நண்பனின் காதலி – 2 98

அப்புறம் இந்த பொண்ணுக விசயத்துல வீக்கா இருக்க எல்லா ஆம்பிளையும் அவனுக்கு குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் பொறுப்பா மாறிடுவாங்க .குழந்தைன்கிற வார்த்தையே கேட்டதும் சுவாதிக்கு ஆர்வம் தோற்றி கொண்டது .நிஜமாவே குழந்தை பிறந்ததும் மாறிடுவாங்களா ஆம்பிளைக என்றாள் .
என்னடி அப்படி கேக்குற குழந்தைகதாண்டி நம்ம புருசனா நம்ம கூட தக்க வைக்க ஒரே வழி குழந்தைக மட்டும் நமக்கு பிறக்காட்டி நம்மள நாய் கூட மதிக்காது என்றார் .
என்ன டாக்டர் சொன்ன அதே வார்த்தைய அக்காவும் சொல்றாங்கன்னு சுவாதிக்கு ஒரு மாதிரியாக மனம் இளகியது .
என் வீடுகாரரையோ எடுத்துக்கோ ஆரம்பத்துல அவருக்கு என்னையே பிடிக்கவே பிடிக்காது ஆனா குழநதைக பிறந்ததுக்கு அப்புறம் ஆளே மாறிட்டாரு இப்ப என்னைய ரொம்ப விரும்பராறுன்னா அதுக்கு காரணம் அவருக்கு நான் குழந்தை பெத்து கொடுத்துதான்
இன்னைக்கு நான் மும்பைலயும் என் வீட்டுக்காரார் டெல்லிலயும் தனிதனியா இருக்கோம் ஆனா இன்னைக்கும் என் வீட்டுக்காரர் நான் என் குழநதைக எல்லாரும் வாரத்துல ரெண்டு நாள் மீட் பண்ணாலும் நாங்க எவளவு சந்தோசமா இருக்கோம் தெரியுமா அதாண்டி வாழ்க்கை
அது எல்லாம் இந்த காலத்து பசங்களுக்கும் பொண்ணுகளுக்கும் எங்க புரிய போகுது .உங்களுக்கு எல்லாம் பார்ட்டி செக்ஸ்ம் லவ்வும் மட்டும்தான் வாழ்கைன்னு நினைக்கிறிங்க சரி நான் போயி தூங்குரென் நீயும் தூங்கு என்று சொன்னார்கள் .
ஆனால் சுவாதிக்கு தூக்கம் வரவில்லை ,அவள் அந்த அக்கா சொன்னதையும் காலையில் ஆஸ்பத்திரியில் டாக்டர் சொன்னதையும் நினைத்து அவள் குழம்பி போனாள் .கருவை அழிப்பதா வேண்டாமா என்று இரவு முழுதும் யோசித்தாள் .

அடுத்த நாள் அவர்கள் சொன்னது எல்லாம் வைத்து நைட் சுவாதி கருவை அழிக்க வேண்டாம் என்றுதான் நினைத்து இருந்தாள் .ஆனால் காலையில் எழுந்த போது அவள் விக்கி சொன்னதுபடி யோசித்தாள் அவன் சொன்னது
படியும் பார்த்தால் குழந்தை பெறுவதிலும் வளர்ப்பதிலும் உள்ள சிக்கலை யோசித்து பார்த்தால் ஏன் மாடர்ன் குந்தி தேவியாக மாற வேண்டும் என்று நினைத்து கொண்டு அவள் கருவை கலைக்க முடிவு செய்து ஆஸ்பத்திரி சென்றாள் .
ஆஸ்பத்திரிக்கு போனாள் .அங்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்று சொன்னாதால் வெளியே காத்து இருந்தாள் .அவள் முதல் முறை அபர்சென் பண்ண போவாதால் பயத்தில் தலையில் கை வைத்தவாறே குனிந்து இருந்தாள் .
அப்போது யாரோ அவள் பின்னால் இருந்து அவள் முடியை மெல்ல பிடித்து இழுப்பது போல் இருந்தது யார் என்று அவள் கடுப்பில் திரும்பி பார்த்தாள் அங்கு ஒரு ஆறு மாத குழந்தை அவள் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு இவளின் முடியை அதன் பிஞ்சு கைகளால் பிடித்து இழுத்து கொண்டு இவளை பார்த்து சிரித்தது .
இவளும் பதிலுக்கு சிரித்தாள் ,அந்த குழந்தையின் கையில் சிக்கிய தன் முடிகளை விலக்கினாள் சுவாதி .அப்போது அந்த பிஞ்சு விரலின் சபரிசம் அவளுக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத தாய் உணர்வை தந்தது
அப்போது அக்குழந்தையின் அம்மாவும் திரும்பி பார்த்தாள் ,என்ன உங்க முடியையும் பிடிச்சு இழுத்துட்டானா என்று சிரித்து கொண்டே அந்த குழந்தையை ரவுடி பையலே எத்தன தடவ சொல்றது அடுத்தவங்க முடிய பிடிச்சு இழுக்க கூடாதுன்னு என்று அந்த குழந்தையை அந்த தாய் கொஞ்சினாள் ,
பின் சுவாதி பக்கம் திரும்பி நீங்க என்ன முத தடவ கன்சீவ் ஆகிருக்கெங்கலா என கேட்டாள் .சுவாதி அவளிடம் உண்மையை மறைக்கவில்லை அதனால் ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்டாள் .
அவள் சிரித்து கொண்டே அதான் உங்க முகத்துல பய ரேகை தெரியுதே .இத பாருங்க முத குழந்தைக்கு எப்பவுமே நம்மள மாதிரி லேடிஸ்க்கு பயம்
இருக்கத்தான் செய்யும் ஆனா நீங்க கஷ்டப்பட்டு பத்தவாது மாசம் குழந்தை பெத்து கையில வாங்கிட்டேங்கேனா எல்லாம் மறந்து போகும் .ஏன் உங்க புருசன கூட மறந்துடுவீங்க அப்புறம் குழந்தை தான் நம்ம உலகம்ன்னு மாறிடுவோம் அதனால பயப்படாம இருங்க
இருந்தாலும் நீங்க பயப்படாம இருக்க ஒரு வழி சொல்றேன் .