கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 55 14

“சொல்லுங்க அங்கிள்…”

“எங்களால, உன்னைத்தவிர வேற யாரையும் எங்க வீட்டு மருமகளா நெனைச்சுப்பாக்க முடியலம்ம்மா…”

“…..”

“சுகன்யா… செல்வா உங்கிட்ட நடந்துகிட்ட விதத்தை நான் சரின்னு சொல்லலே. அவன் என் பிள்ளைங்கறதுக்காக நியாயப்படுத்தவும் இல்லே. திரும்பவும் சொல்றேன். அவன் செய்தது தப்புதான்.”

“….”

“சுகன்யா… அவன் யார் பேச்சையோ கேட்டுக்கிட்டு உன்னை அவன் சந்தேகப்பட்டதை, எங்களுக்காக, நீ முழுசா மறந்துடணும்ன்னுதான் நான் கேக்கறேன். சுகன்யா என்னை சுயநலக்காரன்னு மட்டும் நினைச்சுடாதே. உன்னை நான் எந்தக்காரணத்துக்காவும் இழக்க விரும்பலேம்மா. இதுதான் உண்மை.

“அங்கிள் நீங்க என் மேல வெச்சிருக்கற அன்புக்கு ரொம்ப தேங்க்ஸ்…”

“சுகன்யா… எனக்கு உன்னோட தேங்க்ஸ் வேண்டாம்மா… அவனை நீ இந்த ஒரு தரம் மன்னிக்கக்கூடாதா?”

“அங்கிள்… ப்ளீஸ்…” சுகன்யா விசும்ப ஆரம்பித்திருந்தாள்.

“அயாம் சாரி… கொழந்தை நீ தனியா இருக்கே… என்னவோ பேச நினைச்சு…. என்னவோ பேசி… உன்னை நான் அழவெச்சுட்டேன்… அயாம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி ஃபார் திஸ்…” நடராஜன் குரலில் சுயபரிதாபம் மிகுதியாக இருந்தது.

“இட்ஸ் ஆல் ரைட் அங்கிள்… நான் தப்பு பண்ணலேங்கறதை நீங்க புரிஞ்சிகிட்டு இருக்கீங்க பாருங்க… அதை உங்க வாயாலே என் கிட்ட இன்னைக்காவது சொன்னீங்க பாருங்க… அதுவே எனக்குப் போதும். உங்க வார்த்தைகளாலே, என் மனசு ரொம்பவே இலேசாயிட்ட மாதிரி நான் ஃபீல் பண்றேன். நான் தனியா இல்லேங்கற ஒரு உணர்வு எனக்கு இப்ப வந்திடிச்சி…”

“சுகன்யா… பீ ப்ரேவ்… ஐ நோ.. யூ… நீ தைரியமான பொண்ணு… நீ எங்கேயிருந்தாலும், நீயே தப்பு பண்ணணும்ன்னு நினைச்சாலும் உன்னாலத் தப்பு பண்ண முடியாதும்மா.. எதுக்கு நீ அழறே? நீ எதுக்கும் அழாதே.. உனக்கு நாங்கல்லாம் இருக்கோம்மா…”

“தேங்க் யூ அங்கிள்…” சுகன்யா தன் விழிகளை புறங்கையால் துடைத்துக்கொண்டு, மூக்கை உறிஞ்சினாள்.

“உனக்கு செல்வா மேல இருக்கிற கோபம் ஞாயமானதும்மா…” நடராஜன் தன் குரலை இழுத்தாற் போல் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

“அங்கிள் அவர் மேல எனக்கு எந்த கோபமும் இல்லே…”

“அப்ப நீ ஏன் உன் ட்ரெயினிங் முடிஞ்சதும் சென்னைக்கு திரும்பி வரலே?”

“இதுக்கு மேல இதைப்பத்திமட்டும் தயவு செய்து நீங்க எதுவும் கேக்காதீங்க அங்கிள்….”

