கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 55 14

“ஹீ ஈஸ் கோயிங் டு கெட் மேரீட் வெரி வெரி சூன்..

“குட்… கங்கிராட்ஸ்…”

“சண்டேன்னைக்கு பத்திரிக்கையோட இவனும், இவனை கட்டிக்கப் போறவளும் உங்க வீட்டுக்கு வர்றதா இருக்காங்க…”

“அவசியம் வாங்க மிஸ்டர் சம்பத்…”

அத்தை பிள்ளைக்கு கல்யாணம்ன்னா, கல்யாணத்துக்கு சுகன்யாவும் வந்துதானே ஆகணும். நடராஜனின் மனதில் சட்டென சுகன்யாவின் முகமும், செல்வாவின் முகமும், ஒன்றன் பின் ஒன்றாக வந்து போயின.

முருகா… செல்வாவை ரொம்ப சோதிக்காதே. அவனையும் சுகன்யாவையும் சீக்கிரமே ஒண்ணு சேர்த்துடுப்பா. மனதுக்குள் திருத்தணி முருகனை ஒரு முறை வேண்டிக்கொண்டார்.

சாப்பிட்டுக்கொண்டிருந்தவருக்கு பொறை ஏறியது. அதே நேரத்தில், நடராஜன் நினைத்ததையே, திருத்தணியில் முருகன் சன்னிதியில், மல்லிகா விண்ணப்பமாக்கிக் கொண்டிருந்தாள்.

இரண்டு வாரம் விடுமுறையில் இருந்தபின் அன்றுதான் அலுவலகத்திற்கு வந்திருந்தான் செல்வா. அவனுக்காக காத்திருந்த, அவனே செய்து முடிக்க வேண்டியிருந்த வேலைகளை, லஞ்சுக்கு கூட போகாமல், ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடித்தான். மேஜை காலியானதும்தான் அவனால் அப்பாடாவென மூச்சு விடமுடிந்தது.

மாலை நாலரை மணியளவில், வழக்கம் போல்,கேண்டீனின் வலதுபுற மூலையில், தன்னந்தனியாக உட்கார்ந்து கொண்டு தன் கையிலிருந்த கொதிக்கும் காஃபியை மெதுவாக உறிஞ்சிக்கொண்டிருந்தான் அவன்.

“செல்வா.. உன்னை எங்கெல்லாம் தேடறதுப்பா…?”

தனக்குப் பின்னாலிருந்து வந்த கூவலைக்கேட்டு அவன் திரும்புவதற்குள், அவன் தோளிலும் பட்டென ஒரு அடி விழுந்ததும், அவன் ஒரு நொடி அதிர்ந்து, விருட்டென பின்புறம் திரும்பியவன், அடுத்த நொடியில் தன் முகம் மலர்ந்து முறுவலிக்க ஆரம்பித்தான்.

“ஹாய் அனு… எப்டீ இருக்கே? எப்ப வந்தே பாண்டிச்சேரியிலேருந்து? இந்த ஆஃபீசுல ஜாய்ன் பண்ணிட்டியா?”

அனுவின் கையை உற்சாகமாக குலுக்க ஆரம்பித்த செல்வா, மூச்சு விடாமல், கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டு அவளை திக்குமுக்காடவைத்தான்.

“ஒரு வாரமா உனக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
“ஸ்விட்ச்ட் ஆஃப்’ன்னே மெசேஜ் வருது? நேத்து ஈவினிங், கடைசியா, உன் தங்கை மீனாவுக்கு போன் பண்ணேன். சாமியார் மாதிரி, எங்கே போறேன்னு வீட்டுலகூட சொல்லிக்காம, ஊர் ஊரா நீ திரிஞ்சுக்கிட்டு இருக்கேன்னு அப்பத்தான் தெரிய வந்திச்சி. நீ பண்றதுல கொஞ்சமாவது ஞாயம் இருக்கா?”

“பெங்களூர் போயிருந்தேன் அனு. எங்கூட படிச்ச ஒரு ஃப்ரெண்டோட ஒரு வாரம் தங்கியிருந்தேன். இன்னைக்கு மார்னிங்தான் சென்னைக்கு வந்தேன். அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு கல்யாணமாமே? நீ ஏன் இதை எங்கிட்ட சொல்லவே இல்லே? மாப்பிள்ளை யாரு? அவரு என்னப்பண்றார்?”

Updated: May 27, 2021 — 4:24 am

4 Comments

  1. What happened to your old website.

  2. Will you please send me the manuscript of this entire Story by V. P. P. I will pay the cost.

  3. Nice story, very interesting, keep posting. Waiting for next part. ??

    1. I have never come across a very fine and beautiful love story at the near past. I would like to thank the author and also I want to put my request to write such love stories. There are so many sites for sex stories so you please write such love stories. This is my personal request.

Comments are closed.