எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

சொன்ன மும்தாஜ்.. அசோக்கின் பதற்றத்தை தனக்குள் வாங்கியவளாய்.. அவசரமாய் திரும்பி அந்த காரிடாரில் நடக்க ஆரம்பித்தாள்..!! ஓரிரு வினாடிகள் கழித்துதான்.. அசோக் புரிந்துகொண்டு அவளை பின்தொடர ஆரம்பித்தான்..!! நடக்க ஆரம்பித்தவனுக்கு திடீரென ஏதோ ஞாபகம் வர..

“மும்தாஜ்..!!” என்று அழைத்தான்.

“ம்ம்..??” மும்தாஜ் திரும்பி பார்த்தாள்.

“இ..இவ.. இவ பேர் என்ன மும்தாஜ்..??”

அசோக் அந்தமாதிரி ஏக்கமான குரலில் கேட்க.. மும்தாஜ் ஒருகணம் திகைத்துப் போனாள்..!! உள்ளம் நிறைய இவனுக்கு அவள் மீது காதல் இருந்தாலும்.. உயிரையும் அவள் இல்லாத ஏக்கத்தில் விட துணிந்திருந்தாலும்.. அவளது உண்மையான பேர் இவனுக்கு தெரியாது என்கிற நிதர்சனம்.. உடனடியாய் மும்தாஜுக்கு உறைக்க மறந்ததால் வந்த திகைப்பு அது..!! பிறகு அந்த உண்மை உறைத்ததும்.. உதடுகளுக்கு ஒரு உலர்ந்த புன்னகையை கொடுத்தவள்..

“நித்தி..!!!!” என்று உங்களது நீண்டகால கேள்விக்கான பதிலை உச்சரித்தாள்.

இருவரும் பவானியின் பிரத்தியேக அறைக்கு சென்று அவளை சந்தித்தனர்.. விஷயத்தை இருவரும் அவளுக்கு விளக்கி சொல்ல, அவள் மும்தாஜை விட பலமடங்கு ஆச்சரியத்திற்கு உள்ளானாள்..!!

“இவளா..?? இவளா நீ சொன்ன மீரா..?? ஐ கான்ட் பிலீவ் திஸ்..!!! இவளையா இத்தனை நாளா நீ உருகி உருகி லவ் பண்ணிட்டு இருந்த..??” – நம்பமுடியாதவளாய் அசோக்கை திரும்ப திரும்ப கேட்டாள்.

“பாரு மும்தாஜ்.. கடைசில.. இவனை இத்தனைநாளா சுத்தல்ல விட்டது நம்ம நித்திப்பொண்ணு..!!” – மும்தாஜிடம் ஆச்சரியத்தை பகிர்ந்துகொண்டாள்.

பிறகு அசோக்கின் அவசரத் தூண்டுதலால்.. தனது அலுவலகக் கணிணியை இயக்கியவள்.. மீரா (அலையாஸ்) நித்தியின் தொடர்பு விவரங்களை.. வெண்திரையில் வெளிக்கொணர்ந்தாள்..!! அதில் தரப்பட்டிருந்த மொபைல் நம்பருக்கு.. தனது செல்ஃபோனில் இருந்து பவானி டயல் செய்ய.. அசோக் அவளை அவசரமாக தடுத்தான்..!!

“வேணாம்க்கா.. ஃபோன் பண்ண வேணாம்.. அட்ரஸ் இருக்குல.. நேர்லயே போயிறலாம்..!!”

“ஏன்டா..??”

