தீரா தாகம் – Part 2 162

ச்ச ஒரு நான் வெஜ் இல்லையா ?

ம்! நீ வா செஞ்சு தரேன் …

நீ உம் சொல்லு இப்பவே வரேன் ….

உம் !

கொஞ்ச நேரம் பதிலே இல்லை … காலிங் பெல் சத்தம்தான் கேட்டது …

போயி பார்த்தா முகமெல்லாம் சிரிப்பா நின்னுகிட்ருந்தான் ….

என்ன சார் ?

எதோ நான் வெஜ் அது இதுன்னு சொன்னாங்க அதான் கேட்டு வாங்கி சாப்பிட்டு
போலாம்னு வந்தோம் ….

அப்டியா ஓகே அப்டியே கடைக்கு போயி ரெண்டு பிரியாணி வாங்கிட்டு வாங்க நான்
காசுக்குடுத்துட்ரேன் …

அதுக்கு சும்மா இருக்கலாம் ….

சரி சரி வா உள்ள …

இல்ல ரம்மி நான் போயி சாப்பிட்டு தூங்குறேன் …

சரி ஓகே பாய் ….

அவனும் கிளம்ப சாப்பிட்டு தூங்க இப்டியே அந்த வாரமும் போனது ….

வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்த ஷாம் எங்களிடம் …

ராகவன் சார் ஒரு சின்ன மேட்டர் அதான் உங்ககிட்ட சொல்லணும் …

என்ன ஷாம் …?

ஒண்ணுமில்லை அம்மாகிட்ட திருப்பதி போறேன்னு சொன்னேன் … அவங்க நானும்
வரேன்னு சொல்றாங்க ….

ஓ அதுக்கு என்ன ஷாம் தாராளமா போலாம் ….

இல்லை சார் அன்னைக்கு நான் அவங்களுக்கு கூட்டம் ஆகாதுன்னு நினைச்சி
நானாவே வேணாம்னு சொல்லிட்டேன் இப்ப என்னடான்னா அவங்களும் வரேன்னு
சொல்றாங்க ….

அப்படியா அதனால என்ன ஷாம் பரவாயில்ல … நம்ம கார்லதான் 5 பேர் போலாமே ….

அதுக்கில்லை சார் நீங்க ஆன்லைன் தரிசனம் புக் பண்ணி இருக்கீங்க அதான்
அம்மாவுக்கு கிடைக்குமா ?

இனிமே கஷ்டம்தான் …

அதான் நீங்க வந்து இன்னொரு நாள் கண்டிப்பா போலாம்னு எங்க அம்மாகிட்ட
சொல்லிட்டா நாம காலைல போயிட்டு வரலாம் ….

பாத்தியா ரம்யா இவரு தப்பு பண்ணிட்டு நம்மள சமாதானம் சொல்ல சொல்றாரு …

சரி விடுங்க இன்னொருதடவை போகும்போது போலாம் ….

அப்புறம் நானும் ராகவும் ஷாம் வீட்டுக்கு போயி அவங்க அம்மா கிட்ட
சமாதானம் சொல்லி காலை போவதற்கு அனுமதி வாங்கி வந்தோம் ….

அதிகாலை கிளம்பினதால டிராபிக் இல்லை ….

ஷாம்தான் ஓட்டினான் ….

நான் பின்னிருக்கையிலும் , ராகவ் முன்னாடி ….

கார ரொம்ப வேகமா ஓட்டினான் ….