காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 4 72

“ஆபீஸ் போகணும், விடு வித்யா” என் கையை விலக்கி விட்டு அவர் பாட்டுக்கு ரெடியாகி கொண்டு இருந்தார். சே இவளோ நாள் ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தா இவரு என்னடானா கண்டுக்காமே அவரு பாட்டுக்கு ஆபீஸ் போறதுல குறியா இருக்காரு, அட்லீஸ்ட் ஒரு 5 நிமிசமாச்சும் கொஞ்சி இருந்தா என்னவாம். எனக்கு பீறிட்டு வந்த அழுகையை மறைத்து பாத்ரோம் சென்று ஷவரில் நின்று கொண்டு அழுதேன். அப்படியே குளித்து முடித்து கீழே வருவதுற்குள் அவர் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். சாப்பிட்டு எழப்போன அவரை நிறுத்தி வேலைக்காரியிடம் இருந்து தட்டை வாங்கி ஒரு இட்லி வைத்தேன்.

“வேணாம் வித்யா, ஆபீஸ் லேட்டா ஆச்சு”

“ஒரு இட்லி சாப்பிட்டு போறதுலே ஒன்னும் ஆகாது. பொண்டாட்டி ஆசையா வக்கிரா சாப்பிட்டு போ”

“அம்மா உனக்கு தெரியாது”

“சொல்லப்போனா கல்யாணம் பண்ணி 10 நாளில் விட்டு ஒரு மாசம் சிங்கப்பூர் போய்ட்டு வந்து இன்னைக்கு நீ ஆபீஸே போக கூடாது, இதுல ஆஃபீஸாம் பெரிய புடலங்காய்” சொன்னது அத்தை.

அத்தை அப்படி சொல்லியதும் க்ளுக் என்று சிரித்துவிட்டேன். அவர் என்னை முறைத்துவிட்டு வேகவேகமாக சாப்பிட்டு விட்டு கிளம்பினார்.

“அவன் சின்ன பிள்ளையிலே இருந்தே ஏதாச்சும் வேலை கொடுத்தா அதை எப்படியும் வெற்றிகரமா முடிக்குறேன்னு ரொம்ப முயற்சி பண்ணுவான். இந்த மனுஷன் 10 வருசமா நஷ்டத்துல ஓடிக்கிட்டு இருக்கிற கம்பெனியை இவன் கையிலே கொடுத்து பாவம் ரொம்ப கஷ்ட படுறான்.” அத்தை சொல்லி வருத்தப்பட்டார்.

நான் சிரித்தேன்.

“அவன் கொஞ்சம் முன்கோபி, நீ தான் அனுசரிச்சு நடத்துக்கனும்மா. பாக்குற பொண்ணை எல்லாம் ஏதாச்சும் சொல்லி அலைகழிச்சிட்டே இருந்த இவனுக்கு கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே என்னோட மூச்சி நின்னு போயிடும்னு நினைச்சேன் உன்னை பார்த்த உடனே ஓகே சொல்லிட்டான். எனக்கு இப்போ ஒரு ஆசை தான் வித்யா நான் என்னோட மூச்சி நிக்குறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடுத்தா நிம்மதியா கண்ணை மூடிடுவேன்” கண்களில் கண்ணீர் வந்தது.

“ஐயோ அப்படி எல்லாம் பேசாதீங்க”