நண்பனின் காதலி – 2 99

இல்ல விக்கி ஒரு உயிர கொல்றது பாவம் விக்கி என்றாள் சுவாதி .ஒ ஒ உயிர கொல்றது பாவம்ணா நம்ம சிக்கன் மட்டன் எல்லாம் சாப்பிட முடியாது என்று சிரித்து கொண்டே சொன்னான் .
அதை பார்த்து கடுப்பான சுவாதி அதுவும் இதுவும் ஒண்ணா விக்கி என்றாள் கோபத்தோடு . ஓகே ஓகே நீ சொல்றப்படி அத ஒரு உயிறவா எடுத்துகிருவோம் .அது என் மூலமா வர போற குழந்தைன்னா அது கண்டிப்பா என்னையே மாதிரிதான் இருக்கும் என்னையே மாதிரி இன்னொருத்தன் இந்த நாட்டுக்கு தேவையா என்றான் .

அவள் ஒரு வேலை அது என்னையே மாதிரி நல்ல புத்தியோடு இருந்துச்சுன்னா என்றாள் .அவன் கடுப்பாகி என்னையே மாதிரி உன்னையே மாதிரி அப்படிங்கிறது எல்லாம் அப்புறம் பாப்போம் .முதல பிரக்டிகலா யோசிச்சு பாரு குழந்தை பிறந்தா எப்படி வளப்ப என்ன பண்ணுவ முதல்ல உன்னயே சுத்தி இருக்கவங்க என்ன சொல்வாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தைன்னா உன்ன தப்ப பேச மாட்டங்க

நான் கண்டிப்பா உன்ன கல்யாணம் பண்ண மாட்டேன் .இன்னைக்கு மட்டும்தான் உனக்கு ஹெல்ப்க்கும் வந்தேன் இனி மேல் அதுவும் வர மாட்டேன் .

என்னையே விடு நீ இப்படி ப்ரக்னட் ஆனது தெரிஞ்சா உங்க அப்பா அம்மா என்ன சொல்வாங்க என்று அவன் சொன்ன போது அதுவரை அமைதியாக இருந்த சுவாதி எனக்கு அப்பா அம்மா யாரும் இல்ல என்றாள் கோபத்தோடு .

ஏன் இறந்துட்டாங்களா என்று சாதாரணமாக கேட்டான் விக்கி .அதை கேட்டு மேலும் கடுப்பான சுவாதி அது உனக்கு தேவை இல்லாத விஷயம் என்றாள் .
சரி எது எப்படியோ இத நீ யோசிக்காம உடனே அபார்சன் பண்ணிடு அதான் உனக்கு நல்லது ஏன்னா உனக்கு இன்னும் வயசு இருக்கு இளமை இருக்கு இப்ப என்ஜாய் பண்றாத விட்டுட்டு உக்காந்து குழந்தை பெத்துகிட்டு கஷ்டப்பட போறியா

அது மட்டும் இல்லாம குழந்தை பெத்துகிட்டா பொண்ணுகளுக்கு அழகு வேற குறையுமா நீ ஏற்கனவே சுமாராத்தான் இருக்க என்று அவன் இழுக்கவும் சுவாதி அவனை முறைத்து பார்த்தாள் ஓகே ஓகே முறைக்காத அழகாதான் இருக்க அந்த அழக கேடுத்துக்கனுமா சொல்லு என்றான் .

பின் அங்கு சிறிது நேரம் அமைதி நிலவ என்ன சுவாதி உடனே அபார்சன் பண்ணறியா என்றான் .என்னையே கொஞ்ச நேரம் தனியா விடுறியா விக்கி நான் கொஞ்ச தனியா யோசிக்கணும் என்றாள் ,

ஓகே எவளவு நேரம் வேணும்னாலும் யோசி ஆனா முடிவு மட்டும் நான் சொன்னத எடு என்றான் .சரி நான் வரேன் என்று அவன் சொல்லிவிட்டு கிளம்ப சுவாதி அந்த பார்க்கில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தாள் .

விக்கி எப்போதும் போல அடுத்த நாள் வேலைக்கு போனான் .ஆனால் அவனால் சுவாதி கர்ப்பமாகி இருக்கிறாள் அதற்கு அவன்தான் காரணம் என்பதையும் எண்ணி கொண்டு இருந்தான் .

என்னடா இது நாம இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுகள போட்ருக்கோம் .ஆனா எவளும் இந்த மாதிரி வயத்த தள்ளிகிட்டு நம்ம கிட்ட வரலையே.இந்த சுவாதிதான் இப்படி பண்ணிட்டா .சே இந்த சுவாதியால எப்பயுமே இம்சைதான் .