கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 55 14

இண்டர்காம் மென்மையாக சிணுங்க ஆரம்பித்தது. தலையை நிமிர்த்தி தன்னெதிரில் இருந்த சுவரை நோக்கினார் நடராஜன். டிஜிட்டல் வால் கிளாக் 1330 என நேரத்தை அறிவித்துக் கொண்டிருந்தது.

“மிஸ்டர் நடராஜன்… பிஸியா இல்லேன்னா ஒரு ரெண்டு நிமிஷம் என் ரூமுக்கு வரமுடியுமா?”

“நம்ம காண்ட்ராக்டர் ஒருத்தரோட பேசிகிட்டு இருக்கேன் சார். அவரோட வேலையை முடிச்சுட்டு, ஒரு பைவ் மினிட்ஸ்ல வரட்டுமா?”

“தட்ஸ் வெரி பைன்… வீட்டுலேருந்து உங்களுக்கும் சேர்த்து லஞ்ச் வந்தாச்சு. உங்களுக்கு பிடிச்ச மெனுதான். என் ரூம்லேயே சாப்பிட்டுக்கலாம் வாங்க.” குமாரசுவாமி மென்மையாக சிரித்தார்.

* * * * *

“கம் இன்… ப்ளீஸ்…”

நடராஜன், குமாரசுவாமியின் அறைக்குள் நுழைந்தபோது அந்த அலுவலகத்திற்கான உணவு இடைவேளை தொடங்கி பத்து நிமிடத்திற்கும் மேலாகியிருந்தது. குமாருடன் சோஃபாவில் கவர்ச்சியான சிரித்த முகத்துடன், இதுவரை அவர் பார்த்திராத இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான்.

உற்சாகம் பொங்கும் முகம், கூர்மையான கண்கள். செதுக்கிய மூக்கு. வலது மணிக்கட்டில் வட்டமான வாட்ச். காலில் மின்னும் கருப்பு நிற ஷூக்கள். உடலோடு ஒட்டிய பளபளக்கும் விலையுயர்ந்த காட்டன் ஆடைகள். மொத்தத்தில் பளிச்சென்றிருந்தான் அவன்.

“நான் லஞ்ச் கொண்டு வரலேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” புன்முறுவலுடன் அவர்களுக்கு எதிரில் அமர்ந்தார் நடராஜன்.

“காலையில மீனாகிட்ட பேசிகிட்டு இருந்தேன். உங்க வீட்டு எஜமானியம்மா திருத்தணி போயிருக்காங்கன்னு தெரியவந்தது. ஆஃபீசுக்குள்ள நுழையும் போது ரெண்டு கையையும் வீசிகிட்டு வந்தீங்க நீங்க. லஞ்சு அனுப்பும் போது ரெண்டு பேருக்கு அனுப்பும்மான்னு உடனே சுந்தரிக்கு போன் பண்ணிட்டேன்.”

குமாரசுவாமியின் முகத்திலிருந்து, பொங்கி வரும் சிரிப்பிலிருந்து, அன்று அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது தெரிந்தது.

“உங்கக்கிட்ட ஷெர்லாக் ஹோம்ஸ் தோத்துடுவார் போங்க…” நடராஜனும் நட்புடன் சிறிது உரக்கவே சிரித்தார்.

“மீட் மிஸ்டர் சம்பத்… சம்பத், இவர்தான் நடராஜன். இந்த ப்ராஞ்ச்லே வேலை செய்யற அத்தனை பேருக்கும் சாப்பாடு போடறவர்… ஐ மீன் டூ சே, மாசக்கடைசீலே சம்பளம் குடுக்கறவர். சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபீசர்.” சிரித்தவாறே பரஸ்பரம் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார்.

“மாமா, சாரோட பேசினது இல்லேயே தவிர இவரை நான் பார்த்திருக்கேன்.”

சம்பத் இனிமையாக புன்னகைத்துகொண்டே தன் வலது கையை நீட்ட, நடராஜன் தன் புருவங்களை உயர்த்தியவாறு, அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தவாறே, அவன் நீட்டிய கையை அவசரமாக குலுக்கினார்.

“என்னை எங்கே பார்த்திருக்கீங்க நீங்க?”

