சுகமதி – Part 1 347

”பை..!” என்றவள் ”எவகிட்டயும் செருப்படி வாங்காம நடந்துக்குங்க ரெண்டு பேரும்..’ என்று சிரித்தாள்.
‘நங் ‘ கென்று அவள் தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு வெளியேறினான் நலன்..!
பஸ் ஸ்டாப்பை விட்டு சிறிது தள்ளிப் போய் நின்றிருந்தோம்.
டியூசன் முடிந்து வந்தாள்.. நலனின் காதலி.. சுகமதி..!
அவளுடன் அவளது தங்கை.
அவள்கள் பஸ் விட்டு இறங்கி.. முதுகில் ஸ்கூல் பேகுடன் நடந்து வந்தனர்.
”வர்றாளுகடா..” என்றான் நலன்.
காதலியை பார்த்ததும் அவன் முகம் மலர்ந்து விட்டது.
அவளது கண்களும்.. அவனைப் பார்த்துவிட்டன.
உடனே அவள் முகத்தில் வெட்கம் படற.. இதழ்களில் குறுஞ்சிரிப்பு தவழ்ந்தது.
”என்னமா லுக்கு விடறா பார்ரா… முட்டைக்கண்ணி..” என்றான்.
அவள் தங்கையும் எங்களைப் பார்த்தாள்.
இருவரும் அருகில் வந்தனர்.
”ஹாய்…” என்றான் நலன்.
”ஹாய்…” என அவளும் அடிக்குரலில் சொன்னாள்.
”என்ன இங்க..?” என்று இன்று மட்டும்தான் நாங்கள் இங்கு நிற்பது போலக் கேட்டாள்.
”உன்ன பாக்கத்தான்..” என அவனும் வழிந்தான்.
”என்னையா.. எதுக்கு..?”
”என் தேவதை தரிசனம்..” என அவன் சொன்னதும் அவள் கண்கள் அகலமாகின.
அவள் தங்கை…
”அயயே… ரொம்ப வழியுது.. தொடைச்சுக்குங்க..” என்றாள் கிண்டலாக.
நலன் ”அப்படியா குட்டி… உன் கர்ச்சீப்ப குடு தொடைச்சிக்கறேன்..” என்று பதிலுக்கு கிண்டல் செய்தான்.
அவள் மூக்கு விடைத்தது.
”நான் ஒன்னும் குட்டி இல்ல.. எனக்கு பேரு இருக்கு.”
”ஏய்.. பேசாம இருடி…” என்று தன் தங்கையை அடக்கினாள் சுகமதி.
நலனை பார்த்து…
”சரி நான் போறேன்.. யாராவது பாத்துட்டா வம்பு…” என்றாள்.
”ம்ம்.. பை ..! கடைக்கு வர்றப்ப நீ மட்டும் தனியா வா..! இந்த உம்மனா மூஞசிய கழட்டி விட்று..” என்றான் நலன்.