காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 4 72

ஒருநாள் ஏதோ ஒரு எண்ணத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பேஸ்புக்கில் அக்கௌன்ட் ஓபன் செய்தேன்.

அடுத்த நாள் லாகின் செய்து பார்த்த போது “ஹாய் பாண்டா பாட்டில்” எப்படி இருக்க சுஜியிடம் இருந்து மெஸ்ஸஜ் வந்தது.

சுஜாதா சாயிராம், சன்னி வேல், கலிபோர்னியா என்று இருந்த அவளது ப்ரொபைலில் இருந்த படங்களை பார்த்தேன் ஆளே படு மாடர்ன் ஆகி இருந்தாள்.

“ஹாய் சுஜி, எப்படி இருக்கே” ரிப்லை அனுப்பினேன்.

உடனே ஆன்லைன் வந்து என்னை ஸ்கைப்பில் ஆட் செய்து வீடியோ கால் செய்தாள்.

“ஏய் என்னடி பாண்டா எப்படி இருக்கே”

“நல்லா இருக்கேன்டி. நீ எப்படி இருக்கே”

“நல்லா இருக்கேன் வித்யா”

“ஆமா அங்கே டைம் என்னடி இப்போ” அருகே இருந்த கடிகாரத்தை பார்த்து கொண்டே கேட்டேன்.

“ராத்திரி 11 மணி”

“இங்கே காலையில் 11.30 மணி” அவள் கேட்காமலே சொன்னேன்.

“எப்பா பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சுடி உன்னை. நீ என்னடா னா மணி கேட்டுகிட்டு இருக்கே”

“சாரிடி உன்னோட கல்யாணத்துக்கு கூட வரலை”

“ஆண்ட்டி எல்லாமே சொன்னாங்க வித்யா, டோன்ட் ஒர்ரி. உன்னை எவளோ நாளா பேசுபுக்ல தேடிகிட்டே இருக்கேன் தெரியுமா. உன்னோட வீட்டுல இருந்த லேண்ட்லைனும் டிஷ்கன்னெக்ட் பண்ணிடீங்க போல. அப்பாவை உங்க வீட்டுக்கு அனுப்பி காண்டாக்ட் நம்பர் வாங்கலாம்னு கூட தோணும் ஆனா நீங்க இருக்கீங்களா இல்லையா அப்படின்னு தெரில”

“இப்போ செல் போன் வந்த அப்புறம் யாரு அதை எல்லாம் யூஸ் பண்ணுறாங்க. சரி அதை எல்லாம் விடு உனக்கு எத்தனை பசங்க”

“35 வயசுக்கு அப்புறம் தான் பெத்துக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்”