சுகமதி – Part 1 347

”ஒன்னும் ஆகாது இல்லடா..?”
”பயந்தா.. பழம் திங்க முடியாது மச்சி.. நாமெல்லாம் கொட்டையவே சப்பற ஆளுக.. நீ என்னமோ.. இதுக்கு போயி…”
”சரி… எங்க வெச்சு பேசறது..?”என நான் கேட்க..
”பாராளுமன்த்துல ஏற்பாடு பண்ணட்டுமா..?” என்று கிண்டலாக கேட்டான்.
நான் சிரிக்க. …
”ஈவினிங் வா… நான் ஏற்பாடு பண்ணிர்றேன்..” என்றான்.
மேற்கு வானில் நிலா தெரிந்தது. மாலை நேரக்காற்று சற்று வேகம் அதிகமாக வீசிக்கொண்டிருந்தது.
நானும் நலனும்.. ஊரைவிட்டு தள்ளி இருந்த.. ஒரு காட்டுக்குள்.. காத்திருந்தோம்.
இரவின் மெல்லிய இருளில் அக்கா தங்கை இரண்டு பேரும் வந்தார்கள்.
”ம்ம்.. வந்துட்டாளுகடா…” என்றான் நலன்.
எனக்குள் லேசான ஒரு பதட்டம் தோண்றியது.
பக்கத்தில் வந்ததும் முதலில்..
”ஹாய்…” சொன்னது சுகமதிதான்.
நானும் ”ஹாய்..” சொன்னேன்.
”ம்ம்.. பேசிக்கோடா..” என்றான் நலன்.
அவள் தங்கையைப் பார்த்தேன். தலையில் சூடிய பூவின் மணம் கமகமக்க.. என்னைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்ப்பது போல நின்றிருந்தாள். லெக்கின்ஸில் இருந்தாள்.
என் படபடப்பு மேலும் அதிகமாகியது. இதயம் ‘பக்.. பக் ‘ என அதிர்ந்தது.
”தேங்க்ஸ்..” என்றேன் சுகமதியிடம்.
”ம்ம்.. பரவால்ல பேசிக்கோங்க..” என்றாள்.
நலன் ”நாம நின்னா.. அவங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும்.. வா… நாம அப்படி போயிடலாம்…” என்று சுகமதியை தனியே கூட்டிப்போனான்.
சிறிது தள்ளி.. மார்பில் கைகட்டி நின்றிருந்தாள் மலருபா.
தயக்கத்துடன் அவள் பக்கத்தில் போனேன்.
”ஹாய்..” என்று இழித்தேன்.
அவளும் திரும்பி என்னைப் பார்த்து சிரித்து..
”ஹாய்..” சொன்னாள்.
தயாராக கையில் வைத்திருந்த ரோஜாவை அவளிடம் நீட்டினேன்.
”ஒன்லி.. ஃபார் யூ..”
கை நீட்டி வாங்கினாள் ”தேங்க் யூ..”
” யூ..ர்.. ஸோ…ஸ்வீட். .”
”ம்ம்..”
”ஐ லவ்… யூ..”
”மீ..டு..”
எனக்கு உற்சாகம் பீறிட்டது. அப்படியே அவளை வாரி அணைத்துக் கொள்ள வேன்டும் போலிருந்தது.
முதல் சந்திப்பு என்பதால் நான் அவசரப் படவில்லை.
”நீ.. நீ.. ரொம்ப அழகா இருக்க..” உளறத் தொடங்கினேன்.
”தேங்க்ஸ்…”