கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 28 11

சுகன்யாவை எச்சை எலைன்னு, அவளுக்கு எந்தவிதத்துலேயும் சம்பந்தமேயில்லாத உன் பையன் சொல்றானே? நீ மட்டும் என்னடி? உன் கதை அவனுக்கு தெரிஞ்சா அவன் உன்னை என்னன்னு சொல்லுவான்? இதை வாயை விட்டு வெளிய சொல்லாம உன் புருஷன், உனக்கு மட்டும் புரியற மாதிரி சிரிச்சிட்டு வெளியில எழுந்து போயிட்டாரு.

உன் புள்ளை உன் லைப்ல ஓடற
“தனி ட்ராக்கை” பத்தி கேட்டானே அவனுக்கு என்னப் பதில் சொல்லப்போறே? அவள் மனம் அவளைப் பார்த்து நகைத்தது.

ராணியின் மனம் நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தது. உன் புள்ளைக்கு, அவன் வீட்டுக்கு வந்தவுடனே அவன் மூஞ்சி பாத்து சோறு போட்டியே? உன் புருஷனுக்கு இன்னைக்கு சோறு போட்டியா? உன் புருஷன்தானேடி உன் புள்ளையை உனக்கு கொடுத்தான். விதையை வெதைச்சவன் அவன். அவனோட வீரியமான விதையை மறந்துட்டே நீ. அந்த விதையிலேருந்து வந்த செடியைப் புடிச்சிக்கிட்டு ஏன் தொங்கறே?

செடி வலுவான மரமானதுக்கப்புறம்தான் அதுல தொட்டில் கட்டி நீ ஊஞ்சல் ஆடலாம். அந்த மரத்து நிழல்ல நின்னு நீ இளைப்பாறலாம். ஆனா, இப்ப அந்த சின்னச் செடியைச் சுத்தி ஏகத்துக்கு களை மொளைச்சுக்கிடக்கு. செடியோட இலைகளைப் பூச்சி அரிச்சிருக்கு; களையை பிடுங்கிப்போடு. செடியைச் சுத்தி அகலமா பாத்தியை வெட்டி விடு. தயங்கமா பூச்சி அரிச்ச எலையைக் கிள்ளிப்போடு. உன் புருஷன், நல்ல பூச்சி மருந்தா வாங்கி தெளிக்கச் சொல்றான். அவனைப் புரிஞ்சுக்கோ.

உன் புருஷன் வெதைச்ச விதையில மொளைச்ச செடி மேல அவனுக்கு அக்கறை இல்லையா? உன் புருஷன் சொல்றதை கேளு. அவன் ஒரு நல்லத் தோட்டக்காரன். தோட்டக்காரன் சொல்றதை நீ இப்ப கேக்கலன்னா, உன் செடி அழுகிப் போயிடும்.
மரத்து நிழல்லே நிக்கணும்ன்னு நீ ஆசைப்படறியே, ஆனா உன் செடியே அழுகிட்டா, நீ மரத்துக்கு எங்கப் போவே? இந்த வயசுல உன்னால ஒரு புது வெதையை உன் நிலத்துக்குள்ள வாங்கி ஒரு செடியா மாத்த முடியுமா?

ராணீ… உன் புத்திரப் பாசத்தை மனசுக்குள்ள பொதைச்சு வெச்சுக்கோ. உன் மனசை கல்லாக்கிக்கிட்டு, உன் புள்ளைக்கு உருப்படற வழியைச் சொல்லிக்கொடு. அவன் மனசுல இருக்கற தாழ்வு மனப்பாண்மையை வேரோட புடுங்கிப் போடு. உன் தாயும் ஒரு பெண்தான்னு சொல்லு. அவளுக்கும் ஒரு காதல் கதை இருக்கு. காதலிச்சவங்க எல்லாம் எச்சை எலைன்னா, இந்த உலகத்துல சுத்தமான இலையே இல்லேன்னு சொல்லு. பெண்மையை மதிக்க சொல்லிக்கொடு. அவள் மனசை புரிந்து கொள்ள கத்துக்கொடு.

