வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பத்து 49

பதில் பேசாமல் அவனை சரியாகப் படுக்க வைத்த நான், கம்பளியை எடுத்து அவனுக்கும் சேர்த்து போர்த்தியவாறு, அவன் மார்புக்குள் சரணடைந்தேன்.

என்னை அணைத்தவனின் அன்பில் கண் மூடி இரு நொடி இருந்தவள், அப்படியேச் சொன்னேன்.

இன்னிக்கு அவ ஃபோன் பண்ணச் சொன்னா. பேசி நாளாகுது. அதான் அங்கப் போலாம்னு பார்த்தேன்.

மெல்லிய குரலில் சொன்ன என் தன்னிலை விளக்கம் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.

ஓ… அப்ப, போயி பேசிட்டு வா!

ப்ச்… வேணாம், நாளைக்கு பகல்ல பேசிக்கிறேன்.

என் பதிலில் அவன் இன்னமும் மகிழ்ந்தான். என்னை இன்னமும் நன்றாக அணைத்துக் கொண்டவன், என் முன் நெற்றியில் மெல்லிய முத்தமிட்டு, என் தலையையும், கன்னக் கதுப்புகளையும் வருடினான்.

அதற்க்கப்புறம் அப்படியே பேசிய படி தூங்கும் போது மணி 2. நாங்கள் காதலாகவோ, காதலைப் பற்றியோ எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால் அது முழு நேரப் பேச்சும் அல்ல… பெரும்பாலும் வருடல்களுடன், சாதாரணப் பேச்சாக இருந்தாலும், இருவமே அந்த மோன நிலையிலேயே தொடர்ந்து இருக்க நினைத்தோம்.

இருவரில் யார் முதலில் தூங்கினோம் என்று கூட தெரியாத அளவிற்கு, அந்த அணைப்பில் கரைந்து மகிழ்ந்திருந்தோம்.

காலையில் எழுந்த போது மணி 8. ஐயோ மீட்டிங்க்கு லேட்டாச்சு என்று பதறி எழுந்த போது மதன் சொன்னான்.

இன்னிக்கு மீட்டிங்லாம் போக வேணாம். முக்கியமான செஷன்ஸ் எல்லாம் ஏற்கனவே ஓவர். அதுனால, இன்னிக்கு சும்மா அவுட்டிங் போயிட்டு வரலாம். நான் ஏற்கனவே இன்ஃபார்ம் பண்ணிட்டேன். ஓகேயா?

எனக்கும் அவனுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று தோன்றியதால், சரி என்றேன்.

போய் ரெடியாகிவிட்டு, அவன் முன் வந்து நின்ற போது, அவன் முகம் ஆச்சரியத்தாலும், மகிழ்ச்சியாலும் அப்படியே மாறியது!

லா… லாவி!

வெட்கப்பட்டுக் கொண்டே கேட்டேன். நல்லாயிருக்கா…

நல்லாயிருக்காவா? சூப்பரா இருக்கடா! உன்கிட்ட இந்த மாதிரி டிரஸ்ல்லாம்… அதுவும் இங்க எப்படி…

நேத்து ஈவ்னிங் கேப்ல போயி வாங்கிட்டு வந்தேன்.

அவன் இன்னும் காதலுடன் என்னை ரசித்தான்.

ஏனெனில் நான், அவன் கேட்ட படி மாறியிருந்தேன். அதாவது அவன் ஆசைப்பட்ட மாடர்ன் டிரஸ்ஸில்…

அன்று முழுவதும் நாங்கள் ஒன்றாக இருந்தோம். இரண்டு நாட்களாக, அவன் என்னிடம் விளையாடிய காம விளையாட்டுகளும், எல்லாச் சமயத்திலும் அவன் என் மீது காட்டிய காதலும் சேர்ந்து, எனக்கு உள்ளுக்குள் புயலைக் கிளப்பியிருந்தது.

அவனுடைய கைகளை என்னோடு கோர்த்துக் கொண்டேன். அருகருகே அமரும் போது, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டேன். எந்தக் கவலையும் இல்லாமல், மிகவும் சந்தோஷமாக, அவனது அருகாமையை, அவன் காதலை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தேன்.

எனது அருகாமையை அவனும் ரசித்தாலும், ஏனோ, என்னைத் தொட தயங்கி நின்றான். ஒரு கட்டத்தில், தாங்க முடியாமல், நானே அவனது கையை எடுத்து என் தோள் மேல் போட்டுக் கொண்டேன்.

எனது செய்கைகளை, மகிழ்ச்சியை அவன் கவனித்துக் கொண்டே இருந்தான். அந்த நாள் எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தாலும், சமயங்களில் என்னையே ஆழமாகப் பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்படியே சுற்றிவிட்டு ரிசார்ட்டுக்கு வந்த போது இரவு ஆரம்பித்திருந்தது…

இரவில் மீண்டும், படுக்கையில் அவனது அணைப்புகுள் வந்த பொழுது அவன் கேட்டான்.