வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பத்து 49

உனக்கு இவ்ளோ சங்கடத்தைத் தர்ற, உன் மனசாட்சியை உருத்துற ஒரு விஷயத்தை, எப்டிடா சொல்றதுன்னு நீ தவிக்கிற ஒரு விஷயத்தை, நீ என்கிட்ட சொல்ல வேண்டிய கஷ்டத்தை, என்னால உனக்கு தர முடியாது!

தவிர இந்த மனசு, ஒரு குரங்கு மாதிரி. நான் இன்னிக்கு சாதாரணமா எடுத்துக்குற ஒரு விஷயம், நாளைக்கு அது உறுத்துச்சுன்னாலோ, இல்லை என்னிக்காவது பேச்சு வழக்குல நான் அதைச் சொல்லிக் காமிச்சிட்டாலோ, அது நம்ம ரெண்டு பேருக்குமே பெரிய வலியைக் கொடுக்கும். அதை என்னாலியே தாங்க முடியாது. அதுனாலத்தான் சொல்றேன் என்று நிறுத்தியவள், என் கண்களையே பார்த்தவள், இன்னும் அருகில் வந்தாள்…

நீ அந்தாளைப் பழிவாங்க, என்ன பண்ணியிருந்தாலும், அது எவ்ளோ பெரிய தப்பாயிருந்தாலும், அது என்னைப் பொறுத்தவரை தப்புமில்லை. அது எனக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை! ஓகேயா?

நீ எப்பயும், என் மனசுல, உயரத்துலதான் இருக்கனும். நீ ஃப்ரியா இரு! இட்ஸ் நத்திங்! ஓகே?

அவன் என்னையே பார்த்தான். உணர்ச்சி வேகத்தில் அவன் என்னை இழுத்து என் முகமெங்கும் முத்தமிட்டவன், பின் என்னை இறுக்கி அணைத்து, என் முன் நெற்றியில் முத்தமிட்டு, பின் நெகிழ்ச்சியுடன் சொன்னான்.

தேங்க்ஸ் டி!

அவனது உணர்ச்சிவசப்பட்ட நிலையே சொன்னது, அவன் அதை நினைத்து ரொம்ப யோசித்திருக்கிறான் உள்ளுக்குள் என்று. நான் சொன்னது அவனுக்கு மிகப் பெரிய ரிலீஃப் என்று!

இது ஒரு பெரிய ட்ரிக். இது போன்ற சில விஷயங்களின் மூலம், எந்த ஆணையும் ஒட்டு மொத்தமாக, பெண்ணிடம் சரண் அடைய வைக்க முடியும். எல்லாப் பெண்களுக்கும் அந்த ட்ரிக் சரியாகத் தெரியாது என்றாலும், லாவண்யாவிற்கு அது மிகச் சரியாக தெரிந்திருக்கிறது. அது, ஏற்கனவே மனதால் முழுதும் சாய்ந்திருந்த மதனை, லாவண்யாவின் பக்கம் முழுமையாக சரணடைய வைத்தது.

மறந்தும் அவன், எனது திருமண விஷயத்தை அன்று பேசவில்லை. நானும் கூட, நாளை பேசிக் கொள்லலாம் என்றுதான் யோசித்து வைத்திருந்தேன். இந்த இரு நாட்கள், அவனுடைய காதலியாக இருக்க வேண்டும். அதன் பின் என்னை ஏற்றுக் கொள்வதும், வேண்டாம் என்பதும் அவன் முடிவு!

அடுத்த நாள், எழுந்த போது மணி 8. அன்றும் மீட்டிங் போக பிடிக்கவில்லை எனக்கு. ஏனோ, அவன் அணைப்பில், அவன் அன்பிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இந்த உணர்வுகளைக் கண்டு எனக்கே வியப்பாய் இருந்தது.

என்னுடைய வெளிப்படையான உணர்வுகளைக் கண்டு, அவனுக்கும் கூட ஆச்சரியம் தான்!

எளிதில் அவனிடம் உணர்வை வெளிப்படுத்தாத நான், இன்று மீட்டிங் கூட போகவேண்டாம் என்று இருப்பது, என் அன்பை, அவனுக்குத் தெளிவாக உணர்த்தியது.

சின்சியர் சிகாமணியா இருந்த ஒரு பொண்ணைக் காணோமே, பாத்தியா லாவி என்று என்னிடமே சீண்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

அவனுடைய சீண்டல்களுக்கு, நான் சிணுங்கும் சமயங்கலிள் எல்லாம், அவனது பார்வை, மிகவும் ரசனையாய் மாறியது. அவன் பார்வை மாறும் சமயங்களில், எனக்குள் வெட்கப் பூக்கள் பூத்தன.

அவனை விடப் பெரியவள்! பல வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றாகவே வளர்ந்திருக்கிறோம். என்னை அவனும், அவனை நானும் மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனாலும், மனம் கவர்ந்த கள்வனின் ரசனையான பார்வை, ஒரு பெண்ணுக்குள் இந்தளவு வெட்கத்தை பூக்க வைக்குமா என்ன? இதுதான் காதலின் சக்தியா?

காலை, புல்வெளியில் ஏகாந்தமாய் அமர்ந்து டீ குடிக்கும் போது திடீரெனக் கேட்டான்.

ஏய் லாவி, ஸ்விம்மிங் பூல் போலாமா?

ப்ப்ச்… வேணாம் மதன்!

ஏய், உனக்குதான் ஸ்விம்மிங்ன்னா பிடிக்குமில்லை. கம்முன்னு வா!

இல்ல மதன், வேணாம்!

ஏன்?

நான் தயங்கியவாறே சொன்னேன். அந்த டிரஸ் போட்டுகிட்டு, எல்லார் முன்னாடியும் அரைகுறையா இருந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கும் பா! வேணாமே!

இதான் மேட்டரா? உனக்கு ஸ்விம்மிங் பிடிக்கும்னு தெரிஞ்ச எனக்கு, இது தெரியாதா? இது ப்ரைவேட் ஸ்விம்மிங். இங்க இருக்கப் போறது, நாம ரெண்டு பேருதான். வா!

எனக்காக அவன் செய்யும் செயல்கள், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. சிறீது தயக்கத்திற்குப் பின், ஒத்துக் கொண்டேன். அந்த உடையில், அவன் முன் நிற்பதே எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது.

இது என்ன உணர்வு! முழுக்க நிர்வாணமாக, இரு இரவுகள் அவனுடன் கழித்திருக்கிறேன்! என்னை அணு அணுவாக ரசித்திருக்கிறான். இருந்தும், இந்த வெட்கம் படுத்தும் பாடு இருக்கிறதே?!

தயங்கியவாறே, ஸ்விம்மிங் பூலில் இறங்கிவிளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென என்னைப் பார்த்து கேட்டான்!

ஏன் லாவி, அப்ப மத்தவிங்க முன்னாடி இருக்குறதுதான் உனக்கு பிடிக்காது. என் முன்னாடி இருக்கிறது உனக்கு பிரச்சினை இல்லை! அப்டித்தானே?