கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 55 14

“சரி பேசாதே… பேசு பேசுன்னு.. உன்னை நானா இப்ப கூப்பிட்டேன்..?”

“ஏன்டா இப்படி எங்க உயிரை எடுக்கறே?” மல்லிகாவின் குரல் கம்மியது.

“அப்பா சொன்னாரேன்னு.. நாலு தரம் அந்த சிங்காரி கிட்ட பேச டிரை பண்ணேன். நாலு தரமும் அவ என் காலை கட் பண்ணிட்டா.” செல்வா எழுந்து தன் இடுப்பிலிருந்து நழுவிய லுங்கியை இறுக்கிக்கொண்டான்.

“என் நம்பர்லேருந்து பண்றேன்.. என் காலை அவ கட் பண்ணிடுவாளா?”

“கட் பண்ணலாம்…”

“உனக்கும் அவளுக்கும் தகராறுடா… எனக்கும் அவளுக்கும் நடுவுல என்னப் பிரச்சனை?”

“எனக்கு அப்புறம்தான் அவ உங்க எல்லாருக்குமே உறவு… இதை நான் எத்தனை தரம் சொன்னாலும், இது உங்க ரெண்டுபேருக்கும் ஏன்தான் புரியமாட்டேங்குதோ?”

“எங்களுக்கு புரிய வைக்க உனக்கு வயசு பத்தாதுடா…” மல்லிகா சீறினாள்.

“சரி.. அவ கிட்ட செருப்படி வாங்க உனக்கு இஷ்டம்ன்னா நீ என்ன வேணாப் பண்ணு…” தன்னிடம் அவள் பேசவில்லையே, தன்னை அவள் உதாசீனப்படுத்திவிட்டாளே என்ற எரிச்சலில், தன் முகம் சுருங்க, தன் தாயிடம், இடக்காக பேச ஆரம்பித்தான் செல்வா.

“அர்த்தமில்லாமே பேசாதேடா… அவ அந்த மாதிரி பொண்ணு இல்லே; ரெண்டு நாள் முன்னாடி கூட மீனாவும் சுகன்யாவும் நல்லாத்தான் சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டு இருந்தாங்க.” விருட்டென அந்த அறைக்குள் நடராஜன் நுழைந்ததும் அந்த அறையை விட்டு வெளியேற ஆரம்பித்தான் செல்வா.

“நில்லுடா.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..”

“அப்பா… நல்லாக் கேட்டுக்குங்க… அடுத்த ஒரு வருஷத்துக்கு சுகன்யா சென்னைக்கே திரும்பி வர்றதா இல்லே… அவளுக்கு போஸ்டிங் டில்லியிலே ஆயிடிச்சி… சீனு வீட்டுல சொல்ற மாதிரி என் தங்கச்சி மீனா கல்யாணத்தை சட்டு புட்டுன்னு முடிக்கற வழியைப்பாருங்க…”

“என்னடா சொல்றே?” இருவரும் ஒரே குரலில் வியப்புடன் கேட்டனர்.

“நடந்ததை சொல்றேன்… சுகன்யா, சென்னைக்கு ஏன் திரும்பி வரலேன்னு ஆஃபீசுல அவனவனும் என் உயிரை எடுக்கறானுங்க. அதான் லீவு போட்டுட்டு வீட்டுல படுத்து கிடக்கறேன்.”

“மல்லிகா… ஈவினிங்கே, மீனா கல்யாணத்தைப்பத்தியும், இவனைப்பத்தியும், சுகன்யா கிட்டே நானே பேசிடறேன்…” நடராஜன் விறுவிறுவென எழுந்து வெளியே நடந்தார்.

* * * * *

“யார்கூட இவ்வளவு நேரமா பேசிகிட்டு இருந்தீங்க?”

“நம்ம சுகன்யாகிட்டத்தான் பேசிகிட்டு இருந்தேன்…”

“என்ன சொன்னா?”

வெராண்டாவில் உட்கார்ந்துகொண்டு, கையில் அந்த வார ஆனந்தவிகடனை புரட்டிக்கொண்டிருந்த நடராஜனின் அருகில் அமர்ந்திருந்தாள் மல்லிகா. செல்வா வாசல் படியில் காற்றாட உட்கார்ந்திருந்தான்.

“மாமா… எனக்கு ரொம்ப சந்தோஷம்… என் ஃப்ரெண்டு மீனா மேரேஜை மொதல்லே நடத்தி முடிங்கன்னு சொன்னா..”

“அப்புறம்…”

“உங்க பிள்ளை மேல எனக்கு இருக்கற கோவம் இன்னும் முழுசா தணியலேன்னா..”

“அப்டீன்னா…”

“மல்லிகா அத்தை எப்படி இருக்காங்கன்னு கேட்டா… அதே சமயத்துல… என் கதை முடிஞ்சுபோன விஷயம்… அதை மறந்துட்டு நடக்கவேண்டிய வேலையை பாருங்கன்னும் சொன்னா…”

Updated: May 27, 2021 — 4:24 am

4 Comments

  1. What happened to your old website.

  2. Will you please send me the manuscript of this entire Story by V. P. P. I will pay the cost.

  3. Nice story, very interesting, keep posting. Waiting for next part. ??

    1. I have never come across a very fine and beautiful love story at the near past. I would like to thank the author and also I want to put my request to write such love stories. There are so many sites for sex stories so you please write such love stories. This is my personal request.

Comments are closed.