யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 9 179

வடிவுக்கரசிக்கு “பக்” என்று ஆனது… மனது படபடத்து முகம் வேர்த்தது.. என்ன கூறுவது என்று யோசித்து கொண்டிருந்தாள்..

” மா. …. சொல்லுங்க…. ஏன் அமைதியா இருக்கீங்க… என்ன…. டைரி…மா..? ”

வடிவுக்கரசியின் இதய துடிப்பு அதிகமானது… ” டேய்…. அது…. அது… அதெல்லாம் எதுவும் இல்ல..டா..” என எதையோ மறைக்க போராடினாள்..

” இல்ல..மா அக்கா உங்க கிட்ட சொன்னா… எனக்கு நல்லா.. ஞாபகம் இருக்கு..”

வடிவு இவனின் இந்த பேச்சை திசைமாற்ற நினைத்து அவனிடம் ” டேய்… நீ என்னமோ சுவாதிய ஓவரா புகழ்ந்து ஐஸ் வைக்குற.., அவ என்னமோ அவளையே கட்டிகோனு சொல்லுறா… என்னடா நடக்குது ” என்றாள்..

அதே நேரத்தில் அந்த இரண்டு மர்ம நபர்கள் குடிலுக்கு சற்று தொலைவில் உள்ள பனைமரத்திற்க்கு பின் மறைந்து கொண்டு வடிவும் ரவியும் எப்போது வெளியே வருவார்கள் என்று காத்திருந்தனர்…

ரவிக்கு அம்மாவின் இந்த பேச்சு சந்தேகத்தை உண்டாக்கியது ” மா…. பேச்ச மாத்தாத… நான் என்ன கேட்டேன் ” என்றான்

” டேய்…. அதான்… நான் இல்லனு சொல்றேன்ல… எனக்கு டயார்டா இருக்கு… நான் தூங்க போறேன் ” என சாய்ந்து அமர்திருந்தவள்.. சற்று தன் இடுப்பை கீழே நகர்த்தி படுத்து கண்ணை மூடிக்கொண்டாள்…

ஆனால் ரவி விடவில்லை ” மா… காட் ப்ராமிஸ். … அக்கா உங்க கிட்ட டைரிய பத்தி ஏதோ பேசுனா..” என தீர்க்கமாக கூறினான்

வடிவு மனதில் ” கடவுளே இவன் விடமாட்டான் போலயே… இன்னும் கொஞ்ச நேரத்துல நானே என் வாயால எல்லாத்தையும் சொல்லிடுவேனே ” என பயந்து.. இவனின் பேச்சை நிருத்த மூளை வேகமாக சிந்தித்தது…

ரவி ” சரி. .மா… அத விடுங்க… எதுக்கு இந்த ஊர விட்டு குடும்பத்தோட காலி பன்னிங்க..? ” என தன் சந்தேகத்தை கேட்டு வடிவுக்கு அடுத்த குண்டை போட்டான்…

ஏற்கெனவே நடுங்கி கொண்டிருந்த வடிவுக்கரசிக்கு ரவியின் அடுத்த கேள்வியும் மனதில் ஒரு வித பயத்தை உண்டாக்கியது. ..இதனால் நடந்த எல்லா விஷயங்களையும் கூறிவிடலாமா என்றும் கூட நினைத்தாள்… திடிரென கண்விழித்து ரவியை பார்த்தாள் ..

3 Comments

  1. Story semma iyalpa nadakuramatri solrenga next part ku wait pannran

  2. Very nice
    Quickly updated nxt episode story

Comments are closed.