“சுகா… மீனாவை மட்டும் நான் என் மகளா நினைக்கலே. செல்வா அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்தன்னைக்கு, எங்க பசியறிஞ்சு, எங்களுக்காக வேகாத வெய்யில்லே ஓட்டமா ஓடி, உன்னோட ரெண்டு கை கொள்ளாத அளவுக்கு சாப்பிட விதவிதமா வாங்கிட்டு வந்தியே, அந்த நிமிஷத்திலிருந்தே உன்னை நான் என் மகளா நினைக்க ஆரம்பிச்சிட்டேன். அந்த உரிமையிலே சொல்றேம்மா… பிடிவாதத்தினாலே எந்த பயனும் இல்லேம்மா…”

“நிஜமாவே அவர் மேல எனக்கு எந்த கோபமும் இல்லே… என்னை நம்புங்க அங்கிள்…”

“நான் உன்னை நம்பறேன்… உன் செல்வா ரொம்பவே ஒடைஞ்சு போயிருக்காம்மா…” நடராஜன் பொய் சொல்லவில்லை என்பது அவருடைய குரலிலிருந்து அவளுக்கு புரிந்தது.

“அங்கிள்… இதுக்கெல்லாம் காரணம் நான் இல்லே….” செல்வா உடைந்து போயிருக்கிறான் என நடராஜன் சொன்னதும் அவள் தன்னுள் ஏதோ இளகுவதாக உணர ஆரம்பித்தாள்.

“யெஸ்… இன் ஏ வே… யூ ஆர் கொயட் ரைட்… திரும்பவும் சொல்றேம்மா… அந்த முட்டாள் தன் தப்பை உணர்ந்துட்டான். இதை மட்டும் என்னால நிச்சயமா சொல்லமுடியும். உன்னைப் பாக்க, உங்கிட்ட பேச, உங்கிட்ட மன்னிப்பு கேக்க அவன் துடிச்சிக்கிட்டு இருக்கான்.”

“ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ… அவன் சொல்லி நான் இன்னைக்கு உங்கிட்டே பேசலே… அவன் தரப்புல நான் உன் கிட்ட வாதடால. நான் உன்னிடம் பேச நினைச்சதே வேற ஒரு முக்கியமான் விஷயம்…

“அவர் தன்னோட தப்பை ரியலைஸ் பண்ணிட்டாருன்னு எப்படி நீங்க அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க அங்கிள்?”

“உன்கிட்ட மீனா எப்ப பேசினாலும், அவ பேசி முடிச்சதுக்கு அப்புறம் உன்னைப்பத்திய எல்லா விஷயத்தையும் அவகிட்டருந்து நாங்க கேட்டுத் தெரிஞ்சுக்குவோம். அதை அவன் திருடன் மாதிரி ஒளிஞ்சு நின்னுக்கிட்டு ஒரு வரி விடாம கேட்டுக்கிட்டு இருப்பாம்மா….”

“ம்ம்ம்” சுகன்யாவின் உதடுகள் துடிக்க ஆரம்பித்தன.

“மீனாவை தனியா அழைச்சிக்கிட்டுப் போய், சுகன்யா எப்படியிருக்கா? சுகன்யா நல்லா இருக்காளா? சுகன்யா என்னைப்பத்தி ஏதாவது கேட்டாளா? சுகன்யாவோட கோபம் அப்படியேதான் இருக்கா… என் மேல அவளுக்கு இருக்கற கோவம் இன்னும் கொஞ்சம் கூட கொறையலயான்னு, நூறு தரம் உன்னைப்பத்தி அவகிட்ட செல்வா கேக்கிறானே… அதுக்கெல்லாம் என்னம்மா அர்த்தம்?”

“அங்கிள்…”

“சுகன்யா… ப்ளீஸ் செல்வாவுக்கு திரும்பவும் உன்கிட்ட அன்பு செலுத்த, நீ ஒரே ஒரு வாய்ப்பு குடுக்கணும்ம்மா…” நடராஜனின் குரல் கெஞ்சலாக வந்தது.

“அங்கிள் நீங்க என்னைத் தப்பா நினைக்கக்கூடாது…”

“சொல்லும்மா…”

Updated: May 27, 2021 — 4:24 am

4 Comments

  1. What happened to your old website.

  2. Will you please send me the manuscript of this entire Story by V. P. P. I will pay the cost.

  3. Nice story, very interesting, keep posting. Waiting for next part. ??

    1. I have never come across a very fine and beautiful love story at the near past. I would like to thank the author and also I want to put my request to write such love stories. There are so many sites for sex stories so you please write such love stories. This is my personal request.

Comments are closed.