கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 9 11

ஒரே விஷயம் ஆசையையும், ஆத்திரத்தையும் கிளப்புகிறேதே; அழகுன்னு நினைச்ச விஷயம் என்னுள் ஆத்திரத்தையும் கிளப்ப முடியுமா? அப்ப அதனுடைய உண்மையான குணம்தான் என்ன? அப்ப அழகு அவள் உடம்புல இல்லயா? அப்ப அழகும், ஆத்திரமும் என் மனசுக்குள்ளத்தான் இருக்கா? அவனுக்கு ஏதோ புரிந்தது போலும் இருந்தது; அதே சமயத்தில் புரியாமல் சற்று குழப்பமாகவும் இருந்தது. வேணி, இந்த சங்கரைப் பத்தி உனக்குத் தெரியாதுடி. உன் ஆசைப் புருஷனாத்தான் இதுவரைக்கும் என்னை நீ பாத்திருக்கே; ஒரு சாதாரண, ஒரு சராசரி ஆம்பிளையா இன்னும் என்னை நீ பாக்கலே; ஒரு சராசரி ஆண் இந்த மாதிரி நேரத்துல, தன் பொண்டாட்டி இந்த மாதிரி படுக்கையறையில நடந்துக்கிட்டா, புருஷனை உசுப்பேத்திட்டு திரும்பி படுத்துக்கிட்டா, அவன் என்ன மாதிரி பதிலுக்கு ரியாக்ட் பண்ணுவான்னு உனக்கு தெரியாதுடி. இன்னும் நீ என்னை சரியா புரிஞ்சுக்கலை. இன்னைக்கு வரைக்கும் பெட் ரூம்ல நீ என்னச் சொன்னியோ அப்படித்தான் நான் நடந்துகிட்டு இருந்தேன். இதுவரைக்கும் நீ போட்ட கோட்டுக்குள்ளத்தான், உன் விதிகளுக்குட்பட்டுத்தான், நான் விளையாடிக்கிட்டிருந்தேன். இன்னைக்கு நான் என்ன செய்யறேன்னு நீ பார். அப்பத்தான் ஒரு ஆம்பிளையோட மனசும், அவன் செயலும் உனக்குப் புரியும். மாட்டேண்டி; வேணி, நிச்சயமா நான் உன் கிட்ட வந்து, நான் உங்க அண்ணியைப் பத்தி சொன்னது தப்புடியம்மா; அவ தங்கச்சியைப் பத்தி பேசினது தப்புத்தான்; இப்ப நீ கிட்ட வாடின்னு உன் காலை புடிச்சு கெஞ்சமாட்டேன். சத்தியமா இன்னைக்கு உன்னை நான் தொடமாட்டேன். நீயா வந்து சாரிடா சங்குன்னு சொன்னாலும் எனக்கு நீ இன்னைக்கு வேண்டாம். உன் அழகை காமிச்சு என்ன நீ மயக்கலாம்ன்னு மட்டும் நெனக்காதே. இந்த நிமிஷம் எனக்கு உன்னை பார்க்கவோ, பேசவோ சுத்தமா பிடிக்கலை. நீ நினைக்கற மாதிரி தலையை ஆட்டற தஞ்சாவூர் பொம்மை நான் இல்லை; இதை நீ நல்லாப் புரிஞ்சுக்கணும் .. இன்னைக்கு நான் இவளைத் தொடப்போறதில்லை. நானும் ரோஷமுள்ள ஆம்பிளைதான்னு நான் இவளுக்கு காட்டறேன். முதலில் அவள் பக்கத்தில் கட்டிலில் படுத்தவன் மனதில் என்னத் தோன்றியதோ, ஒரு வீராப்புடன் மனதில் புழுங்கிக்கொண்டே, விருட்டென எழுந்து ஒரு தலையணையையும், போர்வையையும் எடுத்துக்கொண்டு, படுக்கை அறையை விட்டு வெளியில் வந்தவன் நடு ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்துக்கொண்டான். கல்யாணமான இந்த ஒன்றரை வருஷத்தில் சங்கருக்கும், வேணிக்கும் நடுவில் படுக்கையறையில் ஏற்பட்ட முதல் சச்சரவு இது. ஆசையுடன் கட்டிப்பிடித்த தன்னை, கன்னத்துல முத்தம் குடுத்து, முதுகால உரசி, இடுப்பால என் இடுப்பை தேச்சி, என் கழுத்துல கையை போட்டுகிட்டு என் மாரைத் தடவுடான்னு சொல்லாம சொல்லி, என் உடம்பை சிலுக்க வெச்சி, என் உடம்பையும், மனசையும் சீண்டி சீண்டி கிளர்ச்சியை உண்டு பண்ணிட்டு, மனசுல ஆசை வெறியை ஏத்திட்டு, இப்ப உப்பு சப்பில்லாத ஒரு காரணத்துக்காக, பாதியில் சட்டென தன்னை உதறிவிட்டு கட்டிலில் ஏறிப்படுத்துக்கொண்ட வேணியின்பால் அவன் மனதில் எரிச்சல் எழுந்தது. அறையைவிட்டு வெளியில் வந்து ஹாலில் படுத்துக்கொண்ட சங்கர், சற்று முன் நடந்ததை மீண்டும் நிதானமாக சிந்தித்து அசை போட, முதலில் அவன் மனதில் தோன்றிய அந்த எரிச்சல் மெல்ல மெல்ல கோபமாக உருவெடுத்தது. எழுந்து போய் அவளை பளாரென ஒரு அறை விட்டுவிட்டு வரலாமா என்று கூட அவனுக்கு தோன்றியது. ஓ மை காட்!, நான் என்ன சதை வெறியில பைத்தியமாயிட்டேனா? ஒரு பெண்ணை அடிக்கணும்ங்கற என்ற எண்ணம் என் மனதில் எப்படி வந்தது? அதுவும் என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் வேணியை