நண்பனின் காதலி – 3 93

எல்லாம் காஞ்சனா 2 விற்கு போனதால் கூட்டம் இருக்காது என்று நினைத்து கொண்டுதான் உள்ளே போனான் .ஆனால் அது காதல் படம் என்பதால் எல்லாம் ஜோடி ஜோடியாக வந்து குவிந்து இருந்தனர் .அதை பார்த்த விக்கி கண்டிப்பா இன்னைக்கு உனக்கு எவளும் சிக்க மாட்டா எல்லாம் ஜோடிய இருக்கதுக நீ சும்மா படம் மட்டும் தான் பாத்துட்டு போக முடியும் போல சரி வா எவள் ஆச்சும் தனியா சிக்குவா அப்ப பாத்துகிருவோம் என்று நினைத்து கொண்டு படம் பார்த்தான் .
படம் ஆரம்பமானது ஒரு சில காட்சிகளுக்கு பின் நாயகனும் நாயகியும் செல் போன் நம்பர் ஒருவருக்கு ஒருவர் வாங்கி கொண்டனர் .ம்ம் இந்த காலத்துல ஏவ இப்படி கேட்ட உடனே நம்பர் தராளுக என்ன படம் எடுத்த்ருகாங்கே என்று அந்த படத்தை மனதிற்குள்ளே திட்டினான் .அதன் பின் ஒரு சில காட்சிகளுக்கு பின் நாயகனும் நாயகியும் ஒரே வீட்டில் தங்க முடிவு செய்தனர் .
இதுக ரெண்டு பேரும் என்ன லூசா ரெண்டு பேருக்கும் லவ் பிடிக்காலேன்னு சொல்லுதுக ஆனா ஒரே வீட்ல இருக்குங்கலாம் அது எதுக்கு தேவை இல்லாம குறிப்பா ஹீரோ வேஸ்ட் ஒரு நாள் பேசி கரெக்ட் பண்ணி மேட்டர் பண்ணனால அப்புறம் என்ன அவள அத்து விட்டுட்டு என்னையே மாதிரி டெய்லி ஒருத்திய கரெக்ட்பண்ண வேண்டியதுதானே என்று அந்த படத்தை திட்டி கொண்டு இருந்தான் .
பின் இடைவேளை வந்தது சரி போயி எதாச்சும் திங்கவாச்சும் செய்வோம் என்று வெளியே போயி சாண்ட்விச்சும் பெப்சியும் வாங்கி கொண்டு வரும் போது பின்னால் இருந்து யாரோ வேகமாக வந்து மோதினார்கள் .அதில் இவன் கொண்டு போய் கொண்டிருந்த பெப்சி இவன் சட்டை மேல் விழுந்து விக்கி சட்டை முழுதும் இரமானது அவன் கடுப்பில் எவண்டா அது என்று கோபமாக திரும்பினான் .
அங்கு ஒரு அழகான பெண் நின்று கொண்டு இருந்தாள் .அவள் இவனை பார்த்து சாரி சார் ஏதோ தெரியாம நடந்து போச்சு மன்னிச்சுகோங்க என்று கெஞ்சி கொண்டு இருந்தாள் .அவளை பார்த்தும் சரி இன்னைக்கு நம்ம பசிக்கு உணவு கிடச்ருச்சு என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தான் .அவள் சாரி சார் சாரி சார் என்று இன்னும் கெஞ்சி கொண்டு இருந்தாள் .
இவன் பரவலங்க இருக்கட்டும் என்றான் .அதை கேட்டு அவள் சார் நீங்க தமிழா என்று ஆச்சரியப்பட்டு கேட்டாள் .இவனும் சிரித்து கொண்டே என்னாங்க தமிழ்ல பேசுறேன் .தமிழ் படத்துக்கு வந்து இருக்கேன் அப்புறம் ஏன் என்னைய பாத்து இப்படி ஒரு கேள்வி கேக்குரிங்கே என்று சிரித்து கொண்டே சொன்னான் .

அவளும் சிரித்தாள் அதன் பின் அவன் சிரித்து கொண்டே By the way ஐ ஆம் விக்கி விக்னேஷ் என்றான் .அவளும் ஐ ஆம் என்று அவள் பேரை சொல்லும் முன் விக்கி போன் அடித்தது .எந்த நாய்டா இந்நேரம் போன் பண்றதுன்னு கடுப்போடு எடுத்து பார்த்தான் .அது சுவாதியிடம் இருந்து வந்தது அதை பார்த்து விக்கி மேலும் கடுப்பாகி விட்டு இவ ஏன் இன்னும் என் நிம்மதிய கெடுக்குறா என்று மெல்ல முணுமுணுத்து கொண்டே போனை கட் பண்ணினான் .