கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 9 11

என்னை உங்க பொண்ணா வெச்சுப்பேன்னு சொல்லி கூப்பிட்டுக்கிட்டு வந்தீங்க; உங்க புள்ளை ஆடற ஆட்டத்தை நீங்களே பாருங்கன்னு ஒப்பாரி வெப்பேன்; சங்கு … உன் மேல உசுரையே வெச்சிக்கிட்டு இருக்கற என்னை நீ அவமானப்படுத்த மட்டும் நினைக்காதே? எதை வேணா நான் பொறுத்துக்குவேன்; இதை மட்டும் என்னால பொறுத்துக்க முடியாது”. சொல்லியவள் அவன் பதிலுக்கு காத்திராமல் விறு விறுவென தங்கள் படுக்கையறையை நோக்கிச் சென்றாள். அவள் பேசியதைக் கேட்ட சங்கர் ஒரு வினாடி வெலவெலத்துப் போனான். அவள் பேசியதிலிருந்த உண்மை அவனைச் சுட்டது. தலையணையையும், போர்வையையும் எடுத்துக்கொண்டவன், ஹால் விளக்கை அணைத்துவிட்டு, தன் அறையை நோக்கி நடந்தான். வேணி கட்டிலில் அவன் வரவை எதிர்பார்த்து உட்க்கார்ந்து கொண்டிருந்தாள். அவன் உள்ளே வந்ததும் எழுந்து முற்றிலும் ஆறிவிட்டிருந்த பாலை டம்ளரில் ஊற்றி அவனிடம் கொடுத்தாள். அவன் மவுனமாக பாலைக்குடித்தான். அதே டம்ளரில் மீதியிருந்த பாலை ஊற்றி மடக் மடக்கென கண்ணை மூடிக்கொண்டு குடித்தாள். எனக்குத் தெரியும் நீ உள்ளே வந்துடுவேன்னு … கட்டிலை விட்டு எழுந்த வேணி சங்கரை இழுத்து தன் மார்புடன் சேர்த்து அணைத்தாள். அவன் வெற்று மார்பில் தன் இதழ்களை ஒரு முறை ஒற்றினாள். தேங்க் யூ … டியர் … ஐ லவ்வ்வ் யூ சோ மச் … என அவன் காதில் முனகியவள், மீண்டும் கட்டிலில் படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள். மூன்று நிமிடங்களில் சன்னமான குறட்டை ஒலியுடன் அயர்ந்து தூங்க ஆரம்பித்தாள். தூக்கம் கலைந்து கட்டிலில் உட்கார்ந்திருந்த சங்கர், அமைதியாக தூங்கும் தன் மனைவியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆபீசிலிருந்து திரும்பி, முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு, ஹாலுக்கு வந்த சங்கரிடம், வழக்கம் போல் காபியை நீட்டிய வேணி, கண்களைச் சிமிட்டி, குறும்பாக தன் உதடுகளை குவித்து காற்றில் அவனை முத்தமிட்டாள். அதைக்கண்ட சங்கருக்கு, ரத்தம் குப்பென தலைக்கேறியது. முகம் சிவக்க, என்னமா என்னை சீண்டறா? இவளை இந்த வீட்டுல கேக்கறதுக்கு ஆளே இல்லாமப் போச்சு. எல்லாம் எங்கப்பனும், ஆத்தாளும் இவளுக்கு குடுக்கற எடம். ரெண்டு பேரையும் நல்லா கையில வளைச்சுப் போட்டுக்கிட்டிருக்கா. நேத்து ராத்திரி என்னை என்னாமா மிரட்டினா? உன்னை அம்போன்னு விட்டுட்டு ஊருக்குப் போயிடுவேன்னு பூச்சி காமிச்சாளே? உன் அப்பனை கூப்பிட்டு பஞ்சாயத்து வெப்பேன்னு சொல்லி என் ஃப்யூசைப் புடுங்கி வுட்டுட்டா? நானும் பொட்டைப் பய, அந்த வாத்தியை நெனைச்சுக்கிட்டு பயந்துகிட்டு, இவ பின்னாடியே உள்ளே போயிட்டேன். இவ போனா வேற எவளும் கிடைக்க மாட்டாளா? கிடைப்பாளுங்கா … ஆனா இவளை மாதிரி ஒருத்தியை எங்கே போய் தேடறது. இவ உடம்பு மட்டுமா தங்கம்; இவ மனசும் தங்கமாச்சே?
