உதவிக்கு வரலாமே 104

இருவரும் ரம்யா இருக்கும் அதே ஏரியாவில் வசிப்பவர்கள் . காலேஜ் இறுதி ஆண்டு படிக்கும் கட்டிளன்காலைகள் . மோகனுக்கு ரம்யா மேல் கடந்த ஒரு வருடமாக அபாரமான காதல் . கடந்த 4 மாதங்களாக ரம்யாவிடம் பலமுறை பல வழிகளில் தன் காதலை சொல்லியும் , ரம்யா அவனை நிராகரித்தாள் . நேற்று அவன் நண்பன் பாண்டியன் “வாடா நான் பேசி பாக்குறேன் . மவனே ரெண்டுல ஒன்னு பாத்திடுவோம்” என்று சொல்லி மோகனை இன்று அழைத்து வந்திருந்தான் .

ரம்யா வண்டியை நிறுத்தி அவர்களை கேள்வி குறியோடு பார்த்தாள் .

மோகன் : ரம்யா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் . ஒரு 5 மினிட்ஸ் ப்ளீஸ் .

ரம்யா : உனக்கு என்ன வேணும் மோகன் . காலேஜுக்கு டைம் ஆச்சு . வழி விடு .

மோகன் : ப்ளீஸ் ப்ளீஸ் ரம்யா ஒரு 5 மினிட்ஸ் தான்

ரம்யா : சரி என்ன ?

மோகன் : இது என் ப்ரெண்ட் பாண்டியன்

ரம்யா : ஓஹ ! ஹாய் .

பாண்டியன் : ஹாய் ஐயம் பாண்டியன்

ரம்யா : ஐயம் ரம்யா

பாண்டியன் : ஒண்ணுமில்ல ரம்யா . மோகன் ரொம்ப சின்செயரா உங்கள லவ் பண்றான் அதான் உங்ககிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்

ரம்யா : என்னால முடியாதுன்னு தெளிவா சொல்லிட்டேனே . இப்போ என்ன ?

பாண்டியன் : எனக்கு தெரியும் . பட் அவன் ரொம்ப நல்ல பையன் . உங்க நெனைப்பாலெ அவன் சரியா படிப்புல கூட concentrate பண்ண மாற்றான் .

ரம்யா : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?

பாண்டியன் : பெருசா ஒன்னும் இல்லைங்க . அவன காதலிக்காட்டியும் பரவால . அட்லீஸ்ட் ஒரு பிரெண்டா அவன் கூட பழகி அவன் ஸ்டடீஸ் முடிக்க ஹெல்ப் பண்ணுங்க . அப்புறம் ஒரு கைடா இருந்து அவன் லைப்ல முன்னேற வழிகாட்டுங்க .

ரம்யா : எனக்கு அதைவிட லைப்ல நெறைய முக்கியமான கடமைகள் இருக்கு மிஸ்டர்.பாண்டியன் . நீங்க சொல்ற அனைத்தும் மிஸ்டர்.மோகன் அவர் அப்பாகிட்ட பிரெண்டா இருந்தாலே நடக்கும் . என்னை விட சிறப்பா அவர் அப்பா அவரை கைட் பண்ணி வாழ்க்கைல முன்னேற வைக்க முடியும் .

பாண்டியன் : நான் என்ன சொல்ல வரேன்னா …

ரம்யா : 5 மினிட்ஸ் முடிஞ்சது நான் கெளம்பறேன் . இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாதிங்க ப்ளீஸ். ஆல் தி பெஸ்ட் .

பாண்டியன் சட்டேன்று கிளம்ப முயன்ற ரம்யாவின் வண்டி சாவியை பிடுங்கி கொண்டான் . இதை எதிர்பார்க்காத ரம்யா மோகனை பார்த்து

“என்ன மிஸ்டர்.மோகன் , உங்க ப்ரெண்ட் இன்டிசண்டா நடந்துகறார்”

மோகன் : மச்சான் மச்சான் . வேணாம் டா . ரம்யா கிட்ட சாவியை குட்றா .

பாண்டியன் : நீ சும்மா இருடா மச்சான் . இவள பாத்த உடனே முடிவு பண்ணிட்டேன் இவ ஒரு திமிர் பிடிச்சவன்னு . நம்ம எவ்ளோ சொல்றோம் . ரொம்ப ஓவரா பண்றாடா .

ரம்யா : மோகன் என்ன இது ? கலாட்டா பண்ண பாக்குறின்காலா ?
ரம்யா கோவத்தில் கத்தினால்

பாண்டியன் : அங்க என்னமா கத்துறே . கண்ணு என்கிட்டே பேசு .

ரம்யா : யூ இடியட் ! எங்க அப்பா கிட்ட சொன்ன என்ன ஆகும்னு தெரியாம பேசுறே .

பாண்டியன் : போய் சொல்லு டீ . சாவியை புடுங்கினேன் சொல்லு . கைய பிடிச்சேன் சொல்லு கட்டி பிடிச்சேன் சொல்லு .

இப்படி சொல்லும்போதே பாண்டியன் ரம்யா அருகில் வந்து அவள் வலது மணிக்கட்டை பற்றி கையை தலைமேல் சுற்றி அப்படியே அவள் இடுப்பை வளைத்து பிடித்தான் . ஒரு ஆணின் முரட்டு ஆளுமையில் ரம்யா திணறிப்போனாள் . நிலைமையை உணர்ந்து அவள் பாண்டியனை உதறி தள்ளி வெளி வர முயன்றாள் . பாண்டியனின் பிடி இறுக்கமாக இருப்பதை அறிந்த ரம்யா , கண்ணிமைக்கும் நேரத்தில் குனிந்து பாண்டியனின் மணிக்கட்டை அழுத்தமாக கடித்தாள் .