நண்பனின் காதலி – 3 93

பின் எதையோ நினைத்தவள் போல தன் வயிற்ரை தொட்டு பார்த்து விட்டு என்னடா அம்மா அழுகுறான்னு பாக்குறியா சும்மதான்ப்பா அழுதேன் என்ன பண்ண எல்லாம் உனக்கக்கதான் அம்மா இவளவு தூரம் பொறுமையா இருக்கேன் .நீ எப்ப வெளிய வரியோ உடனே நம்ம இந்த நாட்ட விட்டே போயிடுவோம் சரியா .இனிமேல் உன் முன்னாடி அம்மா அழுக மாட்டேன் சரியா என்று சொல்லி விட்டு தன் வயற்றை தடவி தன் கைகளால் முத்தமிட்டாள் .

வா இப்ப அம்மாவும் நீயும் பாட்டு கேப்போம் என்று சொல்லிவிட்டு பாட்டு சத்தத்தை அதிகமாக வைத்தாள் .வெளியே விக்கி கதவை தட்டி தட்டி பார்த்து விட்டு டயார்ட் ஆகி அங்கேயே தூங்கி விட்டான் .பின் ஒரு காலையில் எழுந்தான் .எழுந்து நைட் அடித்த சரக்கின் ஹங் ஓவரால் தலையை பிடித்து கொண்டு மீண்டும் கண்ணை மட்டும் மூடி கொண்டு நைட் நடந்ததை நினைத்து பார்த்தான் .அவனுக்கு சுவாதியை திட்டியது ஒரளவு ஞாபகம் இருந்தது .சே இருந்தாலும் நாம நைட் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோம் சுவாதிய நாம நைட்ட்டு அப்படி அவளவு தூரம் திட்டி இருக்க கூடாது பாவம் .
இருந்தாலும் அவ அசரவே இல்லையே ஏன் ஒரு வேல நைட் வீட்ட விட்டு போக பயந்து இருப்பா இப்ப எந்திருச்சு போயிடுவா ஏன்னா எந்த பொன்னும் நாம நைட் அவளவு தூரம் திட்டனது கேட்டுட்டு இருக்க மாட்டா சோ சுவாதி கண்டிப்பா போயிடுவா அப்புறம் .அவ போயிட்டா நிம்மதிதான் என்று கண்களை மூடி கூப்புர படுத்து கொண்டு யோசித்து கொண்டு இருந்தான் .பின் யாரோ அவனை எழுப்புவது போல இருந்தது .திரும்பி பார்த்தால் சுவாதி கையில் தம்பலரோடு நின்று கொண்டு இருந்தாள் .ஹலோ குட் மார்னிங் என்று சிரித்தவாறு நின்று கொண்டு இருந்தாள் .

என்னடா இது நைட் நம்ம திட்டனதுக்கு இந்நேரம் வீட்ட விட்டு ஓடிருப்பானு பாத்தா இவ என்னனா பொண்டாட்டி மாதிரி நம்மள எழுப்பி காப்பி போட்டு கொண்டு வந்து நிக்கிறா என்று நினைத்து கொண்டு

என்ன சுவாதி நைட் நான் திட்டனதுக்கு விஷம் கலந்த காப்பி கொண்டு வந்துருக்கியா என்றான் சிரித்து கொண்டே .ஆமா விஷம்தான் வாங்கி குடி என்றாள் /பின் எழுந்து அதை வாங்கி பக்கத்தில் வைத்து விட்டு சிறிது நேரம் எதையோ யோசித்து அமைதியாக இருந்து விட்டு சுவாதி என் மேல கோபமா இருக்கியா என கேட்டான் .அவள் இல்லையே என்றாள் .சுவாதி நைட் நான் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிட்டேன் சோ ஐ ஆம் சாரி என்றான் .
அதலாம் நான் அப்பவே மறந்துட்டேன் .நீ முதல அத குடி என்றாள் .விக்கியும் டம்பளரை எடுத்து குடித்தான் .உடனே அதை வெளியே தூப்பினான் .என்னடி இது நிஜமாவே விசமா என கேட்டான் .இல்லடா அது பச்ச முட்டைய தண்ணில போட்டு கொண்டு வந்து இருக்கேன் என்றாள் எதுக்குடி இந்த தண்டனை நைட் உன்ன திட்டனதுக்கா என்றான் .
டேய் அது தண்டனை இல்லடா மருந்து என்றாள் .எனக்கு எதுக்குடி மருந்து நானா கர்ப்பமா இருக்கேன் நீதானா கர்ப்பமா இருக்க என்றான் .டேய் லூசு நைட் நீ அடிச்ச சரக்கால இப்ப உனக்கு ஹங் ஓவர் ஆகி தலை வலிக்குதா என கேட்டாள் .ஹே ஹே நாங்கலாம் எவளோ சரக்கு அடிச்சாலும் அப்படியே இருப்போம் .அப்படியா அப்ப உனக்கு தலை ரொம்ப வலிச்சா குடி வலிக்காம இருந்தா அத கீழ உத்திட்டு போயி வேலைய பாரு என்று சொல்லி விட்டு போனாள் .
அவள் அந்த பக்கம் அவள் ரூமிற்கு போனவுடன் அதை ஒரு நிமிஷம் பார்த்தான் .அவனுக்கு வாந்தி வருவது போல் இருந்தது .இருந்தாலும் வார வாரம் அவன் சனி ஞாயிறு இரண்டு கிழமைகலும் அதிகமாக சரக்கு அடிப்பது வழக்கம் .அதானால் எப்போதுமே திங்கள் கிழமை அவனுக்கு ஹங் ஓவரால அதிகமா தலை வலிக்கும் அதானல திங்கள் கிழமை அவனால ஆபிஸ்ல ஒழுங்கா வேலை பாக்க முடியாம தினருனான் .
அந்த ஹங் ஓவரா எப்படியாச்சும் போக்கணும்னு அவனே நினைச்சான் ஆனா அவனுக்கு வழி எதுவும் கிடைக்கல .ஆனா இப்ப சுவாதி கொடுத்தத குடிக்காலம்னு யோசிச்சான் .இருந்தாலும் நைட் அவன் அவள திட்டனதுக்கு எதுவும் பழி வாங்குற மாதிரி கொடுத்தான்னா என்று யோசித்து விட்டு அவளிடிமே கேப்போம் என்று முடிவு பண்ணி அவள் ரூம் கதவை தட்டினான் .
என்ன விக்கி என்றாள் .ஹ இம்ச இது உண்மைலேயே ஹங் ஓவர் தலை வலிய போக்குமா இல்ல எதுவும் நீ என்னையே பழி வாங்குற மாதிரி எதுவும் கொடுத்துருக்கியா என கேட்டான் .ஆமா இவரு என் குடும்பத்தையே கொன்னுட்டாரு நான் இவர பழி வாங்க போறேன் .சும்மா குடிடா இது ஹங் ஓவருக்கு நல்லா கேக்கும் என்றாள் .