“எவ்வளவுதான் அவ விலகி போனாலும்.. எங்களோட லவ், எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும்னு நான் அவகிட்ட சொன்னேன்..!! அந்த லவ்வுக்கு சக்தி இருந்தா எங்களை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்னு.. அவ பதிலுக்கு சவால் விட்டா..!! இப்போ.. திடீர்னு அவ முன்னாடி போய் நிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குக்கா.. சர்ப்ரைஸா..!!!! அ..அதும் இல்லாம.. அவளோட கான்டாக்ட் டீடெயில்ஸ நான் கண்டுபிடிச்சுட்டேன்னு தெரிஞ்சா.. அவ எங்கயாவது எஸ்கேப் ஆகி ஓடுறதுக்கு கூட சான்ஸ் இருக்கு..!! I don’t want to miss her again..!!” அசோக் சொன்னதை கேட்டு பவானி மெலிதாக புன்னகைத்தாள்.

இரண்டே நிமிடங்களில் அசோக்கும் பவானியும் அங்கிருந்து காரில் கிளம்பினார்கள்.. பவானியுடைய கார்தான் அது..!! அவளே கார் ஓட்டினாள்.. அருகிலிருந்த இருக்கையில் அசோக் அமர்ந்திருந்தான்..!!

பவானி காரை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டே.. மீராவின் குடும்ப சூழ்நிலை பற்றியும்.. தற்கொலைக்கு அவள் தள்ளப்பட்ட கதையினையும்.. பிறகு தங்களது மனோதத்துவ சிகிச்சையால் அவள் மனதைரியம் பெற்றதையும்.. அசோக்கிற்கு சுருக்கமாக எடுத்துரைத்தாள்..!! எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்ட அசோக்கிற்கு.. இதயத்தில் ஒரு இனம்புரியாத வலி..!! மீராவுக்கு வேதனையான ஒரு பின்புலம் இருக்கும் என்று, ஏற்கனவே அவன் கணித்திருந்தான்.. ஆனால் அந்த பின்புலத்தில் வேதனை தவிர வேறேதும் இருக்காது என்று அவன் நினைத்தேயிரவில்லை..!! காதலி அனுபவித்த கடுந்துயரினை கேட்க கேட்க.. கண்களில் அவனுக்கு நீர் முட்டிக்கொண்டு வந்தது.. கஷ்டப்பட்டு அதை கட்டுப்படுத்திக் கொண்டான்..!!

ஆர்காட் ரோட்டில் அந்தக்கார் விரைந்துகொண்டிருந்த அதே சமயத்தில்.. சிந்தாதிரிப்பேட்டையில்.. மீரா தனது வீட்டு ஹாலின் மையத்தில் நின்றிருந்தாள்..!! துடைத்து எடுக்கப்பட்டது போல வீடு வெறுமையாக இருந்தது.. வீட்டு சுவர்களையே வெறித்துக் கொண்டிருந்த மீராவுடைய பார்வையிலும் ஒரு வெறுமை..!! அவள் பிறந்து வளர்ந்த வீடு.. தவழ்ந்து ஓடிய வீடு.. தாயுருவில் நீலப்ரபா என்ற தெய்வம் வாழ்ந்த வீடு.. மனம் விட்டு இருவரும் அழுவதற்கு, மறைவாக நான்கு சுவர்களைத் தந்த வீடு..!! இனி இந்த வீடு அவளுடைய வாழ்வில் இல்லை..!!

மீராவின் முகத்தில் தெரிந்த இறுக்கத்திற்கு காரணம்.. பிறந்த வீட்டை பிரிந்து செல்கிற சோகம் மட்டும் அல்ல.. அசோக்கின் நினைவுகள் அவளுக்கு அளித்த வேதனையும்தான்..!! ஏதாவது ஒரு அதிசயம் நடந்து.. அவனுடன் இணைந்துவிட மாட்டோமா என்று.. ஐந்து நாட்களாக அவளுமே ஏங்கியிருந்தாள்..!! இந்த நொடி வரை எதுவும் நடக்கவில்லை.. இனி நடப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்றே அவளது மனம் அவளுக்கு உரைத்தது..!! அசோக் இனி அவளது வாழ்வில் இல்லை என்கிற நினைவுதான்.. அவளுக்கு அதிகப்படியான வேதனையை அளிப்பதாக இருந்தது..!!

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.