ஒரு பொண்ணு இல்லன்னா என்னா? ஊரு ஒலகத்துல வேற பொண்ணே இல்லையா? உன் புள்ளைக்கும் நல்லா பொண்ணு கிடைப்பா. உன் புருஷன் உன் விஷயம் தெரிந்த பின்னும் உன்னை மதிச்சான். உன் கூட முப்பத்து ரெண்டு வருஷமா வாழறான். உன் புள்ளை உன் புருஷனைப் போல பெண்மையை மதிக்கத் தெரிந்த மனுஷனா முதல்ல மாறணும். அதுக்கு நீதான் பொறுப்பேத்துக்கணும்.

ராணி தெளிவுடன் யோசிக்க ஆரம்பித்தாள். சரி.. சரி… என் புள்ளையை விடு… என் புருஷன் இன்னைக்கு பேசின பேச்சு அவரோட மனசுலேருந்துதான் வந்திருக்குமா? கண்டிப்பா இருக்காது! என் புருஷனைப்பத்தி எனக்குத் தெரியாதா? அவன் மனசு பத்தரை மாத்து தங்கமாச்சே! அவனைத் தனியா விட்டா, தாகத்துக்கு குடிக்கறதுக்கு ஒரு சொம்பு வென்னீர் வெச்சுக்கத் தெரியாது. அவனை நான் விட்டுட்டு போறதா? அது இந்த ஜென்மத்துல இல்லே.

என் புருஷன் ஒரு கொழந்தை. இன்னைக்குத்தான் ஊரெல்லாம் கேட்டரிங்க் சர்வீஸ் வந்துடுச்சி. சோத்துக்கு பஞ்சமில்லே. போன்ல சொன்னா மூணு வேளையும் வீட்டுக்கு கொண்டாந்து குடுத்துட்டுப் போயிடுவான். அவனுக்கு வயித்துப்பசி அடங்கிடும். அதுக்காக என்னை வீட்டை விட்டுப் போன்னு அவன் சொல்றதா? பொண்டாட்டிங்கறவ சோறு பொங்கிப் போடத்தானா?

அடியே ராணி… உன் புருஷனைப் பத்தி உனக்குத் தெரியாதாடி? நீதான் வேணும்ன்னு உன்னைக் கட்டிக்கிட்டானே? அவன் உன் மேல வெச்சிருக்கற ஆசையைப் பத்தி உனக்கு வேற யாராவது சொல்லணுமா? ஒரு செகண்ட் உன் மூஞ்சி சோர்ந்துப் போனா, அவன் துடிக்கற துடிப்பு உனக்குத் தெரியாதா? நீ சோறு தின்னாம அவன் என்னைக்காவது தின்னு இருக்கானா?

ராத்திரிக்கு என்ன பண்ணுவான் அவன்? உன் புருஷனால உன் ஒடம்பு சூடு இல்லாம ஒரு ராத்திரி தனியா தூங்க முடியுமா? அவனுக்கு உடம்பு இன்னும் தளரல! இன்னைக்கும் அவன் ஆடற ஆட்டத்துல நீ அசந்து போய் கிடக்கறே? அவன் போடற ஆட்டத்துக்கு நீ மனசுக்குள்ள இன்னும் ஏங்கிப் போறே? மனசுல உன் மேல இருக்கற ஆசை அவனுக்கு அடங்கலை. அவன் ஒடம்பு பசியைத் தீத்துக்க இந்த வயசுல எங்க போவான்? பொண்ணு ஒடம்புக்கு அவன் எந்தக் கடையில ஆர்டர் குடுப்பான்?

பழசெல்லாம் மொத்தமா மறந்துட்டியா நீ? உனக்கு கல்யாணமாயி, உங்க சாந்தி முகூர்த்தத்தன்னைக்கு, உன்னை ஆசையா கட்டிப்புடிச்சவனை, என்னைத் தொடாதேன்னு சொன்னியே, அவன் உன்னை உன் விருப்பமில்லாம திரும்பவும் தொட்டானா? ரெண்டு வாரம் கழிச்சி, புடவையை அவுத்துட்டு, பாவாடையும், ரவிக்கையுமா, சுவத்தைப் பாத்து தூங்கினவன் முதுகோட, நீ ஒட்டிக்கிட்டப்பத்தானே அவன் உன் மேல கை வெச்சான்? இவனை மாதிரி ஒரு நல்ல புருஷன்கிட்ட கோபப்படறீயே? உனக்கு இது அடுக்குமா?