இந்த வீட்டின் உரிமையாளர் 4 71

சரி முதுகை கட்டிலின் ஓரத்திற்கு மாற்றி படுத்தேன். என் பக்கம் திரும்பி தான் விக்ரம் படுத்திருந்தான் பக்க வாட்டில் படுத்திருந்தாலும் கால்களை என்னை போல மடக்கி வைக்காமல் நேராக வைத்து இருந்தான் என்னால் ஒரே வாட்டில் ரொம்ப நேரம் படுக்க முடியாது எப்போதுமே திரும்பி கொண்டே இருப்பேன் நேராக படுக்க திரும்பிய போது இருட்டில் இடைவெளி சரியாக தெரியாமல் விக்ரம் பக்கம் சென்று விட்டேன். போர்வையும் விலகி இருந்ததால் என் இடுப்பில் விக்ரம் கைகள் படுவது போல உணர்ந்தேன். ஆனால் அவன் எந்த வித ரியாக்ஷனும் காட்டாததால் மீண்டும் என்னுடைய கற்பனை என்றே எடுத்து கொண்டேன்.

பயண களைப்பில் தூங்கியும் போனேன். காலையில் என் முழங்கையில் சூடாக ஒரு உணர்வு ஏற்ப்பட கண் திறந்து பார்த்தால் விக்ரம் ஒரு கண்ணாடி கிளாசில் பால் கவித்து கொண்டு இருந்தான். திரும்பி பார்த்தால் ரோஷன் இல்லை. அவசரமாக எழுந்து உட்கார்ந்து விக்ரம் ரோஷன் எங்கே போனார் என்று கேட்க விக்ரம் வந்து விடுவான் ஏதோ போன் வந்தது அவசரம் மத்தியானத்திற்குள் வந்து விடுவதாக கிளம்பி போனான். சரி நீங்க முதலில் இதை குடித்து விட்டு குளிச்சுட்டு வாங்க என்றான். பசி வேறு இருந்ததால் விக்ரம் குடுத்த பாலை வாங்கி குடித்து விட்டு குளிக்க என்றேன். குளித்து விட்டு வேறு மாற்று உடை இல்லாததால் அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தேன். நான் அதே உடையில் இருப்பதை பார்த்து விக்ரம் என்ன நித்தியா தண்ணி சூடாகதானே இருந்தது ஏன் குளிக்கவில்லை என்று கேட்க நான் கொஞ்சம் சங்கோஜத்துடன் குளித்து விட்டதையும் மாற்று உடை இல்லாததால் அதையே போட்டு கொண்டேன் என்றேன். விக்ரம் நான் குளித்து வருவதற்குள் பிரட் நடுவே ஆம்லெட் வைத்து ஒன்று எனக்கும் ஒன்று அவனுக்கும் ரெடி செய்து வைத்து இருந்தான். நான் மாற்று உடை இல்லை என்று சொன்னதும் அவன் சாப்பிடாமல் நீங்க சாப்பிடுங்க நித்தியா நான் வெளியே சென்று எதாவது கடை திறந்து இருந்தால் மாற்று உடை வாங்கி வருகிறேன் உங்களால் எப்படி ஒரே உடையை ரெண்டு நாட்கள் அணிய முடியும் அதுவும் அதே துணியில் தூங்கியும் இருக்கறீர்கள் என்று சொல்லி கொண்டே வெளிய கிளம்ப நான் விக்ரம் பரவாயில்லை முதலில் நீங்களும் சாப்பிடுங்கள் பிறகு ரெண்டு பெரும் சேர்ந்தே சென்று வாங்கலாம் என்றேன். பாதி மனசோடு சாப்பிட சம்மதிக்க சாப்பிடும் போது நித்தியா சில விஷயங்கள் கேட்டா கோபித்து கொள்ள மாட்டீங்களே என்று நிறுத்த நான் கேளுங்க என்று சொன்னதும் உங்க கணவர் பற்றி கேட்க மாட்டேன் கேட்கும் உரிமையும் எனக்கு இல்லை என்னதான் கணவர் குடிகார் என்றாலும் எதற்காக தேர்ந்தெடுத்த ஒரு பொறுக்கி அதும் பெண்களை கவர எதையும் செய்ய கூடிய ரோஷனுடன் ஏன் வந்தீர்கள் உங்களை களங்க படுத்தி விட்டானா என்று கேட்க பிடிக்கவில்லை. ஆனால் நீங்க நேற்று மாறி படுத்ததில் இருந்தே அவன் சேஷ்டைகளை ஆரம்பித்து விட்டான் என்று தெரிந்தது.