கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 55 14

“இதைத்தான் நானும் சொல்றேன் மாமா…”

“சொல்லு சுகன்யா.. நீ என்ன சொல்ல விரும்பறே?”

“செல்வாவோட எனக்கிருந்த உறவு… நான் கடந்து வந்துட்ட இடம்… அந்த இடத்தை நானும் மறக்க விரும்பறேன்… நான் எடுத்து வெக்கப் போற அடுத்த அடி என்னன்னு எனக்கு இன்னும் தெளிவாப் புரியலே… நான் எடுத்த வைக்கப்போற அந்த அடி தப்பாயிடக்கூடாதேன்னு நான் எனக்குள்ள ரொம்ப பயப்படறேன்..”

“ம்ம்ம்ம்… ஐ அண்டர்ஸ்டேண்ட்…” சுகன்யா என்ன சொல்ல வருகிறாள் என புரியாமல் நடராஜன் தன் மனதுக்குள் குழம்ப ஆரம்பித்தார்.

“அதனாலத்தான் எனக்கு இப்ப கொஞ்சம் டயம் வேணும்ன்னு உங்கக்கிட்ட கேக்கிறேன் மாமா…” சுகன்யா மெல்லிய குரலில் மரியாதையுடன் நடராஜனுடன் பேசிய போதிலும், அவள் குரலில் இருந்த விரக்தியையும், சலிப்பையும் நடராஜன் உணர்ந்து கொண்டார்.

“உன் இஷ்டம்மா… இதுக்கு மேல நீ இதைத்தான் செய்யணும்ன்னு, உன்னை நான் வற்புறுத்தமாட்டேன். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். என்னைப் பொறுத்த வரைக்கும் நீ மட்டும்தான் என் வீட்டுக்குள்ள என் மருமகளா நுழைய முடியும்.” நடராஜன் நீண்ட பெருமூச்செறிந்தார்.

“மாமா.. என்னை நீங்க தப்பா நினைக்கக்கூடாது…”

“இல்லேம்மா… நிச்சயமா இல்லே… நீங்க ரெண்டு பேரும் பழையபடி ஒண்ணா சேர்ந்து என் வீட்டுத் தோட்டத்துல நின்னுகிட்டு சிரிக்கறதைப் பாக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. உனக்கு தேவையான அளவுக்கு டயம் எடுத்துக்கோ… ஆனா என் ஆசையை மட்டும் நீ நிராசையா ஆக்கிடாதே..!”

“ம்ம்ம்…”

“ரொம்ப நேரமாயிடுச்சு.. குட் நைட்… சுகன்யா…” சட்டென தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் நடராஜன்.

“குட் நைட் மாமா…” சுகன்யாவும் மெல்ல முணுமுணுத்தாள். அப்போதைக்கு அவள் தன்னை சிறிது ஆசுவாசமாக உணர ஆரம்பித்தாள்.

உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கறதுக்கே, வெக்கமாயிருக்குடா. எங்கேயாவது கண்ணு மறைவா ஒழிஞ்சுத்தொலைடா…’

நடராஜன் கோபத்தில் செல்வாவை நோக்கிக் கூவியதும், ரோஷத்துடன் கையில் கிடைத்த நாலு பேண்டையும், நாலு சட்டையையும் ஒரு தோள் பையில் திணித்துக் கொண்டு, வீட்டு வாசலில் தன் கையை இறுகப்பிடித்து தடுத்து நிறுத்திய தங்கை மீனாவின் பிடியையும் விருட்டென உதறிவிட்டு, தெருக்கோடியை அடைந்த செல்வா அதற்கு மேல் எங்கு போவது என புரியாமல் விழித்தான்.

வயிறு கபகபவென பசியால் எரிந்து கொண்டிருந்தது. சாப்பாடு தயாராக இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகும் என சொல்லிய சுந்தரம் அய்யர் அவனைப்பார்த்து இதமாக சிரித்தார். சூடாக ஒரு காஃபியை வாங்கி குடிக்க ஆரம்பித்ததும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பிக்க, மேற்கொண்டு என்ன செய்வதென நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான் செல்வா.

Updated: May 27, 2021 — 4:24 am

4 Comments

  1. What happened to your old website.

  2. Will you please send me the manuscript of this entire Story by V. P. P. I will pay the cost.

  3. Nice story, very interesting, keep posting. Waiting for next part. ??

    1. I have never come across a very fine and beautiful love story at the near past. I would like to thank the author and also I want to put my request to write such love stories. There are so many sites for sex stories so you please write such love stories. This is my personal request.

Comments are closed.