நண்பனின் காதலி – 3 94

இங்க பாரு விக்கி இது என்ன இருந்தாலும் உன் வீடு நான் இன்னும் ஒரு மூனு மாசம் வேலைக்கு போவேன் அதனால அந்த 3 மாசமும் நான் உனக்கு வாடகை மாதிரி ஒரு குறிப்பிட்ட அமௌண்ட் தரேன் என்றாள் .அதை கேட்டு விக்கி ஹே பணம்லாம் என் கிட்ட நிறைய இருக்கு நீ ஒன்னும் தர வேணாம் என்றான் .அதுக்கு இல்ல விக்கி அட்லீஸ்ட் பேரருக்கு டிப்ஸ் கொடுக்கவாச்சும் யூஸ் ஆகும்ல என்றாள் .அதலாம் முடியாது என்றான் .ஹ நான் உன்கிட்ட இருந்து நிறைய பறிச்சுட்டேன்னு எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியா இருக்கு
அத போக்கவாச்சும் வாங்கிக்கோ என்றாள் .ஹே இந்த பழைய ட்ரிக் எல்லாம் வேணாம் நான் உன்கிட்ட இருந்து வாடகை மாதிரி பணம் வாங்குனா நீ பணம் கொடுத்துருக்கேன்கிற திமிருல வெளிய போக மாட்ட அதானே என்று சொல்லி சிரித்தான் .நீ பணம் வாங்காட்டியும் நான் வெளிய போக மாட்டேன் அது எப்படின்னு உனக்கும் தெரியும் சோ பணம் வாங்குறது உனக்கு நல்லது என்றாள் .
ஓகே வாங்கி தொலைக்கிறேன் என்றான் .விக்கி அப்புறம் முன்னாடியே சொன்ன மாதிரி நீ என்ஜாய் பண்ண யார வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் கூப்பிட்டு வா ஏன்னா இது உன் வீடு நீ எப்படி வேணும்னாலும் இருக்காலம் ஆனா யாரையாச்சும் கூப்பிட்டு வரதுக்கு முன்னாடி என் செல்லுக்கு ஒரு sms பண்ணிடு நான் பாட்டுக்கு என் ரூம் கதவ நல்ல பூட்டிட்டு வெளியேவே வராம இருந்துக்கிறேன் .
இனிமேல் உன்கிட்ட நான் எந்த ஹெல்பும் கேக்க மாட்டேன் .உன் ஆபிஸ்க்கு கூட வர மாட்டேன் சோ என்னால உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல .
அப்புறம் டெய்லி நைட் நான் டின்னர் வீட்லயே ரெடி பண்றேன் உனக்கு பிடிச்சா சாப்பிடு இல்லாட்டி வேணாம் .இவளவுதான் விக்கி நான் சொல்ல வந்தது என்றாள் .
பரவல நான் கூட நைட் நான் திட்ட திட்ட நீ சும்மா இருக்கியான்னு நினைச்சேன் .ஆனா இப்ப நீ இவளவு தூரம் பயந்துருக்கியா என்றான் .பயம் இல்ல விக்கி எனக்கு வேற வழி தெரியல என்றாள் .ம்ம் என்று சொல்லிவிட்டு விக்கி அமைதி ஆனான் .இருவருமே அமைதியாக இருந்தார்கள் .
ஓகே விக்கி உனக்கு என் கிட்ட எதாச்சும் சொல்லனுமா இல்ல கேக்கணுமா என்றாள் . உடனே விக்கி எப்ப என் வீட்ட விட்டு போவ என கேட்டான் .இன்னும் 8 மாசம் வேற எதாச்சும் என்றாள் .ம்ம் உண்மைல இந்த குழந்தை என் குழந்தையா என்றான் .ஆரம்பிச்ட்டாண்டா என்று சுவாதி நினைத்து கொண்டு இந்த கேள்விக்கு உண்மைய சொன்ன சந்தொசப்படுவியா இல்ல பொய் சொன்ன சந்தொசப்படுவியா என்றாள் .விக்கி சிறிது நேரம் யோசித்து விட்டு எதுவும் சொல்ல வேண்டாம் இத பத்தி என்றான் .
வேற எதாச்சும் இருக்கா இல்ல அவளவுதானா என்றாள் .இல்ல இன்னும் இருக்கு என்றான் .சரி சொல்லு என்றாள் ,நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறது என் க்ரூப்ல யாருக்கும் தெரியாது இல்ல என கேட்டான் .
உன் க்ரூப்ன்னா யாரு என கேட்டாள் .அதாண்டி வள்ளி ,மணி ,டேவிட் என்றான் .ஒ சரி சரி அவங்க யாருக்கும் தெரியாது என்றாள் .ம்ம் நல்லதுதான் நீ கனடா போற வரைக்கும் அவங்க யாருக்கும் நீ இங்க இருக்கிறதோ இல்ல இதுக்கு நான்தான் காரணம்னோ தெரிய கூடாது புரிஞ்சுதா என்றான் .
