வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பத்து 49

லவ் யூ சோ மச்!

லவ் யூ ஆல்வேஸ்!

லாவி….

அப்படியே உச்சத்தை அடைந்தான். அவனுடன் சேர்ந்து நானும். அவன் கொடுத்த காமமும், தொடர்ந்து சொன்ன காதலும், என் மனதை நெகிழ்த்தியிருந்தது.

சிறிது நேரம் கழித்து, ஒரு சின்னக் கேள்வியுடன் அவனைப் பார்த்தவாறே, மெல்லத் தயங்கிய படி அவனை வருடச் சென்ற எனது கைகளை அழுத்தமாகப் பிடித்தான். நேற்று போல் இன்றும் என்னைத் தொட விட வில்லை.

இரைஞ்சும் கண்களால் அவனைப் பார்த்தாலும், அவன் கண்டு கொள்ளவில்லை. எனது கைகளை அழுத்தமாகப் பிடித்தவன், பின் என் நெற்றியிலும், கண்களிலும் முத்தமிட்டுவிட்டு விலகினான். என்னை விட்டு விலகினான்.

ஆனாலும், தொடர்ந்து அவனையே நான் பாவமாய் பார்ப்பதைக் கண்டு, என் விழிகள் அவனையே கெஞ்சுவதைக் கண்டவன், தாங்க முடியாமல் அவேசமாய் அருகில் வந்து அணைத்துக் கொண்டான்.

ஏண்டி படுத்துற? நேத்து வரைக்கும் பக்கத்துல வந்தா முறைச்ச. இப்ப, தள்ளி நின்னா பாவமா பாக்குற. அப்படி, உன்னை குழப்புற பிரச்சினைத்தான் என்னன்னுதான் சொல்லித்தொலையேண்டி.

அவன் திட்டினாலும், என்னை அணைத்திருந்தது, நான் அவனை அனைத்துக் கொள்ள ஏதுவாய் இருந்தது.

அவ்வளவு கோபத்திலும், எனது வருத்தத்தைத் தாங்க முடியாத அவனது அன்பில் என் மனம் பூரித்தது. சிறிது நேரம் கழித்து, ஒரு மன நிறைவுடன், என்னை சுத்தம் செய்து கொண்டு வந்து அவனருகே படுத்தேன்.

எதுவும் பேசாமல் எழுந்து சென்ற என்னை முறைத்தவன், மீண்டும் வந்து அவனருகே படுத்ததும், பெரு மூச்சு விட்டபடி, என்னை ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு, என்னை அவனே இழுத்து மார்பில் போட்டுக் கொண்டு, மெதுவாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தில் ஆழ்ந்தான்.

நான் அவனையே பார்த்தபடி, பல யோசனைகளில் இருந்தேன். இறுதியில், ஒரு முடிவெடுத்திருந்தேன். அது,

ஊட்டியில் இருந்து கிளம்புவதற்குள், அவனிடம் பேசிவிட வேண்டும் என்பதுதான். இனி, முழுதும் தெரிந்த பின், அவன் எடுக்கும் முடிவிற்கு சம்மதம் சொல்லி விட வேண்டியதுதான்.

கல்யாணத்திற்கு முன்பாக அவனுடன் கலப்பதுதான் அவனுக்கு செய்த பிராயிச்சித்தம் என்று நினைத்த என்னால், இரண்டு நாட்களாக, காமத்தில் கூட அவன் காட்டும் காதலைப் பார்த்த பின், இன்னமும் அவனிடம் என்ன நடந்தது என்பதைச் சொல்லாமல் இருப்பது மனதிற்குள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

இனி அவனுடன் கலப்பது என்றால், மனம் விட்டுப் பேசிய பின்புதான் என்று முடிவு செய்தேன். அதற்காக இன்னொரு பொய்யைச் சொல்லத் தயாராகியிருந்தேன்.

என் முடிவு கொடுத்த நிம்மதி, அவன் மேல் இன்னமும் அன்பு ஆறாய் பெருக்கெடுக்க, அவன் தலையைக் கோதியவள், மெல்ல அவ நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன்.

ஆனால், எனக்குத் தெரியாத ஒன்றிருந்தது. அது,

இத்தனை நாட்கள் குழப்பத்தில் இருந்தவள், தானாக மறைமுகமாக தன்னை மதனிடம் ஒப்படைத்ததையும், இந்த இரு நாட்களில் காதலையும், பரிதவிப்பையும், எனக்குள் புதைந்திருந்த குழப்பத்தையும் முழுக்க பிரதிபலித்த என் கண்களையும் கண்ட மதன், அவனுக்குள் ஒரு முடிவு செய்திருந்தான்.