அறைய வேண்டும் என்ற நினைப்பு என் மனதில் எப்படி வந்தது? சங்கருக்கு தான் தன் மனைவியின் மீது இந்த அளவிற்கு கோபப்படுவது உண்மையிலேயே நியாயம் தானா, என்ற எண்ணமும் ஒரு வினாடி எழுந்தது. அவ சொன்ன மாதிரி அவளோட அண்ணியைப் பத்தி, அதிகப்படியான மனவெறியில, உணர்ச்சிகளின் விறுவிறுப்புனால அப்படி பேசி இருக்கக்கூடாதோ? நான் தான் அவளுக்கு வேண்டியவர்களை, நெருக்கமான உறவு பெண்களைப் கிள்ளு கீரையா நினைச்சு பேசி, அவ மூடைக் கெடுத்துட்டனா? யோசிக்க யோசிக்க அவன் தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்தான். அவனுக்கு இலேசாக தலை வலிக்க ஆரம்பித்தது. சங்கருக்கு நிதானமாக, தன் மனைவியுடன் ஆசையாக பேசி, அவள் மனதை கிளுகிளுக்க வைத்து, அவளை கைகளாலும், காலாலும் மென்மையாக வருடி, பரபரப்பின்றி தொட்டுத் தழுவி, நிதானமாக நாக்கால் அவள் மேனியை சுவைத்து, அப்படி சுவைப்பதால் தன் துணையின் உடல் சூடேறி, உடல் நெகிழ்ந்து, அந்தரங்கம் முழுவதும் ஈரத்தால் நனைந்து, விருப்பத்துடன் அவளுடல் நரம்புகள் துடித்து, அவள் தன் ஆசையை அடக்கமுடியாமல், வெறியுடன் தன்னைத் தழுவ, அவள் காலை மெதுவாக விரித்து, அவள் தேன் கூட்டை வலிக்காமல் தடவி, அவளைக் கூடும் போது கிடைக்கும் சுகத்தை அனுபவித்தால் மட்டுமே அவன் மனம் முழு மகிழ்ச்சியடைந்ததாக நினைத்தான். இது போன்ற கூடலில்தான் எப்போதும் அவனுக்கு விருப்பம். கூடல் என்பது அவனுக்கு ராகம், தானம், பல்லவி என ஒரு முழு நேரக் கச்சேரியாக இருக்கவேண்டும். வாஸ்தவத்தில் நீண்ட பஸ் பயணத்தால், வேணியின், உடல் மிகவும் களைத்திருந்தது. அவள் உடலும், மனமும் ஓய்வு ஓய்வு எனக் கூவிக்கொண்டு கண்களை தூக்கம் அழுத்திய போதும், வேணி தன் கணவனின் உடல் வேட்கை புரிந்து, அவனுக்கு தன் அணைப்பால் சுகமளிக்கத் தன்னை மெதுவாக தயாராக்கிக்கொண்டிருந்தாள். தன் கணவன் ஏமாற்றம் அடையக்கூடாதே என அவள் தன்னை உடல் உறவுக்குத் தயாராகிக்கொண்டிருந்த போது, அவள் அண்ணி, மற்றும் அவள் தங்கை விமலி, என இருவரின் உடலழகை பற்றிய சங்கரின் அளவுக்கு மீறிய உளறலால் அவள் மனதில் சட்டெனப் பொங்கிய எரிச்சலை அவளால் அடக்கப்பார்த்தும் முடியமால் போகவே, அவள் தன் கணவனை உதறிவிட்டு கட்டிலில் தன் முதுகைக் காட்டிக்கொண்டு படுத்துவிட்டாள். பொதுவாக சராசரி பெண்கள், தன்னை கட்டிக்கொண்டவன் தங்களின் நெருங்கிய உறவினர்களை, காமக்கண்ணோட்டத்தில் பார்க்கிறான் என்று அறியும் போது, அதை அவர்களால் முழுவதுமாக ஜீரணிக்க முடிவதில்லை. சங்கர், தனது ஆசை மோகத்தில், வேணியின் மன நிலைமையும், அவள் எரிச்சலையும் அன்று உணரமால் போனது துரதிருஷ்டம்தான். இதுக்குத்தான் அனுபவப்பட்டவன் சொன்னான்,
“சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கக்கூடாதுன்னு!” கோபத்துடன் தன் பக்கத்தில், தன்னைப் போல் மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்ட சங்கரை விடியலில் சமாதானம் செய்து கொள்ளலாம் என நினைத்தாள் வேணி. சீக்கிரமா தூங்கி, விடியலில் வயித்தை காலியாக்கிக்கிட்டு, வாயை நல்லா கொப்புளிச்சிட்டு புருஷன் கூட சந்தோஷமா கூடிப் பாருடி; ஆஹா! அந்த சுகமே சுகம்தாண்டி; வேணிக்கு இது அவள் தாய் சொல்லிக்கொடுத்த படுக்கையறை பாடங்களில் ஒன்று. சங்கருக்கும் இந்தப் பாடம் பிடித்துவிட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பொழுது புலருமுன், சங்கருக்குஆபிசுக்கு போக வேண்டுமென்ற டென்ஷனில்லாமல், நிதானமாக காமப் பாடத்தை படிப்பதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். உடல் களைப்பால், படுத்த இரண்டு நிமிடங்களில் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் வேணி.

Updated: March 26, 2021 — 9:17 am