சுகமதி – Part 1 347

நான் சுதன். என் அமமாவுக்கு நான் ஒரே பையன். செகண்ட் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் காலேஜிலிருந்து வந்ததும் நலனைப் பார்க்கப் போனேன்.
”நலன்..” என்று குரல் கொடுத்து விட்டு கதவருகே நின்று எட்டிப் பார்த்தேன்.

உள்ளிருந்து..
”வாடா..” என்றான் நலன். அவன் காலேஜ் முடித்து விட்டு.. சரியான வேலை கிடைக்காமல்.. அவன் அப்பாவுடன் சேர்ந்து.. கடை வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தான்.
இந்த நேரத்தில் அவன் வீட்டில்தான் இருப்பான்.
அதற்கு காரணம் காதல்..!!
நான் அவன் வீட்டில் நுழைந்தேன். வீட்டில் அவன் மட்டும்தான் இருந்தான். டிவியில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது.
”உக்கார்றா..” என்றான் என்னைப் பார்த்து.
நான் சேரில் உட்கார்ந்தேன்.
”காலேஜ்லருந்து இப்பதான் வர்றியா..?” என்று என்னை பார்த்து கேட்டான்.
”ம்ம்..” என்று டிவியைப் பார்த்தேன்.
”போலாமா..?”என்றான்.
”எங்க..?” என்று நான் அவனை பார்த்தேன்.
”என்னடா கேள்வி இது..? நம்மாளு வருவா இல்ல..?” என்றான்
நான் சிரித்து ”ம்ம்..சரி..”என்றேன்
உடனே எழுந்து விட்டான்.
”உக்காரு பிரஷ்ஷப் ஆகிட்டு வந்தர்றேன்..” என்று ஒரு துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனான்.
அவன் வெளியே போன இரண்டாவது நிமிடம்.. காலேஜ் முடிந்து வந்தாள் நலனின் தஙகை
கலையரசி.
என்னைப் பார்த்து புன்னகைத்து..
”ஹாய்..” என்றாள்.
”ஹாய். ” என்று நானும் புன்னகைத்தேன்.
”காலேஜ் விட்டாச்சா..?” என்று கேட்டேன்.
”ம்ம்..” என்றாள். அவள் பெண்கள் கல்லூரியில் முதல் வருடம் படிக்கிறாள்.
மாநிறம்.. அளவான உயரம்.. கொஞ்சம் வாயாடி. நிறைய திமிர் உண்டு..! என்னை அடிக்கடி வம்புக்கு இழுப்பாள்..!
தோளில் இருந்த பேகை கழற்றி தொப்பென கட்டில் மீது போட்டாள். திரும்பி டிவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. கட்டிலில் உட்கார்ந்தாள்.
அவளது முகத்தில் லேசான வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன. அவள் மார்பில் இருந்த துப்பட்டாவை உருவி எடுத்து முக வியர்வையைத் துடைத்தாள்.