நண்பனின் காதலி – 2 98

சுவாதி பெயரை கேட்டதும் மணி சிரித்து கொண்டே என்னடா அன்னைக்கு லவ் இல்லேன்னா அப்புறம் இன்னைக்கு ஆபிஸ்க்கு எல்லாம் வரா என்ன விசயம் என்றான் மணி .

ஐயா BBC ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல சும்மா என்கிட்ட கொஞ்சம் பணம் கேக்க வந்துருக்கா நீ பாட்டுக்கு கண்டதையும் கறபனை பண்ணி ஆபிஸ் புரா பரப்பி விட்றாத உன்ன கெஞ்சி கேட்டுகிறேன் என்று சொன்னான் விக்கி .

சரிடா நீ சொன்னாத நான் நம்பிட்டேன் என்று சொல்லி சிரித்தான் .அவனை கோபத்தோடு முறைத்து விட்டு அவன் ரூமை விட்டு வெளியே வந்தான் .வெளியே அவன் ஆபிசில் இருக்கும் மற்றவர்களும் ஒரு கிண்டலாக சிரித்தனர் .

இவள யாரு ஆபிஸ்க்கு எல்லாம் வர சொன்னது என்று கோபத்தோடு போனான் .

உன்னையே யாரு இங்கலாம் வர சொன்னா என்று அவளை பார்த்ததும் கத்தினான் .உனக்கு ஒரு மணி நேரமா நான் போன் ட்ரை பண்ணேன் பிஸின்னே வந்துச்சு எவ கூடயாச்சும் கடலை போட்டுகிட்டு இருந்து இருப்ப

அதான் உன்னயே தேடி நானே வந்துட்டேன் என்றாள் சுவாதி ,
சரி என்ன விஷயம் என்றான் வெறுப்போடு .நீ சொன்ன மாதிரி அபார்செனே பண்ணிரலாம்டா என்று சொன்னதும் விக்கியின் முகம் மலர்ந்தது .

அதுக்கு நீ இன்னொரு தடவ என் புருசனா நடிக்கணும் சோ வரியா என்றாள் .
ஒ சுவாதி தாரளாமா வரேன் என்றான் சிரித்து கொண்டே .

எப்ப போவோம் என்றாள் .இப்பயே நான் போயி ஆபிஸ்ல பர்மிசன் வாங்கிட்டு வரேன் என் கார்லயே போவோம் என்றான் .

பின் இருவரும் மீண்டும் மருத்தவமனைக்கு போனார்கள் .

இரண்டு பேரும் மீண்டும் அதே மருத்தவமனைக்கு திரும்ப போனார்கள் ,அவர்களை பார்த்ததும் அந்த டாக்டர் பெண்மணி சந்தோசத்தோடு அவர்களை வரேவேற்றார் .வாங்க புது பேரெண்ட்ஸ் என்ன விசயம் எதுவும் சந்தேகமா என கேட்டார்

எதுல வேணும்னாலும் சந்தேகம் கேளுங்க சொல்றேன் ஆனா நான் முன்னாடியே சொன்ன மாதிரி எந்த குழந்தைன்னு மட்டும் வயத் துக்குள இருக்க வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி சிரித்தார் .
ஆனால் விக்கி சுவாதி ரெண்டு பேரும் சிரிக்கமால் அமைதியாக இருந்தனர் .என்ன மிஸ்டர் அண்ட் மிசஸ் சுவாதி ரெண்டு பேரும் டல்லா இருக்கீங்க என்ன விசயம் என்று டாக்டர் கேட்டார்.
டாக்டர் எங்க ரெண்டு பேருக்கும் இப்பதைக்கு குழந்தை வேணாம்னு நாங்க ரெண்டு பேரும் பீல் பண்றோம் அதனால என்று சுவாதி இழுத்தாள் .
அதனால என்னையே அபார்சென் பண்ண சொல்றிங்களா என்று டாக்டர் ஒரு மாதிரியாக கேக்க ரெண்டு பேரும் ஒன்றாக ஆமா டாக்டர் என்றார்கள் .
ரெண்டு பேரையும் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு ஏன் ரெண்டு பேரும் என்ன வேலை பாக்குறிங்க என டாக்டர் கேட்டார் .
நான் இங்க இருக்க தமிழ் எப் எம்ல ஆர் ஜே வா இருக்கேன் .இவரு gnb கம்பெனில அசிஸ்ன்ட் மேனேஜரா இருக்காரு என்றாள் .
அப்புறம் என்ன ரெண்டு பேரும் நல்லாத்தானே சம்பாதின்கிரிங்கே அப்புறம் என்ன குழந்தை பெத்துகிரதள கஷ்டம் உங்களுக்கு
இந்த காலத்துல வெறும் ரெண்டாயிரம் மூனாயிரம் சம்பளம் வாங்குரவெங்கலெ சந்தோசமா குழந்தை பெத்துகிறாங்க உங்களுக்கு என்ன
நல்லாதனே சம்பாதின்கிரிங்கே அப்புறம் என்ன குழந்தைய வளக்க கஷ்டம் என்றார் டாக்டர் .
இல்ல டாக்டர் இப்பதைக்கு வேணாம்னு என்று சுவாதி மீண்டும் இழுத்தாள் .இப்பதைக்கு வேணாம்னா பின்ன எப்ப அறுபது வயசுலேயே பெத்துக்க போறீங்க ரெண்டு பேரும் .என்று கோபப்பட்டார் .
இங்க பாருங்க முத குழந்தைங்கிறது கிட்டத்தட்ட தெய்வம் மாதிரி அத வேணாம்னு சொல்லாதிங்க என்று டாக்டர் உருக்கத்தோடு சொல்ல .