திருடன்! எல்லாம் தெரிஞ்சிகிட்டே கேக்குறான் பாரு? என்னைச் சீண்டுறதுல உனக்கு அவ்ளோ சுகமாடா?
தவிப்போடும், வெட்கத்தோடும் பார்த்த என்னை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பீரியட்ஸ், இனி உண்மை தெரிந்த பின் தான் அவனுடன் சேருவது என்ற என் முடிவுகளையெல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு, அவனை ஆசையாகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது!
மதனுக்கும் கூட உள்ளுக்குள் அப்படித்தான் உணர்ந்தான். வாய் விட்டு பேசாதவள், இப்பொழுது கண்களாலேயே பேசும் அளவிற்கு மாறியிருக்கிறாள்.
சிணுங்கி, வெட்கப்படும் போதுதான் இவள் எவ்வளவு அழகாயிருக்கிறாள்?! சில நாட்களுக்கு முன்பு, அருகில் வந்தாளே முறைத்தவள், இப்பொழுது கண்களாலேயே தூண்டில் போடுவதென்ன? என்னை அழைப்பதென்ன?
இப்படி புத்தம் புது மலரைப் போல், இவ்ளோ ஃப்ரெஸ்ஸா, அழகா, இப்படி என் முன்னாடி வெட்கப்பட்டா, என்னால கையை வெச்சுகிட்டு எப்டி சும்மா இருக்க முடியும்?
உண்மையில், ஒரு ஆணுக்கு பெருத்த போதையைத் தருவது, பெண்ணின் நிர்வாணம் அல்ல. எந்த ஆணைக் கண்டு மட்டும் பெண்ணின் உள்ளம் வெட்கப் பூக்களை பூக்கிறதோ, எவனிடம், அவளது கன்னங்கள் சிவக்கிறதோ, அதுவே அந்த ஆணுக்கு பெரிய போதை.
அந்தப் போதையைத்தான் லாவண்யா, மதனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அந்தத் தருணத்தில் மதன் முடிவு செய்தான். இந்தப் பிரச்சினைக்கு சீக்கிரம், முடிந்தால் இன்றே முடிவு கட்டி விட வேண்டும் என்று!
அதன் பின், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, ஸ்விம்மிங் பூலிலேயே விளையாடினோம். எந்த எதிர்பார்ப்போ, காமமோ இல்லாமல், எல்லாவற்றையும் மறந்து மிகவும் ஜாலியாக, அந்த இரண்டு மணி நேர விளையாட்டு இருந்தது.
அங்கு விளையாடி விட்டு, எங்கள் ரூமிற்கு வந்தவுடன் சொன்னான்.
ஊட்டி வந்ததுக்கு, உன் ஃபிரண்டுக்கு ஏதாவது வாங்கனும். இல்லாட்டி, என்னையெல்லாம் மறந்துட்டீங்களான்னு ஓட்டியே கொன்னுடுவா! அதனால, லஞ்ச்சுக்குள்ள வெளிய போயிட்டு வந்துடலாமா?
மெல்லிய தலையாட்டிய நான், சின்ன வெட்கத்துடன் அவனைக் கேட்டேன்.
எந்த டிரஸ் போடட்டும்? மாடர்ன் டிரஸ்ஸா? இல்லை சல்வாரா?
எனது கேள்வியும், வெட்கமும், அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பின் சொன்னான்.
சாரி கட்டு லாவி… ரொம்ப சிம்ப்பிள் சாரியா இல்லாம, கொஞ்சம் கிராண்டா கட்டுறியா? அப்டி ஏதாச்சும் எடுத்துட்டு வந்திருக்கியா? இல்லாட்டி வெளிய வாங்கிக்கலாம்!
அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு சொன்னேன்…
இல்ல, வாங்க வேணாம். இருக்கு.
அங்கிருந்து கிளம்பியவர்கள் நேராகச் சென்றது ஒரு நகைக் கடைக்கு. என் ஃபிரண்டுக்கு, என்னையே ஏதாவது செயின் எடுக்கச் சொன்னவன், ஹரீசுக்கு ஒரு ப்ரேஸ்லெட் வாங்கினான்.
மிக விரைவாகவே இரண்டையும் வாங்கி முடித்ததும், போலாமா என்று கேட்டேன்.
ஆனால், அவனோ, என் கையைப் பிடித்துக் கொண்டு, ஜூவல் செட்ஸ் இருக்கும் இடத்துக்கு சென்று நகைகளைப் பார்க்க ஆரம்பித்தான்
யாருக்கு மதன்? அவளுக்கு செயின் மட்டும் போதும்னு சொன்ன?
என்னிடம் அவன் பதில் சொல்லா விட்டாலும், அவன் செயல் எனக்கான பதிலைச் சொன்னது.
அவன் ஒரு பெரிய நகையை எடுத்து, என் கழுத்தருகே வைத்து அழகு பார்த்ததில் புரிந்தது, அவன் எனக்காக பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று!
எனக்கு வேணாம் மதன்!