இந்த வீட்டின் உரிமையாளர் 4 71

ஒரு அறையின் முன்னே நின்ற நர்ஸ் கதவின் மேல் பகுதியில் இருந்த ஒரு சிறிய ஜன்னலை திறந்து விட ரோஷன் முதலில் பார்த்தான் பிறகு என்னை பார்த்து நித்து நீ பார்த்தா வருத்தப்படுவே என்று சொல்ல நான் இல்லை பரவாயில்லை என்று அவனை தள்ளி விட்டு அந்த ஜன்னல் வழியே பார்த்தேன். ஒரு மரக்கட்டிலில் இடுப்பில் ஒரு சிறு துணி மட்டுமே இருக்க மூன்று நாட்களுக்கு முன் பார்த்ததற்கு இப்போ பாதியை இளைத்து ஷேவ் செய்யப்படாத முகம் நவீனை அப்படி பார்த்ததும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று அவரிடம் பேச வேண்டும் என்று தான் தோன்றியது. ஜன்னல் வழியே நவீன் என்று கூப்பிட்டு பார்த்தேன். அவர் பதில் சொல்லவில்லை ஏன் கூப்பிட்டது கூட அவருக்கு கேட்டதா என்று தெரியவில்லை. நவீனின் நிலைமையை பார்த்து கொண்டே நிண்டிருந்த என் கண்களில் நீர் வழிய அதை துடைக்க கூட மனம் இல்லாமல் பார்த்து கொண்டிருந்தேன். பக்கத்தில் நின்று கொண்டிருந்த நர்ஸ் மேடம் உங்க பெயர் என்ன என்றாள் நான் நித்தியா என்று சொல்ல அவள் இந்த பெயர் தான் மேடம் நவீன் சார் நினைவோடு இருக்கும் போதெல்லாம் சொல்லுகிற ஒரு வார்த்தை நீங்க அவருக்கு என்ன உறவு என்று கேட்க எனக்கு நெஞ்சில் ஆயிரம் ஊசிகள் ஒரே சமயத்தில் குத்துவது போன்று இருந்தது அந்த கேள்வி பதில் சொல்லாமல் இருக்க அவளே உங்க அண்ணனா நவீன் சார் என்று மறுபடியும் கேட்க எனக்கு ஒரு வேளை ரோஷன் நவீன் மணமானவர் என்பதை பதியவில்லையோ என்று தோன்றியது. இப்போ நான் அவர் மனைவி என்று சொல்லி அதனால் எதாவது சங்கடங்கள் வந்து விடுமோ ரோஷனிடம் பேசாமல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்து பதில் சொல்லாமல் கண்களை மட்டும் துடைத்து கொண்டு நர்ஸிடம் சிஸ்டர் அவரை நல்ல படியா கவனித்து கொள்ளுங்க சீக்கிரம் குணம் அடைய எல்லா உதவியும் செய்யுங்க என்று பேசி கொண்டிருக்கும் போதே ரோஷன் என் தோளில் கை வைத்து நித்து டாக்டர் கிட்டே பேசலாமா என்றான். என் தோள் மீது அவன் கை உரிமையுடன் இருப்பதை பார்த்த நர்ஸ் கண்டிப்பா நான் ரோஷனின் மனைவி என்றே முடிவு செய்து இருப்பாள்.

நவீனை பார்த்த பிறகு என் கவலை எல்லாம் அவரை பற்றியே இருந்தது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் ரோஷன் என்ன செய்கிறான் என்பதெல்லாம் யோசிக்க கூட இல்லை. ரோஷன் சரி வா நித்து டாக்டரை பார்த்து பேசலாம்னு கூப்பிட கடைசியாக ஒரு முறை அந்த சிறு ஜன்னல் வழியாக நவீனை பார்த்து விட்டு ரோஷனை பின் தொடர்ந்தேன். மீண்டும் கொஞ்ச தூரம் சில கதவுகள் கடந்து ஒரு அறைக்குள் ரோஷன் நுழைய நானும் சென்றேன். டாக்டர் கம்ப்யுட்டரில் ஏதோ செய்து கொண்டிருந்தார். ரோஷன் வணக்கம் சொல்ல நானும் டாக்டருக்கு வணக்கம் சொல்ல அவர் தலையை நிமிர்த்தி பார்த்து ஹலோ வாங்க ரோஷன் நான் உங்களை ரெண்டு நாள் கழித்து தானே வர சொன்னேன்.