எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

“நோ நோ..!! கல்யாணம் ஆகுற வரை.. ஒரு நாளைக்கு ஒரு அறைதான்.. இன்னைக்கு கோட்டா ஓவர்..!!” மீரா கறாராக சொல்ல,

“ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்..!!” அசோக் சிறுபிள்ளையாக சிணுங்கினான்.

அவன் அவ்வாறு சிணுங்கிக் கொண்டிருந்தபோதே..

“இன்று மாலை, சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மர்ம நபர் ஒருவர்…”

அறைக்குள் இருந்த டிவியில் ந்யூஸ் வாசிக்கப்பட… இருவரும் கவனம் கலைந்து, டிவியை திரும்பி பார்த்தார்கள்..!! அசோக்தான் கேஷுவலான குரலில் ஆரம்பித்தான்..!!

“இவங்களுக்கு இதே வேலையா போச்சுல மீரா.. யாராவது ஃபோன் பண்ணி எதையாவது சொன்னா.. அதை அப்படியே நம்பிடவேண்டியது.. ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டியது..!! பாரு.. எல்லாரையும் என்ன பாடு படுத்திருக்காங்கன்னு..!!”

“அதுக்காக.. அந்த காலை அப்டியே கண்டுக்காம விட்ருக்கனும்னு சொல்றியா..?? ஏற்கனவே.. சென்னைல டெரரிஸ்ட் அட்டாக் பண்ண ப்ளான் பண்ணிருக்காங்கன்னு.. இண்டெலிஜண்ட் ரிப்போர்ட் வேற வந்திருக்கு..!! இப்படிப்பட்ட நேரத்துல இந்த மாதிரி ஃபோன் கால்லாம் எப்படி கேஷுவலா எடுத்துக்குறது..?? ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி பண்ணினது சரிதான்..!!”

இயல்பான குரலில் சொல்லிவிட்டு மீரா சாதம் எடுத்து ஸ்பூனில் நீட்ட.. அசோக் வாயை திறக்காமல் இவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தான்.. அவனுடைய உதடுகளில் வேறு ஒரு குறும்புப் புன்னகை வழிந்தது..!! அவனது செய்கைகளின் அர்த்தம்.. ஆரம்பத்தில் மீராவுக்கு புரியவில்லை.. அசோக்கையே குழப்பமாக பார்த்தாள்..!! அப்புறம் அதன் அர்த்தம் புரிந்ததும்.. அவளுடைய முகத்தில் பட்டென ஒரு திகைப்பு.. அவளது உதடுகள் ‘ஓ’வென்று குவிந்துகொண்டன..!!

“ஏய்ய்ய்.. ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்கனு கால் பண்ணது நீதானா..??”

“ஹேய்ய்ய்.. சத்தம் போடாத..!! போலீஸ்க்கு தெரிஞ்சதுன்னா.. அப்புறம் என்னை புடிச்சுட்டு போய்டுவாங்க..!!”

“அடப்பாவி..!!! ஏண்டா அப்படி பண்ணின..??” மீரா இப்போது குரலை தாழ்த்திக் கொண்டாள்.

“பின்ன என்ன பண்றது.. நீ பாட்டுக்கு பத்து நிமிஷத்துல ஃப்ளைட்டுன்னு போனை கட் பண்ணிட்ட..!!”

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.