தீரா தாகம் – Part 2 162

நாம இப்ப கிளம்புனா அங்க 8 மணிக்கு போலாம் …

அத்தனை மணிக்கு கோவில் உள்ள போகமுடியாது …

அப்ப என்ன பண்ணலாம் ஷாம் …

நைட்டு இங்கேயே தங்குவோம் காலைல 5 மணிக்கு கிளம்புனா போயிடலாம் அப்டியே

ஊருக்கு கிளம்பி ஈவ்னிங் போயிடலாம் ….

ஓகே ஷாம் அப்டின்னா நான் அம்மாகிட்ட சொல்லிடவா ?

ஆங் சொல்லிடுங்க … நானும் அம்மாகிட்ட சொல்றேன் …

நானும் அம்மாகிட்ட சொல்றேன்னு சொல்ல மூவரும் சிரித்துக்கொண்டே அவரவர்

அம்மாக்களுக்கு டயல் பண்ணோம் ….

பேசிவிட்டு என் வீட்டுகார் வந்து … ஷாமிடம் ஷாம் அங்க காலைலே போகணுமாம்

… காலைல குளத்துல குளிச்சிட்டு ஒரு பூஜை பண்ணனுமாம் …

ஆமாம் அது குழந்தைக்காக பண்ணுவாங்க இல்லைன்னா கல்யாணத்துக்காக பண்ணுவாங்க …

நாங்க குழந்தைக்காக போறோம் ஷாம் …

அப்படியா சரி போவோம் சார்னு , ஷாம் என்னை பாக்க அந்த பார்வை ஆயிரம்

அர்த்தம் சொன்னது …

நான் தலை குனிந்து என் நிலையை நினைத்து கண்ணீர் எட்டிப்பார்க்க …

என் புருஷன் என்ன செய்யலாம் இப்பன்னு கேக்க …

இப்ப போயி எதுனா டீ காபி குடிச்சிட்டு சீட்டு கட்டு வாங்கிட்டு வந்து

விளையாடுவோமா ….?

அப்புறம் நைட்டு சாப்பிட்டு தூங்குவோம் …

சீட்டா சூப்பர் சூப்பர் … விளையாடலாம் ஷாம் … என் புருஷனோட துள்ளல்

எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சி …

அப்புறம் கிளம்பி ஸ்நாக்ஸ் முடிச்சி சீடுக்கட்டோட உக்காரும்போது மணி சரியா 6 …

என்ன பெட் ?

பணம் வச்சி ஆடலாமா ?

பணம் வேணாம் சார் அது போர் புதுசா எதுனா சொல்லுங்க ….

யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்க மத்த ரெண்டு பேரையும் எதுனா செய்ய சொல்லணும்

… பாட்டு டான்ஸ் மிமிக்கிரி அந்த மாதிரி ….

ரெண்டாவது வரவங்க அதுக்கும் கடைசியா வந்தவங்கள எதுனா செய்ய சொல்லலாம் ….

“ஓகேவா டீல்னு என் புருஷன் துள்ள … ஓஹோ இந்த மனுஷனுக்கு இந்தமாதிரி

கொண்டாட்டத்துலதான் ஆர்வம் போல … ச்ச இனிமே இந்தமாதிரி பண்ணி இவர

குஷிப்படுத்தி கபால் குபால்ல இறங்க வேண்டியது தான் ….”

கடைக்கு போயி டீ குடிச்சிட்டு கார்ட்ஸ் வாங்கிட்டு வந்தோம் !

மூவரும் எதிரெதிர் அமர்ந்து ….

களைச்சி போட்டு ஆரம்பிச்சோம் ….

ரம்மி வரலியேன்னு ஷாம் சொல்ல … வரும்பா அதுக்குள்ள அவசரப்பட்டா

எப்புடின்னு ராகவ் சொல்ல …

இல்லை சார் ரம்மிலாம் எடுத்தோன சேரனும் …

இப்பத்தான ஆரம்பிச்சிருக்க வெயிட் பண்ணு ரம்மி வரும் …

என்னமோ போங்க சார் நீங்க தான் ரம்மிய போடணும் …