நண்பனின் காதலி – 3 93

அதற்கு அப்புறம் சுவாதி கருவை கலைக்கமால் எப்போதும் போல வந்து ஹோஸ்டலுக்கு வந்து விட்டாள் .அவள் விக்கியிடம் அபார்சன் பண்ணமால் விட்டதை பற்றி எதுவும் சொல்லவில்லை அவனும் அவள் அபார்சன் பண்ணி இருப்பாள் என நினைத்து கொண்டு அவளுக்கு போன் எதுவும் பண்ணவில்லை .

மேலும் விக்கிக்கு வார நாட்களில் அவன் கம்பெனியில் வேலை அதிகமாக இருக்கும் அதனால் அவன் மற்ற விசயங்களில் கவனம் செலுத்த மாட்டான் .ஏன் அவன் பலவினமாக இருக்கும் பெண்கள் விசயம் கூட முன்பே சொன்னது போல் அவன் வார இறுதி நாட்களில் மட்டும்தான் வைத்து கொள்வான் .
அதனாலே அவன் மற்ற விசயங்களை ஞாபகம் வைத்து கொள்வதில்லை .
இப்படியாக ஒரு வாரம் சென்றது அவன் அன்று வழக்கம் போல வேலை முடித்து விட்டு வீட்டில் களைப்பில் படுத்து இருந்தான் .பின் அவன் வீட்டிற்கு வள்ளியும் மணியும் அவனை பார்க்க வந்தார்கள் .
என்ன இந்த பக்கம் ரெண்டு பேரும் வந்துருக்கிங்க என கேட்டான் விக்கி .சும்மாதாண்டா எனக்கு 6 மாசம் ஆச்சுல அதான் டாக்டர் கிட்ட போயி டெலிவரி டேட் கேட்டுட்டு வந்தோம் அப்படியே வர வழிலேயே உன் புது வீடு இருக்கறது ஞாபகத்துக்கு வந்துச்சு அதான் உன்னையே பாத்துட்டு அப்படியே அடுத்த மாச வளைகாப்புக்கு கூப்பிடலாம்னு வந்தேன் என்றாள் வள்ளி .
நல்லது என்னைக்கு டேட் சொல்லிருக்காங்க என கேட்டான் .அநேகமா ஜனவரி மாசம்னு சொல்லிருக்காங்க ஓரளவு கரெக்ட்டா எட்டாவது மாசம் சொல்லுவாங்க
ம்ம் என் பிள்ளை புது வருசத்துல பிறக்க போகுது என்று வள்ளி சிரித்து கொண்டு சந்தோசத்தோடு சொன்னாள் .
ஒரு வாரம் வேலைப்பளுவில் இருந்ததால் இந்த கர்ப்பம் ,குழந்தை என்கிற வார்த்தைகளை எல்லாம் சுத்தமாக மறந்து இருந்தான் விக்கி .இப்போது வள்ளி வந்து குழந்தை டெலிவரி என்று பேசவும் அவனுக்கு அப்போதுதான் சுவாதி ஞாபகம் வந்தது .அவள் இந்நேரம் கருவை கலைத்திருப்பாலா இல்லையா என்று யோசித்து கொண்டு இருந்தான் .கலைத்திருப்பாள் ஏன்னா என் மூலம் வர குழந்தையே எந்த பொண்ணு சுமப்பா அப்படின்னு நினைச்சு கிட்டு இருந்தான் .
மணி வந்து உன் வீட்ல திங்க எதாச்சும் இருக்கடா அப்படின்னு கேட்டப்பதான் அவன் நிஜ உலகத்துக்கு வந்தான் .கிச்சன்ல இருக்குடா சாப்பாட்டு ராமா என்றான் விக்கி சிரித்து கொண்டே
அவன் கிச்சன் போனதும் வள்ளி அவனிடிம் டேய் சுவாதி உன் ஆபிஸ்க்கு எல்லாம் வராலமே என்ன விஷயம் என்ன உங்க ரெண்டு பேருக்கும் லவ் வந்துருச்சா என்று கிண்டலடித்து சிரித்தாள் .
அத எல்லாம் ஒன்னும் இல்லை என்றான் வேகமாக .பின் அந்த பக்கம் இருந்து மணி எதையோ தின்னு கொண்டே வந்தான் . மணி வந்ததும் டேய் ஓட்ட வாயா சும்மா இருக்க மாட்ட எல்லா விஷயத்தையும் வீட்ல போயி உலறிடுவியா ரகசியமாவே எதையும் வச்சுருக்க மாட்டியா என்று அவனை திட்டினான் .
சாரி மச்சி ஆம்பிளக யார்கிட்ட வேணும்னாலும் ரகசியம் காக்கலாம் பொண்டாட்டிகிட்ட மட்டும் ரகசியம் காக்க முடியாது அது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி சிரித்தான் மணி .
சரி அவர விடு சுவாதி எதுக்கு உன் ஆபிஸ்க்கு வந்தா அத முத சொல்லு என்று வள்ளி ஆர்வமாக கேட்டாள் .
உண்மை விசயத்தை சொன்னால் வள்ளி ஆடி போயிடுவாள் .அதோடு சுவாதியை அபார்சன் பண்ண சொன்ன விஷயம் தெரிந்தால் எங்கிட்டும் வள்ளி கடுப்பில் பேசமால் கூட போயிடுவாள் என புரிந்து கொண்டு
ஒன்னும் இல்ல அவ பிரண்டுக்கு என் கம்பெனில ஏதும் வெகன்சி இருக்கான்னு கேட்டு வந்தா அதுவும் ஒரு தடவதான் வந்தா அவளவுதான் அதுக்கு அப்புறம் அவள நான் பாக்கவே இல்ல என்றான் .
நிஜம் சொல்றியா இல்ல பொய் சொல்றியா என்றாள் வள்ளி .நான் ஏன் பொய் சொல்ல போறேன் என கேட்டான் விக்கி .இல்ல உன் முகரைய பாத்தா ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கே என சந்தேகத்தோடு கேட்டாள் .