நண்பனின் காதலி – 2 98

நீங்க ஸ்கேன் எடுத்துட்டின்களா என்றாள் .
ஸ்வாதி இல்லை என்றாள் .முதல அத எடுத்து பாருங்க அப்பதான் அதுல குழந்தையோடு மூவ்மென்ட் பாத்து உங்களுக்கே பிடிச்சு போகும் என்றாள் அந்த பெண் .
அதன் பின் மீண்டும் அந்த குழந்தை சுவாதியை பார்த்து சிரித்தது .இவளும்
பதிலுக்கு அந்த குழந்தையை பார்த்து சிரித்தாள் .பின் அங்கு உள்ள குழந்தைகள் படங்கள் எல்லாத்தையும் பார்த்தாள் .பின் அவள் சேரில் உக்காந்து தன் வயிற்றை தடவி பார்த்தாள்
அவள் வயற்றில் இருந்து ஒரு குழந்தையின் குரல் கேட்டது அவளுக்கு அம்மா என்னையே கொன்னுடாதம்மா ப்ளிஸ் என அக்குழந்தையின் குரல் அவளுக்கு கேட்டது.அதை கேட்ட அவள் மீண்டும் அவள் வயிற்றை தடவி கொண்டே யாருக்கும் தெரியாதவாறு மெல்ல கண்ணிர் விட்டாள் .
பின் அவளை உள்ளே கூப்பிட்டர்கல் .அவள் உள்ளே போகும் முன் தன் வயிற்ரை தொட்டு கொண்டு தன் குழந்தையிடம் அம்மா உன்னையே ஒன்னும் பண்ண மாட்டேன்டா செல்லம் நீதான் இப்ப இருந்து எனக்கு ஒரே சொந்தம் நீதான் எப்பவும் அம்மாவுக்கு உயிரு அதனால பயப்படாம இருடா தங்கம் என்றாள் மனதிற்குள்ளே
பின் உள்ளே சென்றாள் அவள் உள்ளே போன போது முதல் நாள் விக்கியிடம் பேசிய ஆண் டாக்டர் இல்லை அவரின் மனைவியான பெண் டாக்டர்தான் இருந்தார் .
சுவாதி உள்ளே போனதும் அந்த டாக்டரிடம் டாக்டர் நான் அபார்சன் பண்ணல என்றாள் தன்னை மீறி அழுதுகொண்டே .டாக்டர் அபார்சன் பண்ணாம இருக்க எதுவும் புருஷன் அனுமதி வேணுமா என்றாள் .அதை கேட்டு டாக்டர் சிரித்தார் .
என்னம்மா முதல புருசனுக்கு பயந்து அபார்சன் பண்ண ஒத்துகிட்டு இப்ப வெளியே இருக்க குழந்தைகள பாத்ததும் மனசு மாறிட்டியா என்றார் சிரித்து கொண்டே
அவள் அழுதுகொண்டே ஆமாம் டாக்டர் ப்ளிஸ் எனக்கு அபார்சன் வேணாம் என்றாள் .அழுகாத அம்மா இந்த காலத்து புருசங்கே எல்லாம் பிள்ள பெத்துகிட்டா பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்க முடியாதுன்னு அபார்சன்பண்ண சொல்றாங்கே.அவங்களுக்கு சந்தோசம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்

ஆனா பொண்ணுகளுக்கு அதுக்கு மனசு வராது தான் கருவ ஆழிக்க ஏன்னா அவ இரக்க குணம் படைச்சவ என்றார் .

சரி டாக்டர் நான் இப்ப குழந்தையே அழிக்காம என் வயித்துகுல்லேயே வளக்க புருஷன் சம்மதம் வேணும்மா என்றாள் .

இங்க பாரும்மா அழிக்கத்தான் புருஷன் சம்மதம் வேணும் வளக்க உன் சம்மதம் மட்டும் இருந்தா போதும் என்றார்/