ம்ம் புரிஞ்ச்சு என்றாள் .சொல்லா போன நீ அவங்கள யாரையும் இந்த 8 மாசத்துல பாக்க கூட கூடாது ,மீறி அவங்கள பாத்து இது தெரிஞ்சா நான் நீ போலீஸ்ல சொன்னாலும் பரவலன்னு உன்னையே வீட்ட விட்டு அனுப்பிருவேன் ஓகேவா என்றான் .
என்ன விக்கி என்னையே பிரியமானவளே ,ஓகே கண்மணி படம் மாதிரி பண்றேன்னு சொல்லிட்டு நீ என்னமோ நாட்டமை விஜயகுமார் மாதிரி என்னையே ஊர விட்டு ஒதுக்கி வைக்கிற என்று சொல்லி சிரித்தாள் .அதலாம் தெரியாது அவங்க யாருக்கும் நீ இங்க இருக்கிறது தெரிய கூடாது .குறிப்பா டேவிட்டுக்கு
சும்மா அவன கடுப்பு ஏத்துறேன்னு நினைச்சுகிட்டு போன வட்டம் மாதிரி இந்த வட்டம் மாட்டி விட்ட அவளவுதான் உன்ன நான் இந்த வட்டம் கொலையே பண்ணிருவேன் என்றான் .ஓகே ஓகே நான் யாரையும் பாக்க மாட்டேன் .யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்றாள் .அது என்றான் விக்கி .
அப்புறம் விக்கி நான் இன்னொன்னு உங்கிட்ட கேக்கணும் என்றாள் .என்ன என்றான் கடுப்போடு .என்னைக்காச்சும் எவளும் கிடைக்காம இருந்தா என் கிட்ட வந்து செக்ஸ் வைக்கனும்னு சொல்லி என்னையே கம்பெல் பண்ண கூடாது .ஏன்னா நான் கர்ப்பமா இருக்கேன் அப்புறம் நாம ரெண்டு பேருக்கும் இடைல செக்ஸ் ரிலேசன் வேணாம்னு நினைக்கிறேன் என்றாள் .
அம்மா தாயே உன்கிட்ட ஒரு தடவ செக்ஸ் வச்சதுக்கே நான் எல்லாத்தையும் இழந்துட்டு நிம்மதி இல்லாம இருக்கேன் .இதுல இன்னொரு தடவ வேற வச்சா அவளவுதான் என் வாழ்க்கை விளங்கிரும் இந்த மும்பை இல்ல இந்த உலகத்திலையே பொண்ணுக இல்லாம போயி நீ மட்டும்தான் பொண்ணுன்னு இருந்தா கூட உன்னையே நான் தொட மாட்டேன் என்றான்
பின் சுவாதி சொன்னாள் ஓகே விக்கி தேங்க்ஸ் என்றாள் .எதுக்கு என்றான் .கார்ல எத்திகிட்டத்துக்கு என்றாள் .பின் விக்கியும் by the by உனக்கும் தேங்க்ஸ் என்றான் .எதுக்கு என்றாள் .எப்பவும் திங்கள் கிழமை ஹங் ஓவரால தலை வலி வந்து ரொம்ப கஷ்டப்படுவேன் வொர்க்ல கன்சென்ட்ரட் பண்ணவே முடியாது ஆனா இன்னைக்கு நீ கொடுத்த மருந்தால எனக்கு ஓரளவு பிரசாவும் இருந்துச்சு தலை வலியும் இல்லாம இருந்துச்சு அதுக்குதான் என்றான் .
ம்ம் சரி என்றாள் .ஆமா உனக்கு எப்படி தெரியும் இது ஹங் ஓவருக்கு மருந்தாகும்னு என கேட்டான் .அது காலேஜ்ல ஹாஸ்டல் டே அப்ப முத முத சரக்கு அடிச்சுட்டு இப்படி ஓவரா ஹெங் ஓவர் ஆகி கிடந்தேன்னா அப்ப என் சீனியர் இத கொடுத்து குடிக்க சொன்னங்க கேட்டுக்குச்சு என்றாள் .அடி பாவி காலேஜ்லே குடிக்க ஆரம்பிச்சுட்டியா என்றான் .ஏன் ஆம்பிளகதான் காலேஜ்லேகுடிக்கனுமா நாங்க குடிக்க கூடாதா என்றாள் .
குடிக்கலாம் குடிக்கலாம் தாரளமா குடிக்கலாம் என்று சொல்லிவிட்டு சிரித்தான் .அவளும் சிரித்தாள் .பின் இருவரும் அமைதியாகி விட்டு ஓகே விக்கி நான் போயி என் ரூம்ல உக்காந்து என் வொர்க் பாக்குறேன் என்றாள் ,ம்ம் நானும்தான் என்றான் .