“சுவாமிமலையிலே தமிழ்செல்வன், சுகன்யாவோட நிச்சயதார்த்தத்துக்கு நானும் வந்திருந்தேன்.” சம்பத் இனிமையாக புன்னகைத்தான்.

“ஐ சீ… ஐ சீ…”

பை த பை… நடராஜன், இன்னைக்கு நம்ம லஞ்சை இவர்தான் என் வீட்டுலேருந்து நமக்காக கொண்டு வந்திருக்கார்.”

“அப்படியா?”

“யெஸ்… நடராஜன்… என் ஒண்ணுவிட்ட சிஸ்டர் மிஸஸ் ராணி நல்லசிவத்தைப்பத்தி உங்கக்கிட்ட சொல்லியிருக்கேன். அவங்களோட ஒரே மகன் சம்பத் இவர்தான். இவருக்குத்தான் சுகன்யாவை பெண் கேட்டு வந்தாங்கன்னு….” குமார் பேசிக்கொண்டிருந்த வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார்.

“யெஸ்… யெஸ்… ஐ ரிமெம்பர் தட்…”

“சம்பத், நாளைக்கு, நம்ம ஜோனல் ஆஃபீஸ்லே, ஹெச்.ஆர்.லே டெபுடி மேனேஜரா ஜாய்ன் பண்றார். எல்லாம் அவரோட மெரிட்தான். இதுல என் ரோல் ஒண்ணுமில்லே.”

“நீங்க இதை எனக்கு சொல்லணுமா? உங்களைப்பத்தி எனக்கு தெரியாதா? வெல்கம்… மிஸ்டர் சம்பத்குமாரன், வெல்கம்… யூ வில் எஞ்சாய் யுர் ஸ்டே ஹியர். ஹெட் ஆஃபீஸ்லேருந்து வந்த உங்க ஆர்டர்சை லாஸ்ட் வீக் பார்த்தேன்… சம்பத்துன்னு சொன்னதும் சட்டுன்னு ரிலேட் பண்ணிக்க முடியலே.”

* * * * *

“போன் பண்ணி பாராட்டியே ஆகணும்… வீட்டுல யாரோட சமையல் இன்னைக்கு? புளிசாதத்துக்கு, மசால் வடை, உருளைகிழங்கு சிப்ஸ்… சூப்பர் காம்பினேஷன்…” நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் நடராஜன்.

“புளிசாதம் எங்க கனகா பாட்டி பண்ணாங்க. மசால் வடை பண்ணது சுந்தரி மாமி. இங்கே வர்றதுக்கு முன்னாடி நானும் ஒரு புடி புடிச்சுட்டுத்தான் வந்திருக்கேன்.” சம்பத் அவர்களுக்கு குளிர்ந்த நீரை டம்ளரில் ஊற்றி பக்கத்தில் வைத்தான்.

“சம்பத்… உங்க வீட்டுலேதான் தங்கியிருக்காரா?”

“இப்போதைக்கு மாடியிலே சுகன்யாவோட ரூம் காலியாத்தானே இருக்கு. இங்கேயே இரேன்டாங்கறார் அப்பா. இவன் கேக்கமாட்டேங்கறான். தனியா வீடு வேணுமாம். காலையில நம்ம சீனுகிட்ட பேச டிரை பண்ணேன். அவன் கிடைக்கலே. சீனுவோட டே டு டே ப்ரொக்ராம் மீனாவுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்குமேன்னு காலையிலே அவகிட்டே பேசினேன்..

“யெஸ்… ஓரு ஆளுக்கு இப்ப தனி வீடு எதுக்கு?” நடராஜன் மசால்வடையை கடித்து நிதானமாக மென்று கொண்டிருந்தார்.

Updated: May 27, 2021 — 4:24 am

4 Comments

  1. What happened to your old website.

  2. Will you please send me the manuscript of this entire Story by V. P. P. I will pay the cost.

  3. Nice story, very interesting, keep posting. Waiting for next part. ??

    1. I have never come across a very fine and beautiful love story at the near past. I would like to thank the author and also I want to put my request to write such love stories. There are so many sites for sex stories so you please write such love stories. This is my personal request.

Comments are closed.