“வித்யா ஓடி வந்து என்னை கட்டி அனைத்து கொண்டாள்”
“சாரி நான் பாட்டுக்கு ஒழுங்கா உங்க கூட இருந்து இருந்தா உங்களுக்கு இந்த நிலைமையே வந்து இருக்காது”
“நானும் சாரி சொல்லிக்கிறேன் வித்யா. உன்னை கண்டுக்காம விட்டதால் தானே அப்படி பண்ணின”
சங்கருக்கு போலீசார் விலங்கு மாட்டி கொண்டு இருந்தனர்.
“காலையிலே கூட அவன் வித்யா போன என்ன அடுத்து ஒரு நித்யாவோ இல்லை நிவேதாவோ இருக்க மாட்டாளா அப்படின்னு திமிரா பேசிட்டு இருந்தான். இப்போ பாரு ஆயுசு முழுக்க கம்பி தான்”
வித்யாவின் முகமே இறுக்கமானது.
“என்னாச்சு வித்யா”
“ஹேய் பாலன்” என்று தோளை தட்டினான் சர்மா.
“போலீஸ்கிட்ட உன்னை பார்க்க எவளோ தடவை ரிக்வஸ்ட் பண்ணினேன் பாலா. வைப் அப்புறம் லாயர் மட்டும் தான் அல்லோவ் பண்ணுவேன்னு விடவே இல்லை”
“ஒரு நிமிசம்டா” என்று சொல்லிவிட்டு வித்யா பின்னாடி சென்றேன். வேக வேகமாக சங்கரை நோக்கி சென்ற அவள் “உனக்கு நித்யாவும் கிடையாது, நிவேதாவும் கிடையாதுடா பாஸ்டர்ட்” என்று சொல்லிவிட்டு அவன் காலிடுக்கில் ஒரு உதை விட்டு தன்னுடைய இடுப்பில் சொருகி வைத்து இருந்த பிஸ்டலை எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்தாள்.
“வித்யா ஸ்டாப், நோ” நான் கத்திகொண்டே ஓடினேன்.
“டுமீல்” என்ற சத்தம் எங்கும் பரவியது.
சங்கர் சுருண்டு விழுந்தான்.
அந்த இடம் முழுக்க ரத்தம் சிந்தி கிடக்க சங்கர் இறந்து கிடந்தான். என் மனைவி வித்யா துப்பாக்கியை கீழே போட்டு அங்கேயே நின்று அழுது கொண்டு இருந்தாள்.