“இங்க நான் வெச்ச நாவல் எங்கப் போய் தொலைஞ்சுது?…” அவன் தனக்குள் முனகியவாறு, நேற்று படித்து, பாதியில் விட்டு வைத்திருந்த புத்தகத்தை இங்குமங்கும், தேடத் தொடங்கினான்.
“அதுக்கு பேரு நாவலா?”… அந்த குப்பையை செண்டர் டேபிள் மேல வெச்சிட்டு போயிடீங்க; மதியானம் உங்க அப்பா ஒரு நிமிஷம் அதை எடுத்து பெரட்டிட்டு, இது என்ன குப்பை; அவனை எதாவது சொல்லிட்டா இந்த வீட்டுல இருக்கற ரெண்டு பொம்பளைங்களுக்கும் பொத்துக்கிட்டு வருது; கல்யாணம் ஆனதுக்கப்புறமும் இந்த கன்றாவியை யெல்லாம் ஏன் இவன் படிக்கிறான்; அப்படி படிக்கறவன் இதை நடுக்கூடத்துல வெச்சிட்டு போயிருக்கானேன்னு கூவிக்கிட்டு இருந்தாரு.”
“உங்களுக்குன்னு தனியா மேஜை மேல தேவாரம், திருவாசகம்ன்னு குவிச்சு வெச்சிருக்கீங்கள்ளா, அதையெல்லாம் விட்டுட்டு, அவன் படிக்கிற சனியனை எல்லாம் நீங்க ஏன் எடுத்தீங்கன்னு உங்கம்மா அவருகிட்ட திரும்பி கூவினாங்க; அப்புறம் நான் தான் நம்ம பெட் ரூமுல கொண்டு போய் வெச்சிருக்கேன்; அவரு சொல்ற மாதிரி செக்ஸ் புக்கெல்லாம் நடு ஹால்லே ஏங்க வெக்கிறீங்க; அது போனா போகட்டும்; இப்ப முதல்ல காபியை குடிங்க” என்று அவனை கொஞ்சியவாறே புன்னகைத்தாள். வேணி, சொன்னதைக் கேட்டதும் சங்கருக்கு ஒரு வினாடி தூக்கி வாரிப் போட்டது; ராத்திரி ரூமை விட்டுட்டு ஹாலுக்கு வந்தப்ப அதை எடுத்துகிட்டு வந்தேன். சோஃபா பக்கத்துல டீப்பாய் மேல வெச்சேன். இவ போட்ட கூப்பாட்டுல வேகமா ரூமுக்குப் போயிட்டேன்; காலையில எடுத்து வெக்க மறந்துட்டேன். எல்லாம் நம்ம நேரம்; அந்த வாத்திக்கிட்ட பேச்சு வாங்க வேண்டியிருக்கு; அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல், அவள் கையிலிருந்த காஃபியை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு, அவள் முகத்தைப் பார்க்காமல், சோஃபாவில் உட்க்கார்ந்துக் கொண்டு காபியை உறிஞ்ச ஆரம்பித்தான். ம்ம்ம் … ஆளு ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறாரு; இன்னும் சூடு குறையல போல இருக்கு; சின்னக்குழந்தை மாதிரி பண்ணிக்கிறான். எவ்வளவு நேரம் தான் இப்படி இருப்பான்? அதையும் தான் நான் பாக்கிறேன்? டேய்! உனக்கு இப்ப நான் சூடு ஏத்தறேன்; வேணி, உதட்டில் மெல்லிய சிரிப்புடன், கண்களில் விஷமத்தனத்துடன், தன் நாக்கை துருத்திக் கொண்டு அவன் எதிரில் நாலு முறை வேலை எதுவுமில்லாமல் மேலும் கீழுமாக வளையவந்தாள். கையை உதறி தங்க வளையல்களை கிணுங்கவிட்டாள்.
“என்னங்க; எங்கம்மா உங்களுக்கு புடிக்குமேன்னு அதிரசம் பண்ணிக் குடுத்தாங்க; ஒரு டப்பா நெறைய கொண்டாந்து இருக்கேன்; தரட்டுமா இப்ப சாப்பிடறீங்களா?”

Updated: March 26, 2021 — 9:17 am