கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 55 14

“தப்புதாம்மா… செல்வா பண்ணது தப்புதான்… நான்தான் சொன்னனே அவன் தன் தப்பை உணர்ந்துட்டான்னு! செல்வா உன்கிட்ட மன்னிப்பு கேக்க தயாரா இருக்கான்.”

“நீ சென்னைக்கு திரும்பி வரலே… உனக்கு போஸ்டிங் தில்லியிலே ஆயிடிச்சுன்னு தெரிஞ்சதும், ஒரு தரமில்லே.. இரண்டு தரமில்லே… தொடர்ந்து உனக்கு நாலு நாள் அவன் போன் பண்ணியிருக்கான்.. நீதான் அவன்கிட்ட பேசாம, ஒவ்வொரு தரமும் லைனை கட் பண்ணிட்டியாமே? இது உண்மைதானா?”

“மாமா…ப்ளீஸ்…” சுகன்யாவின் குரல் மீண்டும் தழுதழுக்க ஆரம்பித்தது.

“சுகன்யா.. அவன் என்னதான் சொல்ல விரும்பறான்னு ஓரே ஒரு தரம் நீ கேட்டு இருக்கலாம்லே?”

“ப்ச்ச்… கேட்…கேட்டு இருக்கலாம்.. ஆம்பிளைக்கு கோவம் வரலாம்… ஆனா எனக்கு மட்டும் கோவம் வரக்கூடாதா மாமா?” சுகன்யா தீடிரென முறுக்கினாள்.

“வரலாம்ம்மா… உன் கோவம் நியாயம்ன்னு நீ கேக்காமலேயே நாலு தரம் நான் சொல்லிட்டேனே?” சுகன்யாவின் குழந்தைத்தனமான முறுக்கலை கண்டு நடராஜன் மெல்ல சிரித்தார்.

“எதுக்கு இப்ப சிரிக்கிறீங்க… சிரிக்காதீங்க.. நீங்க சிரிச்ச எனக்கு கெட்ட கோவம் வரும்…” சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“சுகன்யா… சும்மா நீ பிடிவாதம் பிடிக்காதேம்மா. நீ ரொம்ப பிடிவாதக்காரின்னு உன் அம்மா… உன் அத்தை மல்லிகா கிட்ட சொல்லியிருக்காங்களாம்… நான் சொல்றதை கொஞ்சம் கேளு… உன் பிடிவாதத்தை எங்களுக்காக கொஞ்சம் விட்டுக்குடு. எங்க வீட்டுக்கு எப்ப நீ வரப்போறேன்னு நாங்க தவிச்சுக்கிட்டு இருக்கோம்ம்மா… எங்க தவிப்பையும் நீ புரிஞ்சுக்கணும்.”

“….”

“செல்வா மேல உனக்கு கோவம் இல்லேன்னு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீதானே சொன்னே? நடந்ததையெல்லாம் நான் மறந்துட்டேன்னு, சொன்னது நீதானே?”

“ஆமாம் மாமா அப்படி நான் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனா இப்ப சொல்றேன்… நான் அவர் மேல ரொம்பக் கோவமா இருக்கேன்…” சுகன்யா தாயிடம் பொம்மை கடையில் முரண்டு பிடிக்கும் சிறு குழந்தையாக தன் மூக்கை உறிஞ்சினாள்.

“சுகன்யா… அழாதேம்மா.. செல்வா பண்ணத்தப்புக்கு அவனுக்கு என்ன தண்டனை குடுக்கணும்ன்னு நீ நினைக்கிறியோ அதை நீ அவனை நேரா பாக்கும் போது குடு. இது உனக்கும் அவனுக்கும் நடுவுல நீ தீத்துக்க வேண்டிய விஷயம்.”

“சுகன்யா… தேவையில்லாம எங்களை நீ ஏன் தண்டிக்கறே? எங்களை மட்டும் நீ தண்டிக்கலே… கூடவே உன் அப்பாவை, உன் அம்மாவை, உன் மேல தன் உசுரையே வெச்சிருக்கற உன் ரகு மாமாவை, உன் கல்யாணத்தைப் பாக்கணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கற உன் தாத்தா, பாட்டி, இவங்களையும் ஏம்மா தண்டிக்கறே?”

“மாமா… யாரையும் தண்டிக்கணுங்கறது என் விருப்பமில்லே…. என்னை நானே தண்டிச்சுக்கறேன்… ஏன்டா ஒருத்தனை காதலிச்சோம்ன்னு எனக்கு இருக்கு?”

“சரி… செல்வா மட்டுமா உன்னை நேசிச்சான்? எங்க குடும்பத்துல இருக்கற எல்லோரும் உன்னை நேசிக்கிறோம். அவன் உன்னை பைத்தியக்காரத்தனமா, வெறுக்கறேன்னு சொல்லியிருக்கலாம். ஆனா நாங்கள்ல்லாம் உன்னை வெறுக்கலையே?”

“இல்லே மாமா…”

“சுகன்யா நீ புத்திசாலிப் பொண்ணு. வாழ்க்கையில எப்பவும் ஒரே நேரத்தில ரெண்டு விஷயங்கள் நடக்கும்…”

“நிஜமாவே இப்ப நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை அங்கிள்.”

“நாம நடக்கும்போது வலது காலை எடுத்து ஒரு அடி முன்னே வெச்சா, அந்தக் கால் பதியபோற இடம் மேடா, இல்லை பள்ளமான்னு, கவனமா பாத்து வைக்கிறோம். அந்த எடத்தை எப்படியிருந்தாலும் நாம நம்ம மனசார வரவேற்று ஏத்துக்கறோம்.”

“ம்ம்ம்..”

“ஏன்னா.. வலது காலை கீழே வெக்காம இடது காலை தூக்க முடியாது…”

“யெஸ்…”

“அதே சமயத்துல எந்த எடத்துலேருந்து நம்ம காலை எடுத்து வெச்சோமோ, அந்த இடத்தைப்பத்தி நாம அதிகமா நெனைக்காம சட்டுன்னு மறந்துடறோம். இதுதான் வாழ்க்கை… இப்படித்தான் நீ உங்களுக்குள்ள நடந்த அந்த கசப்பான நிகழ்ச்சியை மறந்துடணும்ன்னு நான் சொல்றேன்.”

Updated: May 27, 2021 — 4:24 am

4 Comments

  1. What happened to your old website.

  2. Will you please send me the manuscript of this entire Story by V. P. P. I will pay the cost.

  3. Nice story, very interesting, keep posting. Waiting for next part. ??

    1. I have never come across a very fine and beautiful love story at the near past. I would like to thank the author and also I want to put my request to write such love stories. There are so many sites for sex stories so you please write such love stories. This is my personal request.

Comments are closed.