நண்பனின் காதலி – 2 98

அப்படி என்னடா சொன்னா அவன் கிட்ட என்று கேட்டாள் .அத பேசி என்ன ஆக போகுது இப்ப என் நண்பன் என்னைய விட்டு பிரிஞ்சுட்டான் இனி நான் என்ன பண்ண என்று ஒ வென்று அழுதான் .ஹேய் குடிச்சு இருக்கியா என்றாள் .ஆமா டேவிட் இல்லாததால இனி மேல் இந்த நெப்போலியன் தான் எனக்கு பிரண்டு என்று சொல்லி சிரித்தான் .

அது யாருடா நெப்போலியன் புது பிரண்டு என்று கேட்டாள் .அது சரக்கு பேரு என்று சொல்லி சிரித்தான் .சனியனே உன்கிட்ட ஒரு முக்கியாமான விஷயம் சொல்லனும்னு கூப்பிட்டென் .
சொல்லு என்றான் .நீ அத கேக்குற நிலைமல இல்ல அதனால நாளைக்கு காலைல எங்க வீட்டுக்கு வந்து டிபன் சாப்பிட்டுட்டு அப்புறம் நீயும் அவரும் ஒண்ணா ஆபிஸ் போங்க என்றாள் வள்ளி .சரி என்று சொல்லிவிட்டு மீதம் இருந்த சரக்கை குடித்து விட்டு தூங்கினான் .

அடுத்த நாள் காலை எழுந்து வள்ளி சொன்னதற்காகக அவள் வீட்டிற்கு சென்றான் அங்கு மணி சாப்பிட்டு கொண்டு இருந்தான் .விக்கி மிகவும் வருத்தத்துடனும் களைப்போடும் வந்தான் .
என்னடா நைட் புல்லா அடிச்சதுல ஹங் ஓவரா என்றாள் .ஆமா எல்லாம் இந்த டேவிட் பயலாலயும் சுவாதியாலயும் தான் என்றான் .சரி சரி அத பத்தி நம்ம பிறகு பேசுவோம் உங்க ஒட்ட வாய் மச்சான் இருக்காரே அவர் அப்படியே போய் அவரு பெஸ்ட் பிரண்ட் கிட்ட சொல்லிடுவார் என்று வள்ளி தன் புருஷனை குத்தி காட்டினாள் .
அதை கேட்ட மணி நான் ஒன்னும் ஓட்ட வாய் கிடையாது என்றான் .ம்ம் உங்கள பத்தி தெரியாதாக்கும் நேத்து டேவிட் இந்த மேட்டர சொன்னதுல இருந்து இந்நேரம் உங்க ஆபிஸ்ல மட்டும் ஒரு பத்து பேர்கிட்ட விக்கியும் சுவாதியும் லவ் பண்றாங்கன்னு போன் பண்ணி சொல்லிட்டிங்க அப்புறம் என்ன என்றாள் .
உடனே அதை கேட்ட விக்கி டேய் இத ஏண்டா ஆபிஸ் புல்லா சொன்ன நானும் சுவாதியும் லவ் எல்லாம் பண்ணலடா என்றான் விக்கி
அப்புறம் எப்படிடா செக்ஸ் வச்சுகிட்டிங்கே என்று புரியமால் கேட்டான் .டேய் நீ இன்னும் தமிழ் நாட்ட விட்டு வரல டா இது மும்பைடா என்று சொல்லிவிட்டு ஓட்ட வாய் என்று திட்டினான் .
சரி சரி என் ஆள திட்டாம நீ டைனிங் டேபிள் போயி சாப்பிட உக்காரு என்றாள் வள்ளி .முதல சாப்பாட போடு நான் நைட்டும் சாப்பிடல என்று சொல்லிவிட்டு
டைனிங் டேபிலில் போயி உக்காந்தான் .
தட்டை வைத்து விட்டு முதல இந்த ச்வீட் சாப்பிடு என்று ஸ்வீட் வைத்தாள் .என்ன விசேசம் சிஸ் எதுவும் உனக்கு இல்லாட்டி மச்சானுக்கு எதுவும் பிறந்த நாளா என்றான் விக்கி .
அவள் வெட்கப்பட்டு கொண்டே ஏங்க இங்க வாங்க என்று அவள் புருஷன் மணியை கூப்பிட்டாள் .பின் வள்ளி மணியின் தோளில் சாய்ந்து கொண்டு எங்க ரெண்டு பேரையும் பாத்தா எதுவும் வித்தியாசமா இருக்கா என்றாள் .
அவன் அவர்கள் இருவரையும் பார்த்தான் இருவரும் ஒருவர் தோளில்சாய்ந்து கொண்டு வெட்கப்பட்டு கொண்டு ஈ என்று பல் இளித்து கொண்டு இருந்தார்கள் .
உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு தெரியுது என்று சொல்லி சிரித்தான் .டேய் அது இல்லாடா எங்க வீட்டுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு புது ஆள் வர போகுது என்று வெட்கப்பட்டு கொண்டே சொன்னாள் .யார் வர போறாங்க என்று இன்னும் புரியமால் கேட்டான் விக்கி .
அவள் செல்லமாக கோபப் பட்டு கொண்டே அவனடிம் உன் மருமகன் வர போறான் என்று சொல்லி வெட்கப்பட்டாள் .