்பா வேற பைக் எடுத்துட்டு போயிருக்காரு.. அவர் வரட்டும் வந்ததும் கூட்டி போறேன்..
சௌமியா: முதல்ல அவர் வர்றதுக்குள்ள இவள கூட்டி போ டா.. அதுதான் நல்லது.. ஆட்டோ எதுலயாச்சும் கூட்டி போ..
கிஷோர்: இவ ஏரியா வரைக்கும் ஆட்டோ ல போன ஐந்நூறு ரூபா புடிங்கிருவான்.. நான் ஷேர் ஆட்டோ ல கூட்டி போறேன்..
சௌமியா: ம்ம்ம் துரைக்கு தனியா போறதை விட ஷேர் பண்ணி போறது தான் ரொம்ப பிடிக்குமோ.. எதோ ஒன்னு சீக்கிரம் போ டா..
சௌமியாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்த மலர் “அக்கா நான் கிளம்புறேன்.. உங்க கூட இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கு.. நீங்க கிஷோரை கூட்டிட்டு என் வீட்டுக்கு வாங்க க்கா”
எலியும் பூனையாய் இருந்த மலரும் சௌமியாவும் பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.. மலரும் கிஷோரும் வீட்டில் இருந்து நடந்து பிரதான சாலைக்கு வந்து ஷேர் ஆட்டோவிற்கு காத்துக் கொண்டிருக்க.. காலியாக வந்த ஷேர் வந்த ஆட்டோக்களை எல்லாம் தவிர்த்து விட்டு, ஒரு பயணி மட்டுமே இருந்த ஷேர் ஆட்டோவில் மலரை ஏற்றி விட்டு அவள் பின் கிஷோர் ஏறினான்..
எரிய பின்பு தான் ஆட்டோவில் ஏற்கனவே இருந்த பயணியை இருவரும் கவனித்தனர்.. கருத்த இறுகிய உடலுமாய் இஸ்திரி போட்ட விறைப்பான அரை கைச்சட்டை மற்றும் காட்டன் கால்ச்சட்டையுடன் இருந்த அந்த மனிதனை “ஹ்ம்ம்.. மிலிட்டரி ல இருந்து லீவ் க்கு வந்துருப்பாரு போல” என்று கிஷோர் ஊகித்து கொண்டான்..
Punda mathire iruku story
Pls continue this story. Egarly waiting for next part