நண்பனின் காதலி – 3 93

பின் விக்கிக்கு பசி எடுத்தது அவன் வரும் வழியிலும் எங்கும் சாப்பிட வில்லை அதனால் அவன் பசியை போக்க எழுந்து போயி பிரிட்ஜில் ஏதும் இருக்கிறதா என்று பார்க்க போனான் .
அவன் அந்த பக்கம் போனதும் சுவாதி ஹாலுக்கு வந்தாள் விக்கி if you dont mind நானும் கொஞ்ச நேரம் டிவி பாத்துகிறேன் .சும்மா லேப்டாப் பாத்து பாத்து கிட்டு இருக்க போர் அடிக்குது என்றாள் .ஒகே சுயர் என்றான் .பின் பிரிட்ஜில் இருந்து பழைய பழங்கள் ஒன்று இரண்டை எடுத்து தின்னு கொண்டு இருந்தான் .அதை பார்த்த சுவாதி டேய் உனக்கு பசிச்சா கிச்சன்ல சாப்பாடு இருக்கு எடுத்து சாப்பிடு என்றாள் .
விக்கிக்கு பசி இருந்தாலும் அவள் சாப்பாட்டை எடுத்து சாப்பிட மனம் வரல இல்ல பசிக்கல சும்மாதான் ப்ருட்ஸ் சாப்பிடறேன் என்றான் .ஹ நான் ஏதும் சாப்பட்ட வச்சு ப்ளாக் மெயில் பண்ண மாட்டேன் நீ சும்மா சாப்பிடு நான் வாடைகைல கழிச்சுகிறேன் என்றாள் சிரித்து கொண்டே .அதை கேட்ட விக்கி ஒகே என்ன வச்சு இருக்க என்றான் .சோறுதான் என்றாள் .என்னது சோறா என்றான் .
ஆமா நைட் சோறு சாப்பிட்டாதான் வயிறும் நிறையும் ,தூக்கமும் நல்லா வரும் என்றாள் .விக்கிக்கு அவள் சொன்னது எங்கயோ கேட்டது போல இருந்தது .ஆமாம் அவன் வீட்டில் இருந்த போது அவன் அம்மாவிடம் நைட் ஏன் சோறு வச்ச என்று திட்டிய போது அவன் அம்மா சொன்ன வார்த்தை சோறு சாப்பிட்டா நல்ல வயிறும் நிறையும் தூக்கமும் வரும் அதனால சாப்பிடு சாமி என்று அவன் அம்மா சொன்ன அதே வார்த்தைகள் .
விக்கி அதை நினைத்து கொண்டே நின்று கொண்டு இருந்தான் ,பின்னர் விக்கி விக்கி என்று சுவாதி கூப்பிடவும் பழைய நினைவுகளில் இருந்து திரும்பினான் .ஏன் சோறு பிடிக்காதா என்றாள் .அவன் அப்படி இல்ல சோறு எங்க இருக்குன்னு சொல்லு நான் சாப்புடறேன் என்றான் .அந்த கிச்சன்ல ஹாட் பாக்ஸ்ல இருக்கு என்றாள் .பின் விக்கியாக போயி சோற்றை தட்டில் வைத்து சாப்பிட்டு கொண்டே கிச்சனுக்கு வந்தான் .
சுவாதி ஏதோ ஒரு ஆங்கில சேனல் வைத்து படம் பார்த்து கொண்டு இருந்தாள் .அவன் ஹாலுக்கு வந்து அவளுக்கு கொஞ்ச தூரம் தள்ளி உள்ள சோபாவில் உக்காந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் .பின்னர் அவனை பார்த்து சுவாதி கேட்டாள் விக்கி சாப்பாடு பரவலையா என கேட்டாள் .ம்ம் சாப்பிடும் போது பேச கூடாது .சாப்பிட்டு முடிச்சுட்டு சொல்றேன் என்றான் .பின்னர் சாப்பிட்டு கொண்டு இருந்தான் .அவன் தட்டை பார்த்தாள் .அவன் வின்ஜனம் இல்லாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தான் .
டேய் விஞ்சனம் வச்சு சாப்பிடுடா என்றாள் .விஞ்சனமா அது எங்க இருக்கு என்று பசியில் அவசர அவசரமாக சாப்பிட்டு கொண்டு இருந்தான் .இரு நானே போயி எடுத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு சுவாதி போயி அவனுக்கு விஞ்சன்மும் ஹாட் பாக்ஸ் மற்றும் ரச பாத்திரமும் எடுத்து வந்து வைத்தாள் .பின் விக்கி அதை அவனே எடுத்து சாப்பிட்டான் .
யே இது என்ன காய் என்றான் .அவர காய் என்றாள் .காய் எல்லாம் நான் வீட்ல வச்சுருக்கவே இல்லையே எப்ப வாங்குன என கேட்டான் .நீ பப்க்கு போனப்ப வீட்ட பூட்டாம போயிட்ட நாந்தான் போயி சமையல் பண்றதுக்காக போயி வாங்கிட்டு வந்தேன் .ஒகே என்று சொல்லி விட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தான் .டேய் ரசம் இருக்கு எடுத்துக்கோ என்றாள். சரி என்று சொல்லி விட்டு நல்லா சாப்பிட்டான் .ஹாட் பாக்சில் இருந்த சோறு முழுதையும் காலி பண்ணினான்