காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் – End 87

“வித்யாவை காப்பாத்த ஏதாச்சும் வழி இருக்கா”

“சங்கர் கெட்டவனா இருந்தாலும் சட்டத்தை கையில எடுத்துக்கிட்டது தப்பு தான். அது இல்லாம கோர்ட்லயே, நிறைய சாட்சி இருக்கு பாலன்”

“ஓஹ் அவளை காப்பாத்த வேற வழியில்லையா”

“ஒரு வழி இருக்கு.. ஆனால்”

“ஆனால் என்ன”

“அவங்களுக்கு கொஞ்சம் மனநலம் சரியில்ல, டாக்டர் கிட்ட ட்ரீட் மென்ட்எடுத்துட்டு இருக்காங்க அப்படின்னு ப்ரூ பண்ணினா…”

“வாட், வித்யாவை பைத்தியம்னு சொல்ல சொல்லுறீங்களா”

“நீங்க தானே வேற வழி ஏதாச்சும் இருக்கான்னு கேட்டீங்க. இதை விட்டா வேறவழியில்லை பாலன்”

“தேங்க்ஸ்”

அங்கிருந்து கிளம்பி மீண்டும் வீட்டிற்கு வந்தேன், சர்மாவிற்கு போன் செய்தேன்.

“சொல்லுடா பாலன்”

“உன்கிட்ட கொஞ்ச நேர்ல பேசணும் எப்போ பிரீ”

“இன்னைக்கு முழுக்க பிசி தாண்டா. என்ன விஷயம்? எனிதிங் அர்ஜென்ட்”

“ரொம்ப அவசரம் ஒன்னும் இல்லை நேர்ல பேசணும்”

“அப்படின்னா நாளைக்கு காலையிலே உன்னோட வீட்டு பக்கம் வர வேலை இருக்கு அதை முடிச்சிட்டு நானே உன் வீட்டுக்கு வரேண்டா. உனக்கு ஓகே தானே”

“ஓகே தான்”

அடுத்து என்ன செய்வேதென்று தெரியாமல் க்ளாசில் விஸ்கியை ஊத்தி விட்டு டீவியை ஆன் செய்தேன். அதில் சங்கரின் போட்டோவை போட்டு அவன் எப்படி எல்லாம் அவளை மிரட்டி, ஏமாற்றி பணம் சம்பாதித்தான் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். அவள் முகம் தெரியாதவண்ணம் ப்ளர் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது எனது வீட்டின் காலிங் பெல் அடித்தது. நான் எழுந்து கதவை திறந்தேன், வெளியே அர்ச்சனா ஒரு வெள்ளை நிற முழு நீள கவனில் இருந